tag:blogger.com,1999:blog-11139995293258184562024-03-05T03:23:07.190-08:00இயல் இசை நாடகம் சமூகம்Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-36899357768529429502020-04-20T08:00:00.000-07:002020-04-20T08:00:07.394-07:00காடோடி - நக்கீரன் ( அடையாளம் பதிப்பகம்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காடோடி - நக்கீரன் (அடையாளம் பதிப்பகம்)<br />
<br />
இயற்கையை முன்னின்று அழிக்கும் மனிதர்கள் அதில் முரணாக சிலர் இயற்கையை வாழ்வாதாரமாக நினைத்து உருகி கொண்டே அழித்து கொண்டு இருக்கும் இயலாதவர்கள் , இன்றைக்கும் இயற்கையின் பிள்ளைகளாக வரும் தொல்குடிகள், மரங்களை டாலராக பார்க்கும் முதலாளிகள், இது வரை அறிந்திடாத பலப்பல உயிரினங்கள், விலங்குகள்,செடிகள், மரங்கள், கனிகள் என்று பலவற்றை ஆவணப்படுத்திய நாவலே காடோடி. முழுக்க முழுக்க இயற்கை அன்னையின் இருப்பிடமான காடுகள் விலங்குகள் பறவைகள் பூச்சிகள் ஓடை நதி அருவி என்று இவைகள் மேல் அளப்பறியா அன்பை செலுத்தி ரசித்து வணங்கி அவைகளை போற்றி பாதுகாக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்துகிறது.<br />
<br />
<br />
<br />
மலேசியா இந்தோனேஷிய காடுகளை முன்னின்று அழித்த ( வெறும் அழித்த என்று கூற கூட முடியவில்லை பாதம் படும் இடங்கள் முழுக்க இழை தழைகளாகவும் காய் கனிகளாகவும் அன்னார்ந்து மேலே பார்த்தால் வானம் கூட அங்கங்கே மரம் கிளைகள் வழி விட்டு மின்மினிப்பூச்சின் ஒளி போல தெரிந்தது போகி மொத்த காடும் பாலைவனம் போல ஆக்கபட்டால் யோசித்து பாருங்கள்) நிறுவனங்களை மனிதர்களை காட்டிக் கொடுப்பது போல சாட்சியாக ஆசிரியரே வாக்குமூலம் அளிக்கிறார் நாவலாக.<br />
<br />
காடு, அரிய வகை உயிரினங்கள் என்று இயற்கையின் மேல் அளவில்லா காதல் கொண்டவர் அதை அழிக்கும் வேலைக்கு செல்கிறார் அப்போதாவது அந்த இடங்களை காண முடியும் என்ற ஆசையில். ஆனால் இறுதியில் அவரின் மனநிலை என்ன கொடுத்த வெகுமதி என்ன என்பதை அவசியம் நாவலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். அப்படி அங்கு சென்று உடன் இருக்கும் நண்பர்கள், ஊழியர்கள் , வேலையாட்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலாச்சாரம் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூட குடும்பமாக முகாமில் இருக்கின்றனர். மலேசிய இந்தோனேஷிய பூர்வகுடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்து ஆசிரியர் கூறுகிறார். பல உயிரினங்களை அவர் பார்ப்பதாக நாம் வாசிக்கும் போதெல்லாம் நாமும் பார்க்க வேண்டுமே என்று ஏங்க வைத்து விடுகிறார். இன்னும் சொல்ல போனால் அவர் குறிப்பிட்ட பல உயிரினங்களை அப்பொழுது தான் முதல் முறை வாசிக்கிறேன். அவர் குறிப்பிட்டு இருக்கும் உயிரினங்களை எல்லாம் தனி பதிவாக போட வேண்டும்.<br />
<br />
பல இடங்களில் வாசிக்கும் போது விஸ்வலாக உணர முடிந்தது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் மிகையாக நினைத்தாலும் உண்மையாக எனக்கு தோன்றியது கதையில் வரும் பிலியவ், ஒமர், ஆங், பார்க், அன்னா, ஜோஸ் என்று பலரை அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப உருவம் கூட கொடுக்க முடிந்தது பாதி நாவலை கடக்கும் போதே அந்த உருவங்கள் பேசுவது போலவே வாசித்தேன். அதிலும் பிலியவ் என்ற தொல்குடி பெரியவரின் செய்கைகள், பேச்சு , ஏக்கம் , விரகத்தி என்ற அத்தனையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.<br />
<br />
கதையில் சிலாங்கன் பத்து என்ற மூதாதை மரம் வரும் அதை பற்றிய விவரனைகள் அதற்காக பிலியவ் அவர்கள் ஏங்குவது மற்ற ஒமரும் ஆசிரியரும் இயலாமையில் தவிப்பது என்று மிக உணர்ச்சிபூர்வமாக அமைந்திருக்கும் அந்த பகுதி. அந்த மரம் அழிக்கபட்டதை விவரிக்கும் இடமே எவரையும் கலங்க வைத்து விடும்.<br />
<br />
ஜோஸ் என்ற நண்பனுகாக அவனின் பூர்வ குடியினர் தங்கி இருக்கும் இடத்துக்கு செல்லும் ஆசிரியர் அவர்களின் கலாச்சாரங்களை பற்றி குறிப்பிடுவது வேட்டை முறைகள் பண்பாடு என்று கூறுவதை வாசிக்கும் போது நம்முடைய பண்டைய கால வழக்கங்கள் மனதில் வந்து உறுத்தியது. அந்த இடத்தில் வரும் மென்மையான காதல் பின்னர் வரும் பிரிவு என்று மனித உறவுகளை உணர்வு பூர்வமாக வாசித்த நிறைவை தரும் அந்த பகுதி.<br />
<br />
ஒமர் எழுதியதாக வரும் கடிதம் கிட்டத்தட்ட ஆசிரியரை மட்டுமல்ல நம்மையும் உறையவைத்துவிடும் அந்தளவுக்கு இயலாமையின் உச்சமாக இருந்த மனதின் எழுத்தாகவே பதியபட்டுள்ளது. ஏனென்றால் தந்தை மகன் போன்று இருந்த உறவு என்னவானது என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.<br />
<br />
நாங்கள் கல்லூரியில் நான்காண்டுகள் முடிந்து இறுதி நாள் தங்கி இருந்த வீட்டை விட்டு கிளம்பும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிய எண்ண ஒட்டங்கள், பின்னர் நான் கோவையில் வேலை பணி புரிந்த போது அந்த ப்ராஜெக்ட் முடிவுற்று பின்னர் ஒவ்வொருவரும் கிளம்பும் போது வந்த உணர்ச்சிகரமான தருணங்களை இந்நாவலில் முழு வேலைகளும் அழிப்பும் முடிந்துவிட்டு ஒவ்வொருவராக சில குழுக்களாக என்று குடும்பமாக எந்தவித பிரிவினைகளன்றி வாழ்ந்துவந்தவர்கள் பிரிந்து போவதை ஆசிரியர் பதிவு செய்து இருப்பது ஆகசிறந்தது மனதை கொள்ளை கொண்டது அந்த பகுதி.<br />
<br />
இது போல நாவல் முழுக்கவும் மெய் மறக்க செய்திடும். அவரின் உண்மையான வலி வேதனைகளை வாசகனுக்கு கடத்தியதில் இந்நாவல் மிக பெரிய வெற்றி பெறுகிறது. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சில வகைகள் தான் கலங்க செய்யும் அவைகளுக்கு பிறகு வாசிக்கும் போது கண் கலங்கியது ஆசிரியர் நக்கீரன் அவர்களின் காடோடி நாவல் தான் . அதிலிருந்து மீள முயற்சித்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் என்னளவில் வாசிப்பால் என்னை மாற்றம் தேடல் என்று மனம் வேறொரு நிலை கொண்டு சேர்க்க போகின்ற மிக முக்கியமான நாவல்.<br />
<br />
பிலியாவ் போல தொல்குடியாகவே பிறந்திருக்கலாமோ என்று ஏங்குகிறேன்.<br />
<br />
கான் நிலங்களை கண்டு ஆசை தீர சுற்ற வேண்டும் போல தோன்றுகிறது.<br />
<br />
காடோடி- வன அழிப்பை ஆவணப்படுத்திய உன்னதமான படைப்பு.<br />
<br />
Lakshmi Saravanakumar அண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்<br />
<br />
சென்னையில் புத்தகங்கள் வாங்கிய போது சில புத்தகங்களை கழிக்க வேண்டிய நிலை அப்போது இந்த நாவலை அப்புறம் வாங்கிக்கலாம்ணா என்று சொன்ன போது உரிமையாக இதை கண்டிப்பா வாங்கு நல்ல நாவல்னு பரிந்துரைத்தது லக்ஷ்மி அண்ணன் தான்.</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-38116251506472931922015-08-30T01:06:00.000-07:002015-08-30T01:06:18.978-07:00வாசிப்பினால் பெற்றிடும் அனுபவங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திக்கின்றோம் வேறு வழியின்றி இன்றோடு இந்த தளம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியதால் ஏதாவது உருப்படியாக பதிவு செய்யலாம் என்று கடந்த மூன்று மாதங்களாக நான் வாசித்த புத்தகங்களை பற்றிய என் கருத்தக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்......<br />
<br />
ஆதவனின் காகித மலர்கள் -<br />
<br />
ஆதவனின் எழுத்தை படிக்க நிச்சயம் மன தைரியம் வேண்டும் எப்படியென்றால் அவர் கூறும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள் அனைத்திலும் வாசிப்போரின் எண்ணங்களை பிம்பங்களாக கூறுவது போலவே அமைந்திருக்கும். இதை ஏற்று கொள்ள நிச்சயம் மன தைரியம் இருந்தாலொழிய வாசிக்க இயலாது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtFk619fHET_iQvdHfdKxW1yghSb31Ze4C96frtsxGNRZ6ppMw4ni8GTmqOQ1IftbdUDlDsVf4KzZkTxn71Mbq5psKzxD9NBC85CBTOWBCS86c3Sky6JejnOTky_DhunbSng7ZmqxoIzo/s1600/kkm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtFk619fHET_iQvdHfdKxW1yghSb31Ze4C96frtsxGNRZ6ppMw4ni8GTmqOQ1IftbdUDlDsVf4KzZkTxn71Mbq5psKzxD9NBC85CBTOWBCS86c3Sky6JejnOTky_DhunbSng7ZmqxoIzo/s400/kkm.jpg" width="400" /></a></div>
<br />
<br />
மனிதர்களின் எண்ணங்களை அப்பட்டமாக தன்னுடைய எழுத்தின் மூலம் எடுத்து வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்காக அணியும் வேஷங்களை வெளிப்படையாக கூறுகிறார் அதில் அம்மா, அப்பா, தம்பி , தங்கை என்று பாரபட்சமெல்லாமில்லை.<br />
<br />
பசுபதி ,பாக்கியம் மிஸ்ஸஸ் பசுபதி அவர்களின் மகன்கள் விசுவம் , செல்லப்பா , பத்ரி, விசுவதின் மனைவி பத்மினி , செல்லப்பாவின் நண்பன் ரமணி , சங்கர் , பத்ரியின் நண்பன் கணேசன், தோழி தாரா. கணேசனின் அப்பா ஐயர், அம்மா , தங்கை, பத்திரிக்கையாளர் நரசிம்மன்,விசுவத்தின் நண்பன் உண்ணி அவன் மனைவி. பத்மினியின் வீட்டார்கள் அப்பா மற்றும் அவள் அண்ணன். பசுபதியின் மகன்களின் நினைவலைகளில் அடிக்கடி வரும் அவர்களின் தாத்தா. உணவுத்துறை மந்திரி, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என்று இவர்கள் தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் முறையே விசுவம் , செல்லப்பாவின் பார்வைகளில் அதிகம் சென்றாலும் அனைவருமின்றி கதை முழுமை அடைந்திருக்காது.<br />
<br />
நாவல் முழுக்க டில்லியை சுற்றி தான் கிட்டத்தட்ட டில்லியை சுற்றி பார்க்க இந்நாவலை க்கைடாக கூட உபயோகிக்கலாம் போல. அங்கும் வசிக்கும் மூன்று வர்க்க குடும்பங்களின் எண்ணவோட்டங்களே கதை. ஒவ்வொருவர்களுடைய குணாதிசியங்களை அப்பட்டமாக பதிவு செய்துள்ளார். குடும்ப உறவுகள், தொழில்துறை போட்டி, மாணவ அரசியல், பொது அரசியல், காதல் , நட்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, துரோகம், காமத்தின் வேட்கை , மனிதர்களின் பாகுபாடுகள் , என்று இவைகளை பற்றி அதிகம் விவரிக்கின்றது கதை.<br />
<br />
இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே தனித்துவம் வாய்ந்தவைகள் முதன்மை பாத்திரமான விசுவம் அமெரிக்காவில் இருந்து பத்மினியுடன் ஆய்வுக்காக இந்தியா வருவதில் தொடங்குகிறது நாவல். விசுவம் - தன்னிடம் யார் உரையாடினாலும் பழகினாலும் அவன் மனம் என்னவோ அவர்களின் அந்நேரத்தில் அவர்கள் அணியும் வேஷங்களையே ஆராயும் அது அம்மா , அப்பா , மனைவி என்று யாராகினும். அது போல அல்லாமல் தான் தனித்துவமானவன் என்றே எண்ணிக்கொண்டு இருப்பவன் அதன் வழியாக தன்னை தானே யார் என்ற கேள்விக்கு விடைத்தேடி கொண்டிருப்பவன். நாவலில் எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் விசுவம் தான். அவனின் எண்ணங்கள் பெரும்பாலும் என்னைப்போல பலருக்கு ஒற்றுப்போகும் ஆனால் அதை ஏற்க உங்கள் மனதில் தைரியம் வேண்டும். விசுவம்- பத்மினியிடையே வரும் உரையாடல்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அதிலும் இருவரும் மனமிட்டு தங்களுக்குள்ளே இருக்கும் கேள்விகளுக்கு விடை தேட ஒருவருக்கொருவர் விவாவதம் செய்யும் இடங்கள் வாசிக்கும் போதே படபடப்பாகும்.<br />
<br />
அடுத்து என்னை மிக கவர்ந்தது செல்லப்பா கல்லூரி முடித்தும் இன்னும் டிகிரி வாங்காமல் அரியர் க்ளியர் பண்ண முயற்சித்து கொண்டு இருப்பான். இவனும் யாருடன் பழகினாலும் அவர்களை பற்றிய அந்நேர கோபங்கங்களை மனதினுள் போட்டு தன்னைத்தானே கோபடுத்திக்கொள்வான் ஆனால் வெளியே சகஜமாக உரையாடுவான். இயற்கையின் மேல் தீராத காதல் கொண்டவன் அதனாலே பெண்களின் மீது பேரார்வம் கொள்வான் ஆனால் அவனுக்கு எந்தவொரு பெண்ணின் அரவனைப்பும் கிடைத்தபாடு இருக்காது அவனின் அம்மாவின் செய்கையில் கூட இவனாக குற்றம் கண்டுபிடித்து தனக்கு தானே திட்டிக்கொள்வான். தீராத காம வேட்கையில் தவிப்பவனுக்கு வடிகாலே நீண்ட நேர பேருந்து பயணங்களில் கிடைக்கும் பெண் வாசம் தான் பின்னார் அதற்காவும் தனக்கு தானே வேதனையும் அடைவான் இப்படியாக தன்னிலை எதுவென்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தவனுக்கு நாவலின் முடிவில் மிக நன்றாக அவனுக்கு ஏற்றவையாக முடித்திருப்பார் ஆதாவன்.<br />
<br />
கணேசன் பத்ரியின் கல்லூரித் தோழன் நடுத்தர வர்க்கத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு செல்ல துடித்துக்கொண்டு இருக்கும் மாணவன். தன் வீட்டாரையே எந்நேரமும் பழித்து கொண்டு தனக்குத்தானே வெறுத்துக்கொள்வான். பத்ரியிடம் கூட வெளிநட்பில் சகஜமாக இருந்தாலும் உள்ளுக்குளே வஞ்சம் தகந்து கொண்டு தான் இருக்கும் அதுவும் நாவலின் இறுதியில் கச்சிதமாக பத்ரியை பெரும் போராட்டத்தில் கோர்த்துவிடுவான் தன் சாமர்த்தியத்தால். இவன் எதிர்பார்த்தது போல நரசிம்மன் வழியாக தனக்கான அடையாளத்தை பெற்று கொண்டு இருப்பது போல இவனின் முடிவு இருக்கும்.<br />
<br />
பசுபதி ஒவ்வொருவருக்காவும் அவர்களுக்கான வேஷம் அணியும் நடிகராகவே இருப்பார். அதன் பாதிப்பை இறுதியில் உணர்ந்து கலங்கவும் செய்வார். தன் தொழிநிமிர்த்ததில் தானாக செயல்பட முடியாமல் மற்றவர்களுக்காக மற்றவர்களாலேயே அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவராகவே இருப்பதாலே மிகவும் வருத்தப்படுவார். அப்படி இருந்தமையால் தான் தன்னுடைய நிலை இன்று இப்படி இருக்கின்றது என்பதையும் நினைத்து பார்க்கும் சாதாரண எண்ணவோட்டங்கள் கொண்ட சராசரி மனித பிம்பங்களை கொண்ட பாத்திரமாக இருப்பார்.<br />
<br />
பாக்கியம் - பத்மினி , பத்மினி நவநாகரீகமான வாழ்க்கைமுறையால் மிக கேஸ்வலாக எல்லோரிடமும் பழகுபவள் அவளை பார்த்து பாக்கியமும் அவ்வாறு மாற துடிப்பவள் ஆயினும் அவளும் அப்படி தன் கணவரின் நட்பு வட்டங்களை அரவணைத்து பல பார்ட்டிகளுக்கு சென்று இடையில் நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும். தன் மருமகளின் நடவெடிக்கைகளை பார்த்து தன் மேல் மோகம் கொண்டவளாய் மாற துடிப்பவள் அவ்வாறே மாறியும் விடுவாள். அவள் மேல் கொண்ட பொறாமையுணர்வை மறைக்க எண்ணுவாள் அவளில்லாத போது அவள் எதிரே வந்துவிட்டாள் அதை மறைக்க நினைத்ததை மறந்து விடுவாள். குடும்பத்தில் எல்லோரையும் எப்படி இவள் ஒரேசேர திருப்த்தி படுத்த நினைக்கிறாள் என்று தன் அம்மா மீது விசுவம் ஆச்சரியம் கொள்வான் அவ்வாச்சிரியம் வாசிக்கும் நமக்கும் ஏற்படும். நவநாகரீகமான வாழ்கையின் உச்சமாய் இவள் எடுக்கும் ஓர் முடிவால் தான் நாவலின் முடிவாக இறுதி வாக்கியம் இருக்கும்.<br />
<br />
பத்திரிக்கையாளர் நரசிம்மன் இளையோர்களின் பேச்சை நன்கு கவனிப்பவர் அவர்களின் பேச்சிற்கு மதிப்பளிப்பவர். தாரா, கணேசனின் கட்டுரைகளை பிரசுரித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். அரசியல் சம்பாஷனைகளை விவாதித்து வாசிக்கும் நம்மையும் ஊகிக்க வைக்கும். கல்லூரி மாணவ அரசியல், பொது அரசியல் எல்லாம் இன்றும் விவாதிக்க வேண்டிய வகையில் விவரித்து இருப்பார் ஆசிரியர்.<br />
<br />
அதிலும் நாவல் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோ ஒரு கதாபாத்திரங்களின் பார்வையில் தான் சென்றது ஆனால் இறுதி இரண்டு அத்தியாயங்கள் மூன்று வரிகளுக்கு மாறி மாறி பலரின் பார்வையில் எளிதாக புரியும்படி அமைத்தது தான் ஆகச்சிறப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. பாக்கியம் நாடகத்தில் நடிப்பாள், செல்லப்பா- தாரா அங்கே காண இருப்பார்கள், நரசிம்மன்- கணேசன் உரையாடி கொண்டு இருப்பார்கள், விசுவம்-உண்ணி அவன் மனைவி காரில் பேசிக்கொண்டு வருவார்கள்,பசுபதி மந்திரியை வரவேற்று உரையாற்றுவார் இத்தனை சம்பவங்களையும் எவருக்கும் எளிதாக புரிவது போல ஒரு கேள்வி பதிலை இரண்டு சம்பவங்களோடு கோர்த்து புதிய நான்-லீனியர் வகையில் அமர்களபடுத்திருப்பார் ஆதவன்.<br />
<br />
ஆதவன் அவர்களின் எழுத்தில் அடிக்கடி இதை காணலாம். "உதட்டை பிதுக்கினான் (பிதுக்கிக்கொண்டான்)" "தோள்களை குளுக்கினான்(குளுக்கிக் கொண்டான்)" பெண்களிடம் போலி காதலை வெளிகாட்டுமிடத்தில் அவனை நாயாக உருவபடுத்தி அவளின் சிரிப்பை ரொட்டியாக கூறுவார்( அவன் பேச்சிற்கு மீண்டுமொரு ரொட்டி துண்டு கிடைத்தது). இப்படி பல வாக்கியங்கள் தனித்துவமாக இருக்கும் அது வாசிக்கும் போது நமக்கும் அதை யூகித்து ரசிக்க வைக்கும். மனிதர்களின் உள்மனதை நம்முடைய உள் எண்ணங்களை வாசிப்பின் வடிவில் தெரிந்து கொள்ள மிக சரியான தேர்வு ஆதவனின் படைப்புகள். அதில் இந்த காகித மலர்களும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றது. இணையதளத்தில் காகித மலர்களின் விரிவான நிறைய விமர்சனங்கள் இருக்கின்றது அதையும் வாசித்து பாருங்கள். நாவலையும் வாசியுங்கள் உங்களை நீங்கள் யாரென்று அறிந்து கொள்ள உதவும்.<br />
<br />
<div>
***************************</div>
<div>
<br /></div>
<div>
<div>
வாடிவாசல்- சி.சு செல்லப்பா </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLu2w5O1-hWtUrvSSc7_dQqNK56hW4dNHzjSHiheTQ3tfPyC_vb2BFUVjXcTUBzw_XKEPU8LWL24Cb9XOLg9G3zYADYto1nMrpp7fCgYIc_rDE-rfXNl6nj-GpmBZfDww3ePoert8xOaM/s1600/vadi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLu2w5O1-hWtUrvSSc7_dQqNK56hW4dNHzjSHiheTQ3tfPyC_vb2BFUVjXcTUBzw_XKEPU8LWL24Cb9XOLg9G3zYADYto1nMrpp7fCgYIc_rDE-rfXNl6nj-GpmBZfDww3ePoert8xOaM/s400/vadi.jpg" width="257" /></a></div>
<div>
<br /></div>
<div>
இன்னும் பத்து வருஷம் போனா ஏன் இப்ப கூட பல பேருக்கு வாடிவாசல்னா ஏதோவொரு ஊருனு தான் நினைப்பாங்க இல்ல நினைச்சிட்டு இருப்பாங்க. தமிழர்களின் கலாச்சாரத்தை வீர பெருமைகளை ஆவணப்படுத்தியது போக அழிந்து கொண்டு இருப்பது ஏராளம் அதில் கடந்த சில வருடங்களாக அழிவின் இறுதிகட்டத்தில் ஜல்லிக்கட்டு இருக்கின்றது.</div>
<div>
<br /></div>
<div>
1959ல் எழுதப்பட்டது இல்லை இல்லை ஆவணபடுத்தபட்டது ஆம் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கிலேயே முழு கதையும் எழுதப்பட்டுள்ளது. காலையில் தொடங்கும் ஜல்லிக்கட்டு மாலை முடிவதோடு கதையும் முடிந்துவிடுகிறாது. ஆனால் இவைகள் வாசிக்கும் போது தரும் பரவசம் சிலிர்க்க வைத்துவிடும் எவரையும்.</div>
<div>
<br /></div>
<div>
பிச்சு, மருதன்,கிழவன்,ஜமீன்தார்,முருகன் எல்லாத்துக்கும் மேல காரி இவர்கள் தான் நாவல் முழுக்க. விருமாண்டி படத்தில் வரும் முதல் ஜல்லிக்கட்டு காட்சிகளில் இக்கதையின் பாதிப்பு ஏகபோகமாய் இருக்கும். கிழவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் எல்லாவூரிலும் அவர் போன்றவர் நிச்சயம் இருப்பார்கள் எதேனும் விளையாட்டில் பங்கெடுக்காமல் ஆனால் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்தெடுப்பது அப்படி தான் இக்கதையிலும் இவர் உதவுவார்.கிழக்கத்தியன் என்ற ஏளன பேச்சுக்களை காதில் வாங்காமல் வந்த வேலையை முடிக்க வேண்டுமென்ற குறியோடு இருக்கும் பிச்சு தான் கதாநாயகன்.</div>
<div>
<br /></div>
<div>
திரைப்படமாக எடுக்க அட்டகாசமான கதைகளமிது ஏன் யாரும் எடுக்கவில்லையென்று புரியவில்லை. இந்த கதைக்கு திரைக்கதை எழுதினால் கூட மிக அருமையாக இருக்கும். வாசிக்கும் போதே காட்சிகளாக மனத்திரையில் விரிவதாக இருப்பது தான் இக்கதையின் ஆகச்சிறப்பு. அதே போல மாட்டை அடக்கினான் புடித்தான் மாடு தழுவியது என்றெல்லாம் இல்லாமல் காட்சியாக காணும் போது என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதையெல்லாம் எழுத்தில் கொண்டு வந்து விட்டார். </div>
<div>
<br /></div>
<div>
ஜெட் ஸ்பீட் படம்னு சொல்லுவோம்ல அதே போல ஜெட் ஸ்பீட் கதை. சாதாரண பழிவாங்கல் கதை தான் அதை அட்டகாசமாக சொல்லி இருக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
இதை படித்தவுடன் ஒரு ஆசை இக்கதையை தற்கால எந்த இயக்குனர் எடுத்தால் சிறப்பாக இருக்குமென்று. அடுத்தகனமே தோன்றியது வெற்றிமாறன் தான். அந்த கிழவன் கதாபாத்திரத்திற்கு ராதாரவி அட்டகாசமாக பொருந்துவார். </div>
<div>
<br /></div>
<div>
காலச்சுவடு பதிப்பகம்.</div>
</div>
<div>
*********************</div>
<div>
<br /></div>
<div>
<div>
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகமது பஷீர்</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDjSZjcP4_PtHK1HD8t_TdDKobDAKf2JJz-FnLZPdzkCg9ws2KCfTZ8um96ZFEOtbS-EXB6ioDejzDEYbjJGq8_xdqViOVHXl8xjCZFdhj1fdhjkimowoR2VdSnPj2RGqmlELjb5hfu3c/s1600/enkauppapavukoruaanaiirunthadu_thumb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDjSZjcP4_PtHK1HD8t_TdDKobDAKf2JJz-FnLZPdzkCg9ws2KCfTZ8um96ZFEOtbS-EXB6ioDejzDEYbjJGq8_xdqViOVHXl8xjCZFdhj1fdhjkimowoR2VdSnPj2RGqmlELjb5hfu3c/s400/enkauppapavukoruaanaiirunthadu_thumb.jpg" width="260" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இஸ்லாமிய சமூகத்தினரின் மூட நம்பிகையோ ??? தவிர்க்க வேண்டிய குடும்ப வழக்கங்களையோ (பெரும்பாலான மேட்டுக்குடியினர்களுக்கும் பொருந்தும்) முந்தைய தலைமுறையினரின் போலி பெருமைகளை பேசி திரிவோரை மிகச்சாதரணமாக அழுத்தமாக சாடியுள்ளார் பஷீர்.</div>
<div>
<br /></div>
<div>
அதிலும் எல்லாமதங்களிலும் இருக்கும் பிரசங்களை போல முஸ்லீம் மதங்களிலும் இருக்கும் பிரசங்களை பாரபட்சமின்றி இரவு நேர பிரசங்கள் பிரசங்கள் என்று எள்ளி நகையாடியுள்ளார்.</div>
<div>
<br /></div>
<div>
குஞ்ஞூத்தம்மா நாவலின் பிரதான பாத்திரம் அவளுடைய மழலையான மனம் , அப்பாவித்தனமான நிலை ,அவளின் இயலாமை என்று அவளுக்காக நம்மையும் இரக்கப்பட வைக்கும்.</div>
<div>
<br /></div>
<div>
பஷீர் அவர்களின் கதைகளை வாசிக்கும் போது அதில் வரும் வீடு, செடி, ஊர், மக்கள், மரம், ஆற்றங்கரை, பூ, ஆடு , மாடு , கோழி என்று அத்தனையும் நம்மை சுற்றி இருப்பது போன்ற உணர்வை தரும் அதே போல தான் இதிலும் என்னருகில் நடந்த கதையை கண்டவுணர்வே கிடைத்தது.</div>
<div>
<br /></div>
<div>
பால்ய கால சகி , மதில்கள் தந்த உணர்வால் இதில் இறுதி அத்தியாயங்களை வாசிக்கும் போது படபடத்து எங்கே இப்படி ஆகிடுமோ இல்ல என்னவாகுமோ என்ற பரிதவிப்பு தான் இந்த நாவலில் எனக்கு மிக பிடித்தது. 112 பக்கங்களே கொண்ட குறுநாவல் ஒரே வாசிப்பில் வாசித்துவிடலாம். வாசிக்காதவர்கள் அவசியம் வாசித்துவிடுங்கள்.</div>
<div>
<br /></div>
<div>
காலச்சுவடு பதிப்பகம்.</div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
*******************</div>
<div>
<br /></div>
<div>
<div>
கானகன் - என்னுடைய வாசிப்புகள் எப்பொழுதுமே நான் தேடி போவது அல்ல சாருவை தவிர ஏனென்றால் நண்பர்களிடமோ அல்லது சாரு ரெஃபர் செய்வதை தான் விரும்பி வாசிப்பேன். அப்படி வாசித்தது தான் கானகன் நாவலும்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSu2YyG85m9Md-k0OcKB3sgJUSwyFR0WsJjEfTd2gynFdhQ7RJBj2kdOVerBihI-Q60O6QtzwACXLwrH4ub4b0P58cMNvHeEOvoqk7SN3oaKMGdG_Oc63-fimZAHIGZJjuaNVpyLc9TCQ/s1600/kaanagan-400x400-imadznubxzcmzcwx.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSu2YyG85m9Md-k0OcKB3sgJUSwyFR0WsJjEfTd2gynFdhQ7RJBj2kdOVerBihI-Q60O6QtzwACXLwrH4ub4b0P58cMNvHeEOvoqk7SN3oaKMGdG_Oc63-fimZAHIGZJjuaNVpyLc9TCQ/s400/kaanagan-400x400-imadznubxzcmzcwx.jpeg" width="246" /></a></div>
<div>
<br /></div>
<div>
எப்பொழுதுமே சாருவின் அறிமுகங்கள் மற்றும் நண்பர்களின் அறிமுகங்களும் தோற்றதே இல்லை விதிவிலக்கு உபபாண்டவம் , அறம் இவை தவிர்த்து அனைத்துமே என்னை ஒரே வாசிப்பில் வாசிக்க வைத்தவையே. அதில் இப்பொழுது கானகன்.</div>
<div>
<br /></div>
<div>
கானகன் லக்ஷ்மியினுடைய இரண்டாவது நாவல், உப்பு நாய்கள் அவரின் முதல் நாவல் அந்த நாவலே எனக்கு மிக பிடிக்கும் இதுவரை என்னிடம் உள்ள பதிப்பை நான்கு நபர்களுக்கும் மேல் வாசிக்க கொடுத்து உள்ளேன் இப்பொழுது கூட அந்நாவல் என்னிடம் இல்லை நண்பர்களிடம் தான் உள்ளது அவ்வளவு ஏன் சாரு கூட அந்நாவலை அவ்வளவு புகழ்ந்து எழுதினார். கானகனை கூட அவர் தான் வெளியிட்டாளும் அதை நாம் வாசித்து உணர வேண்டும் என்ற ஆசையிலே தான் வாசிக்க தொடங்கினேன்.</div>
<div>
<br /></div>
<div>
பொது வெளியில் வாழும் வாழ்க்கைக்கும் வனத்தில் வாழுவோர்க்குமான வாழ்க்கை எது என்ன எப்படி ஏன் என்ற கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொரு பக்கங்களிலும் உணர வைக்கன்றதே வாசிக்கும் போது.</div>
<div>
<br /></div>
<div>
வனத்தின் அழிப்பை இது போல எவரும் விவரித்ததில்லை அப்போது வனத்தின் குடியிருப்போரின் மனநிலையை மையமாக முழு கதையையும் அவர்களின் பார்வையில் கொண்டு சென்றது தான் ஆக சிறப்பு.</div>
<div>
<br /></div>
<div>
இதுவரை எந்தவொரு சிறுகதை , குறுநாவல், நாவலை வாசித்தடாதவர்கள் கூட இந்நாவலை வாசிக்க தொடங்கினால் வைக்க மனமிருக்காது. அதனுள் இறங்கி முடிக்காமல் வெளி வர இயலாது.....</div>
<div>
<br /></div>
<div>
...... கானகனின் என் பார்வை தொடரும் ( மீள் வாசிப்பு செய்து விரிவாக எழுத ஆசை நிச்சயம் பதிவு செய்வேன்)</div>
</div>
<div>
*******************</div>
<div>
<br /></div>
<div>
<div>
நகுலன்- (நினைவு பாதை)</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ8eALivYXefeyMx40j6c2_gMDQlTYSJZifvVWF89HYyP3OtN8jnnE8yCmqLnt7Cd4z-nOPlJh1xECB-BPsIBN-0j0PVW2aAIIqFkUAJxBLwPDVE80zItwxjf76N-gXmKlwMymF-OMqBU/s1600/ninaivu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ8eALivYXefeyMx40j6c2_gMDQlTYSJZifvVWF89HYyP3OtN8jnnE8yCmqLnt7Cd4z-nOPlJh1xECB-BPsIBN-0j0PVW2aAIIqFkUAJxBLwPDVE80zItwxjf76N-gXmKlwMymF-OMqBU/s400/ninaivu.jpg" width="253" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
பல சந்தர்ப்பங்களில் நான் ஒரு கோழை என்று எனக்குத் தோன்றுகிறது. யாருக்குக் குழைந்த மனம் இருக்கின்றதோ அவன் கோழை ஆகிறான். இதனால்தான் வேண்டாம்,முடியாது , இல்லை என்று சொல்ல வேண்டிய சந்தர்பங்களில் இவைகளைச் சொல்லாமல் நான் அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.</div>
<div>
<br /></div>
<div>
நகுலனின் நினைவு பாதை வாசித்து கொண்டு இருக்கின்றேன். புனைவை அடியோடு வெறுக்கிறாரே. அந்தவொரு காரணமே போதும் நகுலன் அவர்களின் அனைத்து பதிப்புகளையும் நான் வாசித்துவிடுவேன்....</div>
<div>
<br /></div>
<div>
மனிதன் ஒரு அசை போடும் மாடு- நகுலன்</div>
<div>
<br /></div>
<div>
நினைவு பாதை கடைசி இரண்டு அத்தியாயங்களில் கிட்டத்தட்ட இல்ல மொத்தமுமாகவே குழம்பி போகிவிட்டேன் ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு முறை முறையே படித்தும் புரியாமல் ஆனால் விட்டு விடவும் முடியாமல் இழத்துச்செல்லும் எழுத்து. இறுதி அத்தியாயத்தில் முன்னர் ஏன் அப்படி இருந்தது என்பதை விளக்கினாலும் மீண்டும் இந்நாவலை முழுக்க வாசிக்க வேண்டும் உடனடியாக அல்ல கொஞ்ச நாள் சென்று... </div>
<div>
<br /></div>
<div>
நாவலில் இருந்து... </div>
<div>
<br /></div>
<div>
//நாயாக பிறந்திருந்தால்</div>
<div>
நகரமெல்லாந்திரிந்திருக்கலாம்//</div>
<div>
<br /></div>
<div>
சச்சிதானந்த பிள்ளை கூறுவதாக வருவதையெல்லாம் நூலாகவே பதிவு செய்யலாம் அவ்வளவு உயிர்பானவைகள்.</div>
</div>
<br />
*******************-<br />
ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முகமது மீரான் ( காலச்சுவடு பதிப்பகம்)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI5cHJW0kTXU3IyKxCEDlLfY-H3igXc4BTgx4TNZt29UWjifI1WmjEA2BzajiLr85u9KflqNUjVNzPYV3a3J9B2zP4kwmL3T9hlzYCrrNaIsk8qEQ8cAKSVIjbNJOzgSL5A9pxl1SKPM/s1600/kkk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI5cHJW0kTXU3IyKxCEDlLfY-H3igXc4BTgx4TNZt29UWjifI1WmjEA2BzajiLr85u9KflqNUjVNzPYV3a3J9B2zP4kwmL3T9hlzYCrrNaIsk8qEQ8cAKSVIjbNJOzgSL5A9pxl1SKPM/s400/kkk.jpg" width="268" /></a></div>
<br />
<br />
வடக்கு வீட்டு முதலாளி அகமது கண்ணு , அவரின் தங்கை நூஹூத்தும்மா , அவரின் மகள் ஆயிஷா அவரின் தங்கை மகன் பரீது அவரின் கணக்குபிள்ளை போன்ற அவுக்கார் மற்றும் அவரின் சொல்லையே நம்பி இருக்கும் லெப்பை , ஊர் மக்கள். முதலாளியை எதிர்க்கும் மஹமூது, மேக்கு வீட்டு ஆளுங்க , அசனார் லெப்பை என்று நாவலின் ஒவ்வொரு பாத்திரங்களும் வாசிக்கும் போது பரவசபடுத்துகிறது.<br />
<br />
ஒவ்வொரு கிராமத்திலும் இன்றும் கூட காணலாம் அல்ல வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கதை கேட்டு இருப்போம் அது போல இதிலும் நல்ல நிலையில் பல தலைமுறைகளாக இருந்து வந்த குடும்பம் அழிந்து போகிறது அதையும் மீறி இஸ்லாமிய சமூகத்தின் மூட நம்பிக்கைளை அவர்களின் பார்வையிலேயே நியாபடுத்தாமல் அந்த அபத்தங்களை அப்படியே நமக்கு தெரியபடுத்துகிறார் ஆசிரியர். அதிலும் ஒருவன் மூட நம்பிக்கைகளை மிதித்து வாழ்ந்தால் அவனை ஊரே சேர்ந்து தூற்றபடுவதும். ஆங்கில கல்வியை சாத்தனின் வருகையாகவே எண்ணுபவர்களும் அதை தடுக்க சாத்தானை விட கேவலமான எண்ணங்களால் மக்கள் இருப்பதும். பள்ளி ஆசிரியரை ஊரை விட்டு விரட்ட அவரின் வீட்டின் முன் நிற்க இடமில்லாமல் மலம் கழித்து வைக்க சொல்லுவார் அசனார் லெப்பை. அதை கண்டு ஆசிரியர் மெஹூப்பூகான் அடையும் விரக்தி வாசிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்ளுகிறது. தங்ஙள் என்ற கதாபாத்திரம் தான் அத்தனை மூட நம்பிக்கைகளுக்குமான காரணியாக இருக்கின்றது அதிலும் அவரின் ஆசைகள் ,திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று வரும் பெண்ணிடம் தங்ஙள் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அருமையாக தெரியபடுத்தியுள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.<br />
<br />
ஒவ்வொரு அத்தியாயமும் முடிவை சொல்லி அடுத்த அத்தியாயத்தில் அவை விளக்கப்படுகிறது. இந்த வகை மிக நெருக்கமாக உணரமுடிகிறது வாசிக்கும் போது. மொத்தமாக நாவலை வாசித்து முடித்தவுடன் ஒரு தலைமுறையினரின் அபத்தமான மூடநம்பிக்கையான வாழ்வியலை கண்ட உணர்வை தருகிறது. அதே போல எந்தவொரு கற்பிதங்களையும் ஆசிரியர் கூறவில்லை அவர்களின் வாழ்க்கையை அப்படியே கூறியது தான் நாவலே முடிந்தாலும் அந்த மக்களின் எண்ணங்கள் மனதை விட்டு விலக மறுக்கின்றது.<br />
<br />
வடக்கு வீட்டு முதலாளியின் இறுதி நிலையும் ஆயிஷாவின் முடிவும் மிகவும் பாதித்தது. செய்த தவறுக்காக பெறும் தண்டனையை விட , தவறு நடந்திடுமோ என்ற பயத்தில் தன்னை தானே தண்டித்து கொள்வதும் என்னவென்று நினைக்க சமூகத்தின் அவலங்கள் தானே அதற்கு காரணம். இறுதி வரை அந்த மக்களின் நம்பிக்கையிலேயே நாவலும் முடிந்து போனது அவர்களிடம் சென்று யார் புரியவைப்பது என்ற ஆதங்கத்தோடும் வேதனையாக மனமே நிலையில்லாமல் தவித்தது நாவலை முடித்த நிமிடங்களில். அது தான் இந்த நாவலின் வெற்றியாக எனக்கு புரிகிறது.<br />
<br />
அடுத்த பதிப்புகளில் கடைசி பக்கங்களில் இருக்கும் வட்டார சொல்லாடல்களின் விளக்கங்களை அந்தந்த சொல்லுக்கு நேரே கொடுத்தால் இன்னும் எளிமையாக இருக்கும் இருந்தாலும் புரிந்து கொள்ளலாம்.<br />
<br />
ஒரு கடலோர கிராமத்தின் கதை வாசிப்பாளர்களின்றி அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புத படைப்பு.<br />
<br />
*******************<br />
<br />
மரம்- ஜீ.முருகன் - உயிர்மை பதிப்பகம்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvcjnraRMH3ThMWmBR4c3m9vjOS42JXwQ_XpdzjKvMoVY8VxWDx2k6mAfvPo3OogURXiePi51eaSBgO8NuZNX4uetY6v0u2pIc1lTqRgAZKP-lJia-IxAmZmvOhF1_A45DEJ-ovIm3Hew/s1600/maram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvcjnraRMH3ThMWmBR4c3m9vjOS42JXwQ_XpdzjKvMoVY8VxWDx2k6mAfvPo3OogURXiePi51eaSBgO8NuZNX4uetY6v0u2pIc1lTqRgAZKP-lJia-IxAmZmvOhF1_A45DEJ-ovIm3Hew/s400/maram.jpg" width="254" /></a></div>
<br />
<br />
சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசாரியர்.<br />
<br />
நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள் , உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார் நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று.<br />
<br />
ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது.<br />
<br />
ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது.<br />
<br />
நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது.<br />
<br />
நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக கூற முடியும்.<br />
*******************<br />
இந்த கருத்துக்கள் ஏற்கனவே முகனூலில் பதிவு செய்தவை தான் ஆனால் இன்று இங்கே ஒன்றாக தொகுக்க வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.<br />
<br />
நன்றி .......<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="uiGrid _51mz _5f0n" style="border-collapse: collapse; border-spacing: 0px; border: 0px; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; table-layout: fixed; width: 646px;"><tbody>
<tr class="_51mx"><td class="_51m- vTop _5ep6" style="padding-bottom: 0px; padding-top: 0px; vertical-align: top; width: 300px;"><br /></td><td class="_51m- vTop _5ep7 _51mw" style="padding-bottom: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: top; width: 76px;"><br /></td></tr>
</tbody></table>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com3Singapore1.352083 103.819836000000010.8441055 103.174389 1.8600605 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-21671428714776348062015-01-30T10:55:00.001-08:002015-01-30T12:39:05.880-08:00இசை - S.J.SURYA MAGICAL STORY<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
வாலி , குஷி , நியூ , அன்பே ஆருயிரே,கொமொரங் புலி (தெலுங்கு படம் பெயர் இப்படி தான் வரும்) என்று எஸ்.ஜே.சூர்யாவின் அனைத்து படங்களும் வெற்றிகளுக்கு அப்பாற்பட்டு சர்ச்சைகளுக்கும் தனித்துவத்துக்கும் பெயர் பெற்றவைகள். இயக்குனராக அவரின் அனைத்து படங்களும் பெரும்பாலோனரை கவர்ந்தவையே.அந்த வகையில் எனக்கும் அவர் எப்போது மீண்டும் படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது கடந்த இரண்டரை வருடங்களாக எடுத்து இன்று வெளியாகி இருக்கும் படமே இசை. மிகுந்த எதிர்பார்ப்போடு காண சென்றேன். சிங்கபூரிலும் வேலை நாளில் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeGTf8mpX2FFwJUDNLkrYljXSKBEmMuZw-i-lb0fEZcdWiohtpj0ZwrjQ7d49fokz48RvCSsAXV-rsryMZtoo_eSy9ZXrjuK4l6xubqu60u14nYz7oCfFPkAxMjOL138yTAqUGWtwjY0/s1600/sjs.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeGTf8mpX2FFwJUDNLkrYljXSKBEmMuZw-i-lb0fEZcdWiohtpj0ZwrjQ7d49fokz48RvCSsAXV-rsryMZtoo_eSy9ZXrjuK4l6xubqu60u14nYz7oCfFPkAxMjOL138yTAqUGWtwjY0/s1600/sjs.jpg" /></a></div>
<br />
<br />
எஸ்.ஜே விடம் எனக்கு பிடித்ததே முதல் காட்சியிலயே படத்தின் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிடுவார், அதே இதிலும் டைட்டில் ஓடும் போது கதையை சொல்கிறார் . ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் முன் பெற்ற வெற்றியை இன்னொருவர் வென்று கொண்டே வருவார்கள் அது காலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. அப்படி இசை துறையில் 30 வருடங்களாக வெற்றிசெல்வன் கட்டிய சாம்ராஜ்யத்தை இரண்டே வருடத்தில் அதை தட்டி பறித்த ஏ.கே.சிவாவை வஞ்சம் கொண்டு தகாத வழியில் பழி தீர்க்க நினைக்கிறார் வெற்றி செல்வன். அதனால் வரும் சம்பவங்களே கதை என்று கூறிவிடுகிறார். (இவர் கூறும் போது டைட்டில் ஸ்லைடில் எம்.ஜி.ஆர் , கருணாநிதி , ஜெயலலிதா, கபில் தேவ் , கவாஸ்கர் , சச்சின் , ராஜேஷ் கண்ணா , அமிதாப் , கே.பி மகாதேவன் , எம் .எஸ்.வி , இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் ,பாலசந்தர் , பாரதிராஜா , மணிரத்னம் , வெற்றிசெல்வன் (சத்யராஜ் ) இவர்களின் புகைப்படங்கள் வருகிறது ) அதை தொடர்ந்து நாயகன் அறிமுக பாடலில் அவர் பெற்று இருக்கும் புகழை சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியில் அந்த பாடல் காட்சியை ம்யூட் மோடில் பார்த்து சிவா மீது எந்த அளவுக்கு வெற்றிசெல்வன் வெறுப்பு கொண்டுள்ளார் என்பதையும் காட்டிவிடுகிறார். அடுத்து இயற்கையான இசையில் ஆல்பம் ஒன்று உருவாக்க காட்டுக்கு செல்கிறார் சிவா. அங்க இசைய பிடிச்சாரோ இல்லையோ அக்மார்க் எஸ் .ஜே சீன்ஸ் நல்லா பிடிச்சு நமக்கு காட்டி இருக்கார் உடன் இசையை அப்பப்போ பிடிக்குறார் ஆமா நாயகியை கண்டு காதலில் விழுகிறார். அதில் இருந்து நாயகியுடன் அங்கு நடைபெறும் காட்சி இங்கே வெற்றிசெல்வன் சிவாவை நினைத்து நினைத்து வெறுப்பின் உச்சம் செல்லும் காட்சி என்று இடைவேளைக்கு 15 நிமிடங்கள் வரை மாறி மாறி வந்து கொண்டு இருக்கின்றது, நிறையவே பொறுமையை சோதித்தது. ஆனால் காட்டை விட்டு நாயகியை திருமணம் செய்து கொண்டு சென்னை திரும்பியவுடன் திடீர் திடீர் திருப்பங்களுடன் இடைவேளை.<br />
<br />
இடைவேளைக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது பேரும் புகழுடன் இருக்கும் ஏ.கே சிவாவை மனநோயாளி ஆக்க அவருடன் இருக்கும் வேலை ஆட்களை வைத்தே வெற்றிசெல்வன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். எல்லா இயக்குனர்களும் மீண்டும் வெற்றிசெல்வனை நோக்கி படையெடுக்க சிவா மனநல காப்பகத்தில் சேர்க்கபடுகிறார். அதில் இருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் அவரை முற்றிலும் செயல் இழக்க வைக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றிசெல்வன் அதை எல்லாம் தாண்டி மீண்டாரா இல்லை என்னவானார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.<br />
<br />
இதுவரை நான் எழுதிய விமர்சனத்திலேயே இவ்வளவு விரிவாக கதையை சொன்னது இல்லை. இப்படத்திற்கு சொன்னாலும் ஒன்றும் ஆகபோவதில்லை பார்க்கும் போது இயக்குனரின் மொழி கட்டிபோட்டுவிடும். என்ன வேண்டும் என்றாலும் காட்சியாக்கலாம் ஆனால் அதை இறுதியில் நியாயபடுத்துவதில் தான் இயக்குனரின் நேர்மை பளிச்சிடும். அதில் அட்டகாச வெற்றி பெறுகிறார் எஸ்.ஜே. ஏன்டா இந்த சீன்ஸ் என்று யோசித்த போது அனைத்துக்கும் இறுதியில் விடை கூறுகிறார். நடிப்பிலும் மனுஷன் பிச்சு உதறி இருக்கார் சில ஓவர் டோஸ்கள் சத்யராஜை முந்த வேண்டும் என்பதால் வந்திருக்குது. வெற்றிசெல்வனாக பின்னி பிடல் எடுத்து விட்டார் சத்யராஜ் அசால்டான டயலாக் டெலிவெரி , அனாசியமான உடல் மொழி என்று அம்மாவாசயை நெருங்கி உள்ளார்.<br />
<br />
இசையின் இசை அவரை இசை அமைப்பாளராக ஆக்கியது தவறேதும் இல்லை, நிச்சயம் நிறைய இயக்குனர்கள் அவரிடம் இசை கேட்டு <br />
செல்லுவாங்க. பிஜிஎம் கூட நல்லாவே போட்டு இருக்கார்.காட்சிபடுத்திய விதத்தில் கூட பாடல்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது . ரம்மியமான ஒளிப்பதிவு. வசனம் மிக பெரிய பலம் அதுவும் சத்யராஜ் பேசுவது எல்லாம் கைதட்டல்கள் அள்ளியது.<br />
<br />
இயக்குனராக எஸ்.ஜே வின் உண்மையான மிக பெரிய வெற்றி இப்படம். அதே போல இப்படத்திற்கு இந்தவகையான க்ளைமாக்ஸ் இல்லை என்றால் படம் நிச்சய தோல்வி தான். அந்த முடிவும் கூட விமர்சகர்களால் சொல்லப்பட்டு அதை தெரிந்து படம் பார்த்தால் படம் பார்ப்பதே வேஸ்ட். இப்படி சிக்கலான முடிவை வைத்து அதில் வெற்றி பெறுவோமா இல்லையா என்று தெரியாமல் திரை ரசிகர்களை நம்பி வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிக பெரிய வணக்கங்கள்.<br />
<br />
இசை - அதிர்வு நிச்சயம்<br />
<br />
பின் குறிப்பு :<br />
<br />
1. நான் பார்த்த காட்சி எல்லோரும் ஆராவரமாக கண்டனர் குடும்பம் சகிதமாக , படமுடிவு கூட பலருக்கும் பிடித்தே இருந்தது காதுபட கேட்டது.<br />
<br />
2.மூன்று மணி பத்து நிமிடங்கள் என்பது தெரியவே இல்லை இரண்டாம் பாதி ஜெட் வேகம்.<br />
<br />
3.எஸ்.ஜே மேஜிக் நியூ எட்டு வயசு பையன் பெரிய பையன் , அ ஆ காதலை ஆன்மாக்கள் சேர்த்து வைப்பது போல இதிலும் உண்டு அது தான் ஹாட் டாபிக்.<br />
<div>
<br /></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com0Singapore1.352083 103.819836000000010.8441055 103.174389 1.8600605 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-66948680448739514902014-11-27T22:21:00.000-08:002014-11-27T22:21:27.116-08:00இங்க காதலும் இருக்கு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib4kuWgij0z7nWdRzlYuKQZNhIbJLbJBIm9W4YtSclVkjEwq6XroIyCz3bohaHXk5EAE3HjP__XsIqkzHhjcekvc02dUZ-Nme9dAje3oVpI4eA7J9-YKARl8MaUzA6h1X3aFb99yClFl4/s1600/chatbg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib4kuWgij0z7nWdRzlYuKQZNhIbJLbJBIm9W4YtSclVkjEwq6XroIyCz3bohaHXk5EAE3HjP__XsIqkzHhjcekvc02dUZ-Nme9dAje3oVpI4eA7J9-YKARl8MaUzA6h1X3aFb99yClFl4/s1600/chatbg.jpg" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" மச்சான் சக்தி, உனக்கு தான் ஒன்னும் பேச வர மாட்டேங்குதே. அப்புறம் ஏன்டா மூச்ச போடுற "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அப்படி இல்லைட கார்த்தி , எவ்வுளோ நாளு தான் இப்படியே பயந்துட்டு ஆசைய மட்டும் வச்சிட்டு இருக்கிறது"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அப்போ நான் சொல்லுறது போல பண்ணு, ஆனா மயிரு எப்போவும் நான் ஒன்னு சொன்னா அதை அப்படியே முழுசா சொதப்பிட்டு வர "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"என்னடா செய்யுறது பயமா இருக்குடா , அப்படியே ஹார்ட் பீட் அடிக்கிறது எனக்கு கேட்கும் மச்சி!!! அவ பக்கத்துல இருக்குறப்போ "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" அது தான் மச்சி லவ்வு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"லவ்வுலாம் இல்லை ஜஸ்ட் அவ என்ட்ட ஒரு நல்ல ப்ரெண்டா பழகினா போதும் மச்சி "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"இப்படி தான் ஆரம்பிக்கும் அப்புறம் நீயே சொல்லுவ பாரு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"இல்லடா சில நேரம் அவ பேசுறது ரொம்ப க்ளோஸா வரது போல இருக்கும் , எப்படி சொல்லுறது ? ஹ்ம்ம் ... எப்படியும் மூணு நாலு மாசம் இருக்கும் தான அவள் கூட நான் வேலை பார்த்து கொண்டு இருப்பது? ஆரம்பத்துல ரொம்ப கேஷ்வுளா தான் பேசுனா மச்சி ஆனா, இப்போ அப்படி இல்லடா. "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அடங்கப்பா உன் கதைய தான் தினமும் புலம்புறியே விடுடா , நாளைக்கு உன் ஆளு பிறந்தநாள், இப்போ நான் சொல்லுறது போல மெசேஜ் பண்ணு , நாளைக்கு உன்ன மீட் பண்ணனும்னு சொல்லு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அப்புறம்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஓகே சொல்லிட்டா அவ்வுளோதான் மச்சி 80% கன்பார்ம் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"எப்படிடா ஓகே சொல்லுவா இப்போ தான் முதல் தடவ "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அப்படி இல்லடா, எப்போ அவ நீ தம் அடிக்குறத பார்த்து பீல் ஆகி உன்கிட்ட பேசாம இருந்தாளோ, அப்போவே அவளுக்கு உன் மேல ஒரு அக்கறை இருக்குடா. நீ கூப்பிடு அவ வருவா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"சரிடா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஆனா மச்சி ஈவினிங் கூப்பிடாத ஏன்னா அவளுக்கே லேட் டைம் தான் வொர்க் முடியும் ஸோ மார்னிங் வேலைக்கு போறதுக்கு முன்ன பார்க்கலாம்னு சொல்லு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஆமாம் மச்சி சரி தான், அவ வரலைனாலும் என்னை தப்பா நினைச்சிட கூடாது "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"எல்லாம் சரியா வரும் , ஆனா மயிரு சரக்கு கேட்டா வாங்கி தர மாட்ட அவளுக்கு போயி இவ்வுளோ ரூபாய்க்கு கிப்ட்டு *ண்டை மட்டும் வாங்கு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அடிங்க *ண்டை தப்பா பேசுன கடுப்பாகிடுவேன்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"போடா போடா கரெக்ட் பண்ணிட்டு பேசுடா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஓடிடு கார்த்தி நான் அவள்ட பேச போறேன் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"சரி சரி சீக்கிரம் பேசிட்டு படு அப்போ தான் காலைல ப்ரெஷ்ஷா போகலாம் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சரி அவளுக்கு மெசேஜ் பண்ணுவோம் ஆண்டவா எப்படியாச்சும் அவ வரணும்,</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹாய் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்னடா டக்குனு ரிப்ளை வருது டேய் சக்தி கலக்குற</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹாய் என்ன பண்ற "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்ன சொல்லலாம் ஹ்ம்ம் சரி தட்டி விடுவோம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"இல்லை அனு நீ தப்பா நினைக்கலனா ???"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
என்னடா நேரா விஷயத்துக்கு போயிட்டோம் , ரிப்ளை பண்ண மாட்டாளோ...?? கிளிஞ்சது போ .... அட வந்துருச்சே</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"என்ன சக்தி சொல்லு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
டே டே நல்லா யோசிச்சிக்க அவளே ஒரு வாய்ப்பு கொடுத்துட்டா</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அனு நாளைக்கு மார்னிங் ரெண்டு பேரும் ஒண்ணா ஆபிஸ் போகலாமா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நடக்கிறது நடக்கட்டும் பார்த்திடுவோம் ,ஏதும் வரல ,குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்திட வேண்டியது தான்.... அய்யயோ என்னமோ வந்துருக்கு திட்டி இருப்பாளோ ?????</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"என்ன திடிர்னு தைரியம் வந்துடுச்சா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அட ஆண்டவா என்ன பண்ணுறது ??? கார்த்தி கார்த்தி இங்க வாடா டே.. டே... எங்கடா போயி தொலைஞ்ச ???</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹா ஹா அப்படி இல்ல அனு"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அய்யயோ நான் என்ன பன்னுறதுனே தெரியலையே.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஓகே சக்தி நாளைக்கு நா வெயிட் பண்ணுறேன் நீ வா போகலாம் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"தேங்க்ஸ் அனு நீ வெயிட் பண்ண வேணாம் , நான் தான் உனக்காக வெயிட் பண்ணுவேன் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹா ஹா போடா நான் தான் வெயிட் பண்ணுவேன் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அனு இப்போ நான் பறக்குறேன் தெரியுமா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹையோடா ,,, நாளைக்கு என்ன டே தெரியுமா ??? "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" ஹ்ம்ம் அதுக்காக தானே நாளைக்கு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹய் ரியலி "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"எஸ் அனு, கண்டிப்பா நாளைய நாளை நீ மறக்க மாட்ட "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹ்ம்ம் மீ டூ வெயிட்டிங் சக்தி"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஓகே அனு டைம் எத்தனை "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"இதுக்கு மெசேஜா முடியல சக்தி "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"சொல்லு அனு ப்ளீஸ் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"11.59"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய அனுவிற்கு, இன்று நீ பெரும் வாழ்த்துக்களை போல என்றும் நீ வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹே சக்தி thank you so much da <i class="_4-k1 img sp_vOYEWpFssLd sx_d8cc37" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yA/r/_Z8-fcANn0c.png); background-position: 0px -7863px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i> <i class="_4-k1 img sp_vOYEWpFssLd sx_d8cc37" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yA/r/_Z8-fcANn0c.png); background-position: 0px -7863px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i> <i class="_4-k1 img sp_vOYEWpFssLd sx_d8cc37" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yA/r/_Z8-fcANn0c.png); background-position: 0px -7863px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i> <i class="_4-k1 img sp_vOYEWpFssLd sx_d8cc37" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yA/r/_Z8-fcANn0c.png); background-position: 0px -7863px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i> <i class="_4-k1 img sp_vOYEWpFssLd sx_d8cc37" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yA/r/_Z8-fcANn0c.png); background-position: 0px -7863px; background-repeat: no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i> dear "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
போடு இதை இதை தான் எதிர்பார்த்தேன். நான் அவள்ட லவ்வ சொல்லலை ஆனா கிட்டத்தட்ட சொல்லிட்டாளே அனு.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"டே கார்த்தி கார்த்தி இந்த கான்வேர்ஷேஷன பாரேன் ப்ளீஸ் மச்சி எந்திரிடா மாமா , புல் அடிப்போம்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"என்னடா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ப்ளீஸ் பாரு மச்சி "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹ்ம்ம் ...... டே மச்சி கலக்குற ...... அட ...... போடு வக்காளி ......ஹ்ம்ம் .... ரைட்டு அவ்வுளோதான் மச்சி, இனி நீ தான் டெவலப் பண்ணனும்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" எப்படிடா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஜஸ்ட் நாளைக்கு பேசுறப்போ ஈவினிங் படத்து கூப்பிடு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" டே வருவாளா ??? "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"நீ கூப்பிடுடா கண்டிப்பா வருவா , எத்தனை பேர பார்த்து இருக்கேன் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹ்ம்ம் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" படத்துக்கு வந்துட்டா பினிஷ் மச்சி ....மெதுவா டைம் பார்த்து அப்படியே அழகா கைய வச்சிடு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"டே என்னடா சொல்லுற "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" ஆமாம் மச்சி நீ கைய வச்சிடு , அவ ஒன்னும் சொல்லலை அப்படியே என்ஜாய் பண்ணு ரூம் போட்டுறு, நீ ஒன்னும் செய்ய வேண்டாம் அவளே பார்த்துக்குவா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"எப்படிடா சொல்லுற??? எனக்கும் ஆசையா தான் இப்போ இருக்கு மச்சி "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அதான் பாயிண்ட் , கைய அவ தட்டி விட்டா டக்குனு எந்திரிச்சி வெளிய வந்திடு "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஏன்டா"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அப்படியே ரூம்க்கு வந்துடு மச்சி , அவளே திரும்பவும் உன்ட வருவா அதான் பொண்ணு"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"என்னமோ சொல்லுற பார்ப்போம் "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
***********************************************************************************************</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அனு என்ன பேஸ் புக்ல பெர்த் டே நாளைக்குன்னு வருது, உனக்கு தான் போன வாரம் முடிஞ்சதே "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அதுவாடி ச்சும்மா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹே எவன்டி"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"விடு நாளைக்கு சொல்லுறேன்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ச்சும்மா சொல்லுப்பா "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
" ஹே அவனே பழமாட்டம் இருக்கான் அதுக்கு தான் பிட் போட்டுருக்கேன்"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"ஹ்ம்ம் அப்போ அடுத்த விக்கெட் காலி"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"எங்க அவன் நமக்கு மேல இருந்தான்னா ???"</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
"அனு நீ கவ்வுத்துடுவடி அவன "</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-top: 6px;">
"பார்ப்போம் பார்ப்போம் குட் நைட் "</div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-7496080219671324872014-11-20T23:09:00.000-08:002014-11-20T23:09:44.818-08:00கதை உண்மையாகுமா ????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவளுடைய தொலைபேசியில் ஹப்பி என்ற பெயரில் அழைப்பு வருவதை நான் பார்த்தேன், அவள் என்னை பார்த்து சிரித்தாள். எடுத்து அவனோடு சில நேரம் பேசினால். நான் அதற்குள் அறையில் இருக்கும் பால்கனி சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து அடிக்க தொடங்கினேன் . என் மனம் என்னன்னவோ யோசிக்க தொடங்கிற்று, ஏன் இங்கே வந்தேன்? பின் ஏன் வருத்தபடுகிறேன் ?அவர்களுக்காக நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? அட வந்தது தான் வந்தாச்சு ஒரு தடவ செஞ்சுட்டு போயிட வேண்டியது தான் என்று இறுதியாக முடிவு செய்து விட்டேன். அதற்குள் சிகரட் சரியாக முடிய, அவள் என்னை பின்னால் இருந்து மென்மையாக கட்டிக்கொண்டாள். முதல் முறை பெண்ணால், என் உடல் வெப்ப மயமானது. அவளுடைய அங்கங்கள் என்னோடு உரசுமிடையில் இனம் புரியா ஒன்று என்னை தூண்டி அவளிடம் இருந்து மெதுவாக விடுபட்டேன் முழுமையாக அல்லாமல் என் கைகளை மட்டும் அவளிடம் கொடுத்து இருந்தேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
பின்னர் கேட்டேன் "எத்தனை வருஷமா இப்படி இருக்க "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹ்ம்ம் 5 வருஷம் ,சரி பசிக்குது எதாச்சும் ஆர்டர் பண்ணுறியா "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹே முன்னயே சொல்லிருக்கலாம்ல நான் கூட மறந்துட்டேன் இரு ஆர்டர் பண்ணுறேன் உனக்கு என்ன பிடிக்கும் ? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"உனக்கு பிடிச்சதே சொல்லு டார்லிங் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"டார்லிங் வேணாம் எனக்கு சிரிப்பா வருது "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"டார்லிங் தான் எங்களோட வாழ்கையே "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹ்ம்ம் சரி பிரியாணி மட்டன் ஓகே வா "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹ்ம்ம் ஓகே "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
ரிஷப்சனுக்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அவளை பார்த்தால் , என் முகம் வேர்த்து விட்டது. ஆடை ஏதும் இல்லாமல் உள்ளாடைகளுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு என்னை ஏற இறக்கமாக பார்த்து கொண்டு இருக்கின்றாள். என்ன செய்வது என்று புரியாமல் முகத்தை துடைத்து கொண்டு அவள் அருகில் நெருங்குகிறேன். இடது பக்க மார்பில் ஏதோ பற்களால் கடித்தது போல நன்கு தெரிகின்றது அவளின் நிறத்திற்கு, ஆனால் அதை பற்றி யோசிக்க எனக்கு தோன்றவில்லை. முழுமையாக இப்பொழுது நான் ஒரு பெண்ணை அனுபவிக்க போகிறேன் என்ற குற்றவுணர்வு கூட என்னை விட்டு விலகி என்னுடைய பசிக்கு பலியாகி போனது. அவளும் அப்படியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றி இழுத்து அனைத்து கொண்டாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
திடுக் என்று அவளிடம் இருந்து விலகினேன்.அவளோ ஹே லஞ்ச் டியர் என்று என்னை சமாதானபடுத்தினாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
இருவரும் ஒன்றாக குளிக்கலாம் வா என்று என்னை அழைக்க, நானோ வேண்டாம் என்று தவிர்த்து விலகினேன். அவள் குளித்து கொண்டு இருக்கும் போது ஏனோ தெரியவில்லை தெரியாமல் பார்க்கலாமா என்று தோன்றியது. அதுக்காக சில நிமிடங்கள் வெட்கப்பட்டேன். இப்படி கேவலமான எண்ணங்கள் ஏனோ தெரியவில்லை அடிக்கடி எனக்கு வரும். அது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்குமா என்று கூட தெரியவில்லை.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
குளித்து முடித்து விட்டு வெறும் டவலோடு வந்தாள். அவள் அழகில் தலை சுற்றி போனால் ரசிக்க முடியாது என்று நிற்கும் மரமாகி போனேன். அருகில் வந்து கன்னங்களை கிள்ளி சென்றாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அந்த மயக்கத்தோடு நானும் குளிக்க சென்றேன். குளிக்கும் போது இன்னொரு கேவலமான எண்ணம் நண்பன் சொன்னது நினைவில் வந்தது, "மச்சி மேட்டருக்கு முன்ன தனியா போகி செல்பி போட்டுறு அப்போ தான் நீ பண்ணுறப்போ லேட் ஆகும் செம்மையா இருக்கும் ". அடச்ச என்னடா இது இப்படியே தோணுது என்று வெறுப்பாகி சீக்கிரம் குளித்து விட்டு வந்தேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
சரிவா சாப்பிடலாம் என்று கூறி கொண்டே எடுத்து வைத்து கொண்டு இருந்தாள், இம்முறை அரை அடி உள்ள டவுசர் அதுவும் எனக்கு பிடித்த பிங்க் கலர் மேலே அதற்கு மேட்ச்சான ஒரு அடி உள்ள டி-ஷர்ட். அற்புதமாக இருந்தாள் தமிழ்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
“ஏன் காலையில சாப்பிடலையா தமிழ் ???”</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"இல்ல ஏன் கேட்குற "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ரொம்ப பசில இருக்குற மாறி இருக்கியே அதான் வேற ஒன்னும் இல்லை"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நீ என்ன கூப்பிட்டு வரலைனா எனக்கு இப்ப வரைக்கும் சாப்பாடு கிடைச்சு இருக்காது "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"புரியல தமிழ் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அது அப்படி தான் கஸ்டமர் வாங்கிதறது இல்ல அவுங்க தர டிப்ஸ் வச்சி சாப்பிடுறது அது தான் எங்களுக்கு சாப்பாடு "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
ஒரு நிமிடம் மொத்தமுமாக அதிர்ந்து தான் போனேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அப்போ யாருமே உன்ன எடுக்கலைனா ? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அவ்வுளோதான் தண்ணீர் தான் சாப்பாடு "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"உங்க ப்ரெண்ட்ஸ் அவுங்களும் இப்படி தானா? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஆமா எல்லாருக்கும் இப்படி தான் எனக்கு பரவா இல்லை எப்படியாச்சும் யாராச்சும் வந்துருவாங்க "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவள் சொல்லுவதின் அர்த்தம் புரிந்தது முன்னயே சொன்னது போல அவலட்சணமான பெண்கள் இந்த தொழிலில் எப்படி தான் இருப்பார்களோ என்று மீண்டும் வருத்தப்பட்டு கொண்டே அவளிடம் கேட்டுவிட்டேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அப்படி இல்லை கொஞ்சம் கஷ்டம் தான் இப்போ சில பேர் நல்ல அழகான பொண்ணுங்கள எடுக்க மாட்டாங்க ஏன்னா சரியான கம்பெனி இருக்காது என்று நினைப்பாங்க அப்படி இருக்குறவுங்க இவங்களை போன்றவர்களை எடுப்பாங்க கம்பெனி நல்லா இருக்கும் அப்படின்னு அதே போல நல்லா பார்த்துபாங்க "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஓஹோ இது வேறயா என்ன இருந்தாலும் அவுங்க பாவம் பா "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"இவ்வுலோ பேசுற நீ அவுங்கள எடுத்து இருக்க வேண்டியது தானே "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவள் முன் வெட்கி தலை குனிந்தேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நானும் சராசரி மனுஷன் தானே முதல் முறை அழகான பொண்ண தான் பார்க்கணும் அப்படின்னு நினைச்சேன் ஆனா அவுங்கள பாக்குறப்போ வருத்தமா இருந்துச்சு நான் என்ன பண்ணுறது "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹே ஹே கூல் நான் சும்மா சொன்னேன் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"உங்க லைப் நிஜமாவே ரொம்ப பாவம் தமிழ்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவளின் கண்கள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.முகத்தை மூடிக்கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்.தேவை இல்லாம அவளையும் கஷ்டபடுத்திட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.அவளோ மீண்டும் அந்த பழைய சிரிப்புடன் வந்தாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அருண் என்ன ரொம்ப நெருங்கி வர "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அப்படி இல்ல தமிழ் தெரிஞ்சிக்க தான் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நல்ல பையனா இருக்குற அப்புறம் ஏன் இப்படி "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"எல்லாம் வயசு கோளாறு 27,28 வயசு ஆகுது கல்யாணத்த பண்ணி வச்சா நான் ஏன் இங்க வாரேன், ஆமா உனக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை ஹப்பி காளிங்குனு வந்துச்சு "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" அதுவா நேத்து வந்த கஸ்டமர் அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அவரே என் போன்ல ஹப்பினு சேவ் பண்ணிட்டு போனாரு, நாளைக்கு வரேன்னு சொல்லுறான் நாய் நான் வேணாம்னு சொல்லிட்டேன்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஏன் தமிழ் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அவன் டார்ச்சர், அதை பண்ணு இதை பண்ணு, இப்படி அப்படின்னு சாவடிச்சிடுவான் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"புரியுது தமிழ் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அப்புறம் இப்படி நாங்களே ஹப்பினு ஒரு நம்பர் வச்சிக்குவோம் ஒரு சில சமயம் அது எங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அவசரத்துக்கு"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
இதை எல்லாம் ஏன் என்ட சொல்லுறா??? என்று யோசிக்கும் போது, எதிர்பார்த்து இருந்தது போல என் இதழ்களை கவ்வினாள்...!</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
கலவியில் எனக்கு மிகவும் பிடித்தது இதழோடு இதழ் சேர்த்து நீண்ட நேரம் பரிமாறிகொள்ளும் முத்தமே. அதை முதல் முறை நான் அனுபவிக்கும் போது பரவசம் கொண்டேன் கிட்டத்தட்ட என்று அல்லாமல் உச்சமே அடைந்தேன். அப்பொழுது என் உடல் சிலிர்த்தது அதை அவளும் உணர்ந்ததாலோ என்னவோ முத்தத்தை விடுவித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹே என்ன இதுக்கே ஃப்ளாட்டு"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"வேற என்ன செய்யுறது கண்ட்ரோல் பண்ண முடியலையே"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நீ உண்மைலயே பர்ஸ்ட் டைம் தான் அருண்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"தமிழ் நீ நம்ப மறுத்தாலும் உண்மை அது தான்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஓகே ஓகே போ க்ளீன் பண்ணிட்டு வந்து சாப்பிடு,அப்படியே வச்சிருக்க பாரு"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"எனக்கு போதும் தமிழ், நீ கொடுத்த முத்தமே இன்னும் நாலு நாளைக்கு பசிக்காது"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹா ஹா ஹா இன்னும் நிறைய இருக்கு இதுக்கே இப்படினா ??? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ??? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"கேளு. பண்ணுறது தப்பு,நினைப்பு மட்டும் சரியா இருந்தா என்ன? தப்பா இருந்தா என்ன? அருண்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"இதுவரைக்கும் எத்தனையோ பேர பார்த்து இருப்ப எப்போவாச்சும் ஏன் இப்படி இருக்கிறோம்னு பீல் பண்ணி இருக்கியா. ஐ மீன் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"இதில் என்ன புரியல இத்தனை பேர் கூட படுக்கிறேயே வெட்கமா இல்லையானு கேட்கிற அப்படி தான ??? "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஹே சாரி தமிழ் மன்னிச்சிடு நான் அப்படி சொல்ல வரல. உன் இடத்தில் இருந்து உன்னோட வலியை உணர முயற்சி பண்ணுறேன். அதுக்கு நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" வேணா அருண்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"........"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. தேவை இல்லாமல் ஏன் இதை கேட்டோம் என்று நினைத்து கொண்டேன்.ஆனாலும் அவளுக்கு நிச்சயம் ஆறுதலை தந்து இருக்கும், அதுவே அவளுடைய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் இன்னும் அவளுக்கு நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. மௌனத்தை அவள் முடித்தாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அருண் என்னோட வயசு 21, அஞ்சு வருஷம் முன்ன இந்த தொழிலுக்கு வந்தேன்னு சொன்னேன். அப்போ பார்த்துக்க 16 வயசுல,எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் அப்போ??? இல்ல இப்போ மட்டும் என்னத்த தெரிஞ்சிக்கிட்டேன் ??? ஆண்களின் அளவுகளும், எண்ணங்களும், வக்கிரங்களும், வாதைகளும் தான் தெரிஞ்சிருக்கு."</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"...."</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"சாரி உன்னை பற்றி சொல்ல வரலை,ஆனா இப்பவும் உன் மேல நம்பிக்கை இல்லை. ஐ மீன் ஜஸ்ட் என்னை நீ இம்ரஸ் பண்ண தான் நடிக்கிறியோனு தோணுது தப்பா நினைக்காத, ஏன்னா என் நிலை அப்படி அருண்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"புரியுது தமிழ் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஒவ்வொரு நாளும் எவன் கூடயாவது படுத்து,படுத்து, எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்கிறப்போ கூட துணை கேட்கும். அதே போல தினமும் எவன் கூடயாவது படுத்து இருக்கிறப்போ எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்க மாட்டோமான்னு தோணும். பாரு இது தான் எங்க வாழ்க்கை"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"என்ன சொல்லுறதுன்னு தெரியலபா "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அதுவும் பீரியட் டைம்ஸ் இருக்கே ஐயோ நரக வேதனை. அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல அருண் ..... வேதனையே அப்படின்னு இருக்கிறப்போ எந்த தேவுடியா பயலாவுது வந்து இவ தான் வேணும்னு டார்ச்சர் செஞ்சி புரிஞ்சிக்காம தெரிஞ்சே அழைச்சுட்டு போயிடுவான். அப்புறம்....."</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" வேணாம் வேணாம் தமிழ் ப்ளீஸ் ...."</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
இந்தமுறை அவளின் அழுகை மிக சத்தமாக ஒலித்தது. என் மடியில் முகத்தை புதைத்து கொண்டு அழுகிறாள். அப்பொழுது தான் அவளின் முதுகை பார்க்கின்றேன், ஐயோ என்னது இப்படி இருக்கின்றதே????? என்னை கட்டுபடுத்த இயலாமல் கண்ணீர் வந்துவிட்டது. அப்பொழுது என்னுடைய இதயத்துடிப்பை உணர்ந்தது நான் மட்டும் அல்ல அவளும் தான். என் கண்ணீர் அவளின் முதுகை தொட்டதும் அவள் எழுந்து விட்டாள்.மீண்டும் தனித்து சென்று சுவர் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" அருண் சாரிபா நீயே சந்தோசமா இருக்க தானே வந்த நான் உன்னை டென்ஷன் ஆக்கிட்ட போல"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவள் கேட்டது என்னவோ எனக்கு காதில் விழுந்தாலும், எனக்கு அவள் முதுகில் இருந்த காயமே தெரிகின்றது. வரி வரியாக சிவப்பு நிறத்தில் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. எப்படி அது உருவாகி இருக்கும். இந்த படத்தில் வரும் ட்டார்ச்சர் செக்ஸ் என்பது எல்லாம் உண்மையாவே இருக்கின்றதோ. அப்படி வக்கிரமான எண்ணத்துடன் இருப்பவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ?. அனுபவிக்க தான் பெண் சுகம் என்பதெல்லாம் இவர்களிடத்தில் இல்லையோ. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்கி அவளை எப்படி துன்புறுத்த மனம் தோன்றுகிறது. அந்த தேவுடிய பசங்களுக்கு பெண்மையின் அர்த்தம் ஏன் விளங்காமல் போனது. விலை மாதுவாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ??? ஒரு நொடி அவள் நிலையில் இருந்து ஏன் யோசிக்க நினைப்பதில்லை??? இப்படி என்னுள் தோன்றிய காட்டமான எண்ணங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற தோன்றியது.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"தமிழ் எனக்கு மனசு சரி இல்லை நான் கிளம்புறேன். நீ வருத்தபடுவது போல எதாவுது நான் நடந்து இருந்தால்.தயவு செய்து என்னை மன்னித்துவிடு தமிழ் ...!!! "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அருண் ஏன் என்ன ஆச்சு ப்ளீஸ் போகாத "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"இல்ல தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இங்க இருந்தா நான் அழுதிடுவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அருண் நீ போனா எனக்கு தான் பிரச்சனை ப்ளீஸ் புரிஞ்சிக்க கஸ்டமரா விட்டுட்டேன்னு என்ன டார்ச்சர் பண்ணுவாங்க " கலங்குகிறாள் அழகு தமிழ்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
என்ன செய்வது என்ற யோசனையில் என்னிடம் இருந்த சிகிரெட் காலியானது. அவளிடம் அருகே சென்று அவளை பெட்டில் படுக்கவைத்து விட்டு.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" தமிழ் நான் போகவில்லை , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜஸ்ட் நான் கடைக்கு போயிட்டு வரேன் ஓகே "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"நானும் வரேன் அருண் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"வேணாம்பா சத்தியமா நான் போகமாட்டேன் நீ தூங்கு, நான் டிரிங் பண்ணபோறேன் ஸோ ஒன்லி சாரி "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஓகே இங்க வந்து சாப்பிடு ப்ளீஸ் வெளியவேணாம் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ஓகே உனக்காக "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவளிடம் என்ன இனி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் தூங்கிவிட்டால் போதும் என்றே தோன்றியது. இப்படியே சென்றுவிடலாமா என்று கூட நினைத்தேன், பாவாம் அவள் இதுவால் ஏதாவது பிரச்சனை வந்து இன்னும் கஷ்டபடுவாளே. மீண்டும் அறைக்கே சென்றேன் இம்முறை எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கின்ற மதுவுடன். பின்னர் மதுவோடு நான்கு மணி நேரம் உரையாடி கொண்டு இருந்தேன். தமிழ் விளித்து விட்டாள். அருகே வந்து ஆதரவாக என்னை அணைத்தாள்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"வா அருண் "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
" வேணாம் தமிழ் மப்பு ஓவரா இருக்கு நா கிளம்பலாமா"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"அருண் நீ ஒன்னுமே செய்யலடா "</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
"ப்ளீஸ் என்னை கம்ப்பெல் பண்ணாத சாரி தமிழ்"</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
அவளிடத்திலும் எதுவும் வார்த்தை இன்றி கிளம்ப ஆயத்தமானாள். அவள் கையில் சில பணத்தாள்களை திணித்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றேன். அவள் மேல் இருந்த அன்பினால், மீண்டும் அவளை சந்திக்க கூடாது என்றே நினைத்து கொண்டு சென்றேன்.</h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
ஆனால் </h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<br /></h2>
<span style="background-color: white; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;"></span><br />
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
<b></b></h2>
<h2 style="clear: both; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px; margin: 0px;">
சில நாட்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்க சென்றேன்.</h2>
<br style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 16px;" /><br />
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாடா??? அரிக்கிதுனு போயிட்டு கதை கேட்டு பீல் ஆகி ஒன்னும் பண்ணலையாம், நீ சினிமா பார்த்து கெட்டு போனது நூற்றுக்கு நூறு உண்மை. ஓடிடு வாயில எதாச்சும் வந்துட போகுது"<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">நண்பர்களுக்கு இது போன்ற விஷயங்களில் கோபம் மடை திறந்த தண்ணீர் போல பீறிட்டு வருவது சகஜம் தானே. ஆனால் நான் மீண்டும் தமிழை நாளையே காண போகிறேன் என்று இவனிடம் சொன்னால், ரணகள சிரிப்பாய் தான் இருக்கும். காதலர்கள் எப்போதும் அவரவர்களை நினைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால் நான் ஏன் அவளை இப்பொழுது நினைத்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் எவன் கூடயாவது படுத்து கொண்டு தான் இருப்பாள், அதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளில் என்னை நினைப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லை . அப்படியே வாய்ப்பு இருந்தாலும் என்னை நினைப்பாள் என்று எப்படி என்னால் நினைக்க முடிகின்றது. ஒருவேளை அவளும் என்னை போல தனிமையில் இருக்கும் பொழுது நினைப்பாளா? சுத்தம் அவளின் தனிமை அவளுக்கே போதாதே. நாளை காண போகும் தமிழின் நினைவுகள் ஏன் என்னை இப்படி கொள்கின்றது.<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"தமிழ் எப்படி இருக்க ???"<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"ஹே ஒரு மாசத்துல நீ ரெண்டாவுது டைம் வந்துருக்க"<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"ஆமா உன்ன பார்க்காம இருக்க முடியல "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"நம்புறேன் அருண் எனக்கு உன் நினைப்பு ரொம்பவே இருந்துச்சு "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"ச்சும்மா சொல்லாத தமிழ், எனக்காக தான சொல்லுற ? "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"இல்லை அருண் இங்க வரவங்க நிறைய பேரு ஆனா அதுல உன்ன போல எங்களுக்காக நினைக்கிற ஆளுங்க ரொம்ப ரொம்ப கம்மி அதான் மறக்க முடியாது. "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">" நான் ஒண்ணுமே பண்ணலையே தமிழ் "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">" அதான்டா பண்ணுனவுங்களை விட பண்ணாதவுங்க தான் எங்க மனசுல இருப்பாங்க "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">"மொக்க போடி "<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">இப்படி எங்களின் உணர்வுகளை வெளிபடுத்தி கொள்ள வேண்டும் என்று பேராவலுடன் சென்ற எனக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">ஆம் தமிழ் அவ்விடத்தை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விட்டாள். பெரிய தொகைக்கு 60வயது உள்ள வெளிநாட்டுகாரன் அவளை மொத்தமுமாக வாங்கிவிட்டானாம்.<br /></b></div>
<div style="clear: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 1.5em; padding: 0px 0px 10px;">
<b style="line-height: 16px;">அவள் சென்று 10 தினங்கள் தான் ஆகின்றது என்று கூறுகிறார்கள். அவள் மேல் அளவில்லா அன்பு மறந்து கோபம் கொள்கிறேன். என் கண்ணீர் என்னை கேட்காமல் வந்து கொண்டே இருக்கின்றது. நான் ஒரு கோளை போல என்று என் மனம் சிரிக்கின்றது. வேறு ஒரு பெண்ணை அனுபவித்து அவளின் நினைவை மறக்க மனம் ஓரத்தில் ஆசையை தூண்டுகின்றது. எதை நான் செய்ய போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை?? போயும் போயும் ஒரு விபச்சாரிக்காக இப்படி கலங்குகிறேன் என்ற எண்ணத்தில் அடிபட்டு யோசித்தால், எனக்கென்று எந்தவொரு தனித்துவமும் இல்லை அவள் வாழ்க்கைக்கான வழி என்று அவள் தேர்ந்து எடுத்து விட்டாள். அதை நான் செய்து இருக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் போனதால் மீண்டும் ஒரு முறை நன்கு யோசித்து முடிவுக்கு வந்தேன் .<br /><br />நானும் ஒரு சராசரி மனிதன் தான்.அதே போல என்னிடம் இறுதிவரை இதுவும் ஒரு போலியான நினைவுகளாக இருக்கும்.</b></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-79097629225833517912014-10-17T00:34:00.000-07:002014-10-17T00:46:05.047-07:00கதை உண்மையாகுமா ????--3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjgyErhAB1m4QlW4eCH6KSLejgjjzWd_Kbj3HGMzyV7mIIEIsjMZ1O7Yp20K2bBxODMmkSnXqSr27_sviV8L6Mh9HANa2wuQ_Det_CFbLE8r7dy_XH2vTFUwgMIytfqbWYWZPykxlQT8s/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjgyErhAB1m4QlW4eCH6KSLejgjjzWd_Kbj3HGMzyV7mIIEIsjMZ1O7Yp20K2bBxODMmkSnXqSr27_sviV8L6Mh9HANa2wuQ_Det_CFbLE8r7dy_XH2vTFUwgMIytfqbWYWZPykxlQT8s/s1600/images.jpg" height="565" width="640" /></a></div>
<br />
<span class="null">கலவி</span>யில் எனக்கு மிகவும் பிடித்தது இதழோடு இதழ் சேர்த்து நீண்ட நேரம்
பரிமாறிகொள்ளும் முத்தமே. அதை முதல் முறை நான் அனுபவிக்கும் போது பரவசம்
கொண்டேன் கிட்டத்தட்ட என்று அல்லாமல் உச்சமே அடைந்தேன். அப்பொழுது என் உடல்
சிலிர்த்தது அதை அவளும் உணர்ந்ததாலோ என்னவோ முத்தத்தை விடுவித்து சிரிக்க
ஆரம்பித்து விட்டாள்.<br />
<br />
"ஹே என்ன இதுக்கே <span class="null">ஃப்ளாட்டு</span>"<br />
<br />
"வேற என்ன செய்யுறது கண்ட்ரோல் பண்ண முடியலையே"<br />
<br />
"நீ உண்மைலயே பர்ஸ்ட் டைம் தான் அருண்"<br />
<br />
"தமிழ் நீ நம்ப மறுத்தாலும் உண்மை அது தான்"<br />
<br />
"ஓகே ஓகே போ க்ளீன் பண்ணிட்டு வந்து சாப்பிடு,அப்படியே வச்சிருக்க பாரு"<br />
<br />
"எனக்கு போதும் தமிழ், நீ கொடுத்த முத்தமே இன்னும் நாலு நாளைக்கு பசிக்காது"<br />
<br />
"ஹா ஹா ஹா இன்னும் நிறைய இருக்கு இதுக்கே இப்படினா ??? "<br />
<br />
"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ??? "<br />
<br />
"கேளு. பண்ணுறது தப்பு,நினைப்பு மட்டும் சரியா இருந்தா என்ன? தப்பா இருந்தா என்ன? அருண்"<br />
<br />
"இதுவரைக்கும் எத்தனையோ பேர பார்த்து இருப்ப எப்போவாச்சும் ஏன் இப்படி
இருக்கிறோம்னு பீல் பண்ணி இருக்கியா. ஐ மீன் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"<br />
<br />
"இதில் என்ன புரியல இத்தனை பேர் கூட படுக்கிறேயே வெட்கமா இல்லையானு கேட்கிற அப்படி தான ??? "<br />
<br />
"ஹே சாரி தமிழ் மன்னிச்சிடு நான் அப்படி சொல்ல வரல. உன் இடத்தில் இருந்து
உன்னோட வலியை உணர முயற்சி பண்ணுறேன். அதுக்கு நீ என்ன நினைக்கிறன்னு
தெரிஞ்சிக்க தான் கேட்டேன்"<br />
<br />
" வேணா அருண்"<br />
<br />
"........"<br />
<br />
சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. தேவை இல்லாமல் ஏன் இதை கேட்டோம் என்று
நினைத்து கொண்டேன்.ஆனாலும் அவளுக்கு நிச்சயம் ஆறுதலை தந்து இருக்கும்,
அதுவே அவளுடைய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் இன்னும் அவளுக்கு
நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. மௌனத்தை அவள் முடித்தாள்.<br />
<br />
"அருண்
என்னோட வயசு 21, அஞ்சு வருஷம் முன்ன இந்த தொழிலுக்கு வந்தேன்னு சொன்னேன்.
அப்போ பார்த்துக்க 16 வயசுல,எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் அப்போ??? இல்ல
இப்போ மட்டும் என்னத்த தெரிஞ்சிக்கிட்டேன் ??? ஆண்களின் அளவுகளும்,
எண்ணங்களும், வக்கிரங்களும், வாதைகளும் தான் தெரிஞ்சிருக்கு."<br />
<br />
"...."<br />
<br />
"சாரி உன்னை பற்றி சொல்ல வரலை,ஆனா இப்பவும் உன் மேல நம்பிக்கை இல்லை. ஐ
மீன் ஜஸ்ட் என்னை நீ இம்ரஸ் பண்ண தான் நடிக்கிறியோனு தோணுது தப்பா
நினைக்காத, ஏன்னா என் நிலை அப்படி அருண்"<br />
<br />
"புரியுது தமிழ் "<br />
<br />
"ஒவ்வொரு நாளும் எவன் கூடயாவது படுத்து,படுத்து, எதாச்சும் ஒரு நாள் தனியா
இருக்கிறப்போ கூட துணை கேட்கும். அதே போல தினமும் எவன் கூடயாவது படுத்து
இருக்கிறப்போ எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்க மாட்டோமான்னு தோணும். பாரு
இது தான் எங்க வாழ்க்கை"<br />
<br />
"என்ன சொல்லுறதுன்னு தெரியலபா "<br />
<br />
"அதுவும் பீரியட் டைம்ஸ் இருக்கே ஐயோ நரக வேதனை. அதை எப்படி சொல்லுறதுன்னு
தெரியல அருண் ..... வேதனையே அப்படின்னு இருக்கிறப்போ எந்த தேவுடியா
பயலாவுது வந்து இவ தான் வேணும்னு டார்ச்சர் செஞ்சி புரிஞ்சிக்காம தெரிஞ்சே
அழைச்சுட்டு போயிடுவான். அப்புறம்....."<br />
<br />
" வேணாம் வேணாம் தமிழ் ப்ளீஸ் ...."<br />
<br />
இந்தமுறை அவளின் அழுகை மிக சத்தமாக ஒலித்தது. என் மடியில் முகத்தை
புதைத்து கொண்டு அழுகிறாள். அப்பொழுது தான் அவளின் முதுகை பார்க்கின்றேன்,
ஐயோ என்னது இப்படி இருக்கின்றதே????? என்னை கட்டுபடுத்த இயலாமல் கண்ணீர்
வந்துவிட்டது. அப்பொழுது என்னுடைய இதயத்துடிப்பை உணர்ந்தது நான் மட்டும்
அல்ல அவளும் தான். என் கண்ணீர் அவளின் முதுகை தொட்டதும் அவள் எழுந்து
விட்டாள்.மீண்டும் தனித்து சென்று சுவர் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.<br />
<br />
" அருண் சாரிபா நீயே சந்தோசமா இருக்க தானே வந்த நான் உன்னை டென்ஷன் ஆக்கிட்ட போல"<br />
<br />
அவள் கேட்டது என்னவோ எனக்கு காதில் விழுந்தாலும், எனக்கு அவள் முதுகில்
இருந்த காயமே தெரிகின்றது. வரி வரியாக சிவப்பு நிறத்தில் இரண்டு
பக்கங்களிலும் இருந்தது. எப்படி அது உருவாகி இருக்கும். இந்த படத்தில்
வரும் ட்டார்ச்சர் செக்ஸ் என்பது எல்லாம் உண்மையாவே இருக்கின்றதோ. அப்படி
வக்கிரமான எண்ணத்துடன் இருப்பவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ?. அனுபவிக்க
தான் பெண் சுகம் என்பதெல்லாம் இவர்களிடத்தில் இல்லையோ. ஒரு பெண்ணை விலை
கொடுத்து வாங்கி அவளை எப்படி துன்புறுத்த மனம் தோன்றுகிறது. அந்த தேவுடிய
பசங்களுக்கு பெண்மையின் அர்த்தம் ஏன் விளங்காமல் போனது. விலை மாதுவாக
இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ??? ஒரு நொடி அவள் நிலையில்
இருந்து ஏன் யோசிக்க நினைப்பதில்லை??? இப்படி என்னுள் தோன்றிய காட்டமான
எண்ணங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற தோன்றியது.<br />
<br />
"தமிழ் எனக்கு மனசு
சரி இல்லை நான் கிளம்புறேன். நீ வருத்தபடுவது போல எதாவுது நான் நடந்து
இருந்தால்.தயவு செய்து என்னை மன்னித்துவிடு தமிழ் ...!!! "<br />
<br />
"அருண் ஏன் என்ன ஆச்சு ப்ளீஸ் போகாத "<br />
<br />
"இல்ல தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இங்க இருந்தா நான் அழுதிடுவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ்"<br />
<br />
"அருண் நீ போனா எனக்கு தான் பிரச்சனை ப்ளீஸ் புரிஞ்சிக்க கஸ்டமரா
விட்டுட்டேன்னு என்ன டார்ச்சர் பண்ணுவாங்க " கலங்குகிறாள் அழகு தமிழ்.<br />
<br />
என்ன செய்வது என்ற யோசனையில் என்னிடம் இருந்த சிகிரெட் காலியானது. அவளிடம் அருகே சென்று அவளை பெட்டில் படுக்கவைத்து விட்டு.<br />
<br />
" தமிழ் நான் போகவில்லை , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜஸ்ட் நான் கடைக்கு போயிட்டு வரேன் ஓகே "<br />
<br />
"நானும் வரேன் அருண் "<br />
<br />
"வேணாம்பா சத்தியமா நான் போகமாட்டேன் நீ தூங்கு, நான் டிரிங் பண்ணபோறேன் ஸோ ஒன்லி சாரி "<br />
<br />
"ஓகே இங்க வந்து சாப்பிடு ப்ளீஸ் வெளியவேணாம் "<br />
<br />
"ஓகே உனக்காக "<br />
<br />
அவளிடம் என்ன இனி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் தூங்கிவிட்டால்
போதும் என்றே தோன்றியது. இப்படியே சென்றுவிடலாமா என்று கூட நினைத்தேன்,
பாவாம் அவள் இதுவால் ஏதாவது பிரச்சனை வந்து இன்னும் கஷ்டபடுவாளே. மீண்டும்
அறைக்கே சென்றேன் இம்முறை எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கின்ற மதுவுடன்.
பின்னர் மதுவோடு நான்கு மணி நேரம் உரையாடி கொண்டு இருந்தேன். தமிழ்
விளித்து விட்டாள். அருகே வந்து ஆதரவாக என்னை அணைத்தாள்.<br />
<br />
"வா அருண் "<br />
<br />
" வேணாம் தமிழ் மப்பு ஓவரா இருக்கு நா கிளம்பலாமா"<br />
<br />
"அருண் நீ ஒன்னுமே செய்யலடா "<br />
<br />
"ப்ளீஸ் என்னை கம்ப்பெல் பண்ணாத சாரி தமிழ்"<br />
<br />
அவளிடத்திலும் எதுவும் வார்த்தை இன்றி கிளம்ப ஆயத்தமானாள். அவள் கையில்
சில பணத்தாள்களை திணித்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றேன். அவள் மேல்
இருந்த அன்பினால், மீண்டும் அவளை சந்திக்க கூடாது என்றே நினைத்து கொண்டு
சென்றேன்,<br />
<br />
ஆனால்<br />
<br />
சில நாட்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்க சென்றேன்.....<br />
<br />
தொடரும்</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2Singapore1.352083 103.819836000000010.8441055 103.174389 1.8600605 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-23858927468589538832014-10-16T00:48:00.002-07:002014-11-20T22:07:16.978-08:00கதை உண்மையாகுமா ????-------2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அவளுடைய தொலைபேசியில் ஹப்பி என்ற பெயரில் அழைப்பு வருவதை நான் பார்த்தேன், அவள் என்னை பார்த்து சிரித்தாள். எடுத்து அவனோடு சில நேரம் பேசினால். நான் அதற்குள் அறையில் இருக்கும் பால்கனி சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து அடிக்க தொடங்கினேன் . என் மனம் என்னன்னவோ யோசிக்க தொடங்கிற்று, ஏன் இங்கே வந்தேன்? பின் ஏன் வருத்தபடுகிறேன் ?அவர்களுக்காக நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? அட வந்தது தான் வந்தாச்சு ஒரு தடவ செஞ்சுட்டு போயிட வேண்டியது தான் என்று இறுதியாக முடிவு செய்து விட்டேன். அதற்குள் சிகரட் சரியாக முடிய, அவள் என்னை பின்னால் இருந்து மென்மையாக கட்டிக்கொண்டாள். முதல் முறை பெண்ணால், என் உடல் வெப்ப மயமானது. அவளுடைய அங்கங்கள் என்னோடு உரசுமிடையில் இனம் புரியா ஒன்று என்னை தூண்டி அவளிடம் இருந்து மெதுவாக விடுபட்டேன் முழுமையாக அல்லாமல் என் கைகளை மட்டும் அவளிடம் கொடுத்து இருந்தேன்.<br />
<br />
பின்னர் கேட்டேன் "எத்தனை வருஷமா இப்படி இருக்க "<br />
<br />
"ஹ்ம்ம் 5 வருஷம் ,சரி பசிக்குது எதாச்சும் ஆர்டர் பண்ணுறியா "<br />
<br />
"ஹே முன்னயே சொல்லிருக்கலாம்ல நான் கூட மறந்துட்டேன் இரு ஆர்டர் பண்ணுறேன் உனக்கு என்ன பிடிக்கும் ? "<br />
<br />
"உனக்கு பிடிச்சதே சொல்லு டார்லிங் "<br />
<br />
"டார்லிங் வேணாம் எனக்கு சிரிப்பா வருது "<br />
<br />
"டார்லிங் தான் எங்களோட வாழ்கையே "<br />
<br />
"ஹ்ம்ம் சரி பிரியாணி மட்டன் ஓகே வா "<br />
<br />
"ஹ்ம்ம் ஓகே "<br />
<br />
ரிஷப்சனுக்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அவளை பார்த்தால் , என் முகம் வேர்த்து விட்டது. ஆடை ஏதும் இல்லாமல் உள்ளாடைகளுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு என்னை ஏற இறக்கமாக பார்த்து கொண்டு இருக்கின்றாள். என்ன செய்வது என்று புரியாமல் முகத்தை துடைத்து கொண்டு அவள் அருகில் நெருங்குகிறேன். இடது பக்க மார்பில் ஏதோ பற்களால் கடித்தது போல நன்கு தெரிகின்றது அவளின் நிறத்திற்கு, ஆனால் அதை பற்றி யோசிக்க எனக்கு தோன்றவில்லை. முழுமையாக இப்பொழுது நான் ஒரு பெண்ணை அனுபவிக்க போகிறேன் என்ற குற்றவுணர்வு கூட என்னை விட்டு விலகி என்னுடைய பசிக்கு பலியாகி போனது. அவளும் அப்படியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றி இழுத்து அனைத்து கொண்டாள்.<br />
<br />
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்<br />
<br />
திடுக் என்று அவளிடம் இருந்து விலகினேன்.அவளோ ஹே லஞ்ச் டியர் என்று என்னை சமாதானபடுத்தினாள்.<br />
<br />
இருவரும் ஒன்றாக குளிக்கலாம் வா என்று என்னை அழைக்க, நானோ வேண்டாம் என்று தவிர்த்து விலகினேன். அவள் குளித்து கொண்டு இருக்கும் போது ஏனோ தெரியவில்லை தெரியாமல் பார்க்கலாமா என்று தோன்றியது. அதுக்காக சில நிமிடங்கள் வெட்கப்பட்டேன். இப்படி கேவலமான எண்ணங்கள் ஏனோ தெரியவில்லை அடிக்கடி எனக்கு வரும். அது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்குமா என்று கூட தெரியவில்லை.<br />
குளித்து முடித்து விட்டு வெறும் டவலோடு வந்தாள். அவள் அழகில் தலை சுற்றி போனால் ரசிக்க முடியாது என்று நிற்கும் மரமாகி போனேன். அருகில் வந்து கன்னங்களை கிள்ளி சென்றாள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQndpXejyvx5kd-KbIivgN6FlQ_5wO2FUb7je6xqSNI9xNb09wLT4yRNdYDL1Lgw687TSTurkV4oqaIkecWD79ZIEsBeLAdD1yZGTzfJ8ILkbK8vEC-7-zxBsFGwzAfI83-Tz1b4yr-yQ/s1600/tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQndpXejyvx5kd-KbIivgN6FlQ_5wO2FUb7je6xqSNI9xNb09wLT4yRNdYDL1Lgw687TSTurkV4oqaIkecWD79ZIEsBeLAdD1yZGTzfJ8ILkbK8vEC-7-zxBsFGwzAfI83-Tz1b4yr-yQ/s1600/tamil.jpg" /></a></div>
<br />
அந்த மயக்கத்தோடு நானும் குளிக்க சென்றேன். குளிக்கும் போது இன்னொரு கேவலமான எண்ணம் நண்பன் சொன்னது நினைவில் வந்தது, "மச்சி மேட்டருக்கு முன்ன தனியா போகி செல்பி போட்டுறு அப்போ தான் நீ பண்ணுறப்போ லேட் ஆகும் செம்மையா இருக்கும் ". அடச்ச என்னடா இது இப்படியே தோணுது என்று வெறுப்பாகி சீக்கிரம் குளித்து விட்டு வந்தேன்.<br />
<br />
சரிவா சாப்பிடலாம் என்று கூறி கொண்டே எடுத்து வைத்து கொண்டு இருந்தாள், இம்முறை அரை அடி உள்ள டவுசர் அதுவும் எனக்கு பிடித்த பிங்க் கலர் மேலே அதற்கு மேட்ச்சான ஒரு அடி உள்ள டி-ஷர்ட். அற்புதமாக இருந்தாள் தமிழ்.<br />
<br />
“ஏன் காலையில சாப்பிடலையா தமிழ் ???”<br />
<br />
"இல்ல ஏன் கேட்குற "<br />
<br />
"ரொம்ப பசில இருக்குற மாறி இருக்கியே அதான் வேற ஒன்னும் இல்லை"<br />
<br />
"நீ என்ன கூப்பிட்டு வரலைனா எனக்கு இப்ப வரைக்கும் சாப்பாடு கிடைச்சு இருக்காது "<br />
<br />
"புரியல தமிழ் "<br />
<br />
"அது அப்படி தான் கஸ்டமர் வாங்கிதறது இல்ல அவுங்க தர டிப்ஸ் வச்சி சாப்பிடுறது அது தான் எங்களுக்கு சாப்பாடு "<br />
<br />
ஒரு நிமிடம் மொத்தமுமாக அதிர்ந்து தான் போனேன்.<br />
<br />
"அப்போ யாருமே உன்ன எடுக்கலைனா ? "<br />
<br />
"அவ்வுளோதான் தண்ணீர் தான் சாப்பாடு "<br />
<br />
"உங்க ப்ரெண்ட்ஸ் அவுங்களும் இப்படி தானா? "<br />
<br />
"ஆமா எல்லாருக்கும் இப்படி தான் எனக்கு பரவா இல்லை எப்படியாச்சும் யாராச்சும் வந்துருவாங்க "<br />
<br />
அவள் சொல்லுவதின் அர்த்தம் புரிந்தது முன்னயே சொன்னது போல அவலட்சணமான பெண்கள் இந்த தொழிலில் எப்படி தான் இருப்பார்களோ என்று மீண்டும் வருத்தப்பட்டு கொண்டே அவளிடம் கேட்டுவிட்டேன்.<br />
<br />
"அப்படி இல்லை கொஞ்சம் கஷ்டம் தான் இப்போ சில பேர் நல்ல அழகான பொண்ணுங்கள எடுக்க மாட்டாங்க ஏன்னா சரியான கம்பெனி இருக்காது என்று நினைப்பாங்க அப்படி இருக்குறவுங்க இவங்களை போன்றவர்களை எடுப்பாங்க கம்பெனி நல்லா இருக்கும் அப்படின்னு அதே போல நல்லா பார்த்துபாங்க "<br />
<br />
"ஓஹோ இது வேறயா என்ன இருந்தாலும் அவுங்க பாவம் பா "<br />
<br />
"இவ்வுலோ பேசுற நீ அவுங்கள எடுத்து இருக்க வேண்டியது தானே "<br />
<br />
அவள் முன் வெட்கி தலை குனிந்தேன்.<br />
<br />
"நானும் சராசரி மனுஷன் தானே முதல் முறை அழகான பொண்ண தான் பார்க்கணும் அப்படின்னு நினைச்சேன் ஆனா அவுங்கள பாக்குறப்போ வருத்தமா இருந்துச்சு நான் என்ன பண்ணுறது "<br />
<br />
"ஹே ஹே கூல் நான் சும்மா சொன்னேன் "<br />
<br />
"உங்க லைப் நிஜமாவே ரொம்ப பாவம் தமிழ்"<br />
<br />
அவளின் கண்கள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.முகத்தை மூடிக்கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்.தேவை இல்லாம அவளையும் கஷ்டபடுத்திட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.அவளோ மீண்டும் அந்த பழைய சிரிப்புடன் வந்தாள்.<br />
<br />
"அருண் என்ன ரொம்ப நெருங்கி வர "<br />
<br />
"அப்படி இல்ல தமிழ் தெரிஞ்சிக்க தான் "<br />
<br />
"நல்ல பையனா இருக்குற அப்புறம் ஏன் இப்படி "<br />
<br />
"எல்லாம் வயசு கோளாறு 27,28 வயசு ஆகுது கல்யாணத்த பண்ணி வச்சா நான் ஏன் இங்க வாரேன், ஆமா உனக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை ஹப்பி காளிங்குனு வந்துச்சு "<br />
<br />
" அதுவா நேத்து வந்த கஸ்டமர் அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அவரே என் போன்ல ஹப்பினு சேவ் பண்ணிட்டு போனாரு, நாளைக்கு வரேன்னு சொல்லுறான் நாய் நான் வேணாம்னு சொல்லிட்டேன்"<br />
<br />
"ஏன் தமிழ் "<br />
<br />
"அவன் டார்ச்சர், அதை பண்ணு இதை பண்ணு, இப்படி அப்படின்னு சாவடிச்சிடுவான் "<br />
<br />
"புரியுது தமிழ் "<br />
<br />
"அப்புறம் இப்படி நாங்களே ஹப்பினு ஒரு நம்பர் வச்சிக்குவோம் ஒரு சில சமயம் அது எங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அவசரத்துக்கு"<br />
<br />
இதை எல்லாம் ஏன் என்ட சொல்லுறா??? என்று யோசிக்கும் போது, எதிர்பார்த்து இருந்தது போல என் இதழ்களை கவ்வினாள்...<br />
தொடரும்</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-14615338757101139792014-10-14T22:27:00.001-07:002014-11-20T21:54:33.654-08:00கதை உண்மையாகுமா ????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: left;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"> தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????</span></span><br />
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">
<br /></div>
</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMnHAmFtldejOWdS0DkbOhBqoBH8XKzSP2uJNDfLo2f5KSf4HL3mnqVoD6JFwzWyrB2W-0RKquuJOe_sYQOn-VuJQ4z6L-6VRS7Fcp013dtNOzMfRh44SZTAymZ6kHzI1f4khPi9q7WYs/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMnHAmFtldejOWdS0DkbOhBqoBH8XKzSP2uJNDfLo2f5KSf4HL3mnqVoD6JFwzWyrB2W-0RKquuJOe_sYQOn-VuJQ4z6L-6VRS7Fcp013dtNOzMfRh44SZTAymZ6kHzI1f4khPi9q7WYs/s1600/images.jpg" height="565" width="640" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: left;">
<br /></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"> இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"> இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.</span></span><br />
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></span>
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.3199996948242px;">பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்............</span></span></div>
<div style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-top: 6px;">
தொடரும்</div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-46776935569606811382014-08-01T11:29:00.000-07:002014-08-01T11:29:41.508-07:00ஜிகர்தண்டா - MASS + COOL<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த மூன்று மாதங்களாக எத்தனை படம் பார்த்தாலும் அது பற்றி சிலாகித்து எழுத வேண்டும் என்று தோன்றவில்லை , இன்று படம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடத்திலேயே நிச்சயம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் போட்ட டைட்டில்ஸ் போதும் அது பற்றியே நாலு பத்தி எழுதலாம் அந்தளவுக்கு அதை ரசிக்க வைத்து விட்டார். முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இது நிச்சயம் மிக தைரியமான முயற்சி அதில் வெற்றி பெறுவது பார்வையாளர்களாகிய நம் கையில் தான் உள்ளது. நான் பார்த்த திரைஅரங்கில் என்ன மாதிரியான மனநிலையில் எல்லோரும் சென்றார்கள் என்பதை இறுதில் சொல்லுகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqB7NqUxDpEqSDBr5jiGsbjMPLFJzid86TFcy9jlcSDdHZGYptYPegvJJQWx4u-WIAU5VALnVk_OkRSj8f_oE4jv_4ZyYvVreQe7Mnva-KiVhxJGZdLGW6sD-j7GrpY_faXXTXuE1z7LI/s1600/Jigarthanda-movie-stills-17.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqB7NqUxDpEqSDBr5jiGsbjMPLFJzid86TFcy9jlcSDdHZGYptYPegvJJQWx4u-WIAU5VALnVk_OkRSj8f_oE4jv_4ZyYvVreQe7Mnva-KiVhxJGZdLGW6sD-j7GrpY_faXXTXuE1z7LI/s1600/Jigarthanda-movie-stills-17.jpg" height="640" width="504" /></a></div>
<br />
குறும்பட போட்டியில் தோற்றவனுக்கு அம்மேடையிலையே முழுநீள திரைப்படம் எடுக்க வாய்ப்பு வருகிறது, அதற்காக அவன் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறானா என்பதே கதை,எப்பொழுதும் கதை சொல்லுவது எனக்கு பிடிக்காது என்றாலும் இப்படம் பற்றி கூறும்பொழுது கதை ஒரு விஷயமே இல்லை என்பதால் தான் கூறுகிறேன்.முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படைப்பு. கதாபாத்திரங்களின் தேர்வு , காட்சி நேர்த்தி , இசை , கலை , எடிட்டிங் என்று மிக கச்சிதமாக வேலை வாங்கி உள்ளார்.<br />
<br />
சித்தார்த் இந்த படத்தில் நடிக்க ஒற்று கொண்டதற்கே அவரை பாராட்டலாம் , அவரைவிட மற்றவர்களுக்கு தான் இப்படத்தில் நிறைய ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ளது. லக்ஷ்மி மேனன் மேக் அப் இல்லாமல் பார்க்க சகிக்கவில்லை, கலகலப்பாக சென்று கொண்டு இருக்கும் காட்சிகளில் இவர்களின் காட்சிகள் தான் பெருந்தடையாக இருந்தது இறுதிவரை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY2D8I4yqInXuX3glA7zwWyVZBhyphenhyphenJ792dK9CqrUkdsuPCoKujUpQGSDkIAIpVWxhyphenhyphen2Pl0kUfCA1MAag6gteweDo1ybimaZRldQ4eoVkSmInqegyqtnMrfPnU130UOaA_XfjYD8TuGisyw/s1600/Jigarthanda_03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY2D8I4yqInXuX3glA7zwWyVZBhyphenhyphenJ792dK9CqrUkdsuPCoKujUpQGSDkIAIpVWxhyphenhyphen2Pl0kUfCA1MAag6gteweDo1ybimaZRldQ4eoVkSmInqegyqtnMrfPnU130UOaA_XfjYD8TuGisyw/s1600/Jigarthanda_03.jpg" height="532" width="640" /></a></div>
<br />
சிம்ஹா அசால்ட் சேதுவாக சும்மா சிங்கம் போல நடிச்சு இருக்கார் , அரங்கம் அதிர்கின்றது முதல் பாதியில் அவரின் காட்சிகளுக்கு, அதுவும் சேதுவை போட வந்தவன் தவறுதலாக இன்னொருவனை போடும் காட்சியில் பின்னணியில் அதை சேது காணும் பொழுது பின்னணி இசையோடு சேதுவின் பார்வையில் செம்ம கெத்து சீன , அதுபோல அவரின் வீட்டில் கொலை செய்துவிட்டு பின்னர் போலீசிடம் பேசி கொண்டு இருப்பது என்று முதல்பாதி முழுக்க அவரின் ராஜாங்கமே அதுவும் இடைவேளை ட்விஸ்ட். கிளாஸ் பிளஸ் மாஸ் படம் டோய் என்று எல்லோரும் கைதட்டி கொண்டே சென்றனர்.<br />
<br />
இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாம் நிமிடம் படம் அப்படியே வேறுஒரு கோணத்திற்கு செல்ல தொடங்கிவிட்டது சிறிது நேரம் முதல் பாதியில் இருந்த அந்த ஆர்வம் இதை ஏற்று தயங்கினாலும் பின்னர் இயக்குனரின் கைவண்ணத்தில் அதனுள்ளும் நம்மை இழுத்து கொண்டு சென்று விடுகிறார். அது தான் படத்தின் சிறப்பே.<br />
<br />
ஊரணி என்று வரும் கருணாகரன் படத்திற்கு படம் பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கின்றார். படம் முழுக்க ஹீரோவுடன் வந்து நிஜமாகவே செகண்ட் ஹீரோ கூடியவிரைவில் ஆகிவிடுவார் போல. அதுவும் அவர் கனவு கண்டு பதறும் காட்சிகள் , அடியாட்களுக்கு எப்படி மிரட்ட வேண்டும் என்று டிப்ஸ் தரும் காட்சி , நடிப்பு கற்று கொள்ளும் இடங்கள் எல்லாம் அரங்கில் சிரிப்பதிர்வு அடங்க பல நிமிடங்கள் ஆனது.<br />
<br />
சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு வழியை தமிழ் சினிமாவிற்கு வகுத்துள்ளார். சேதுவிற்கு போடும் பின்னணி இசை அட்டகாசம் அதே போல இடைவேளைக்கு முன் நடக்கும் செம்ம ட்விஸ்ட் காட்சிகளுக்கும் அஃதே. படம் முழுக்க பின்னணி இசை பின்னி பிடலேடுக்கின்றது. அதிலும் பாண்டிநாட்டு கொடியின் மேலே பாடல் இந்த ஆண்டின் சிறந்த குத்து சாங்.<br />
<br />
கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் A FILM BY KARTHIK SUBBURAJ என்று போட்டு கொள்ள முழுதகுதியானவர். கடைசி அரை மணி நேரம் பார்வையாளர்களின் எண்ணங்களை திரையில் கொண்டு வராமல் தன்னுடைய படம் என்று காட்சிகளால் அழுத்தமாக புரியவைத்துவிட்டார். படம் நல்ல வெற்றி பெற்றால் (???) நிச்சயம் அவரின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAX5yTnm0KkTSEFPgTDCbbCYSMOmdnuynvr8ZpV60NclDbBnSEB0qywmzjM5Sbxa9Ho6vucC4ih3piWMGZHzLcFp50Nka4kxp2tz_KeW3-VkD_KyfZr56AFhsQi1iT0-AMb3IQyNGTuC8/s1600/jigarthanda-working-stills-siddharth-lakshmi-menon-karthik-subbaraj-007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAX5yTnm0KkTSEFPgTDCbbCYSMOmdnuynvr8ZpV60NclDbBnSEB0qywmzjM5Sbxa9Ho6vucC4ih3piWMGZHzLcFp50Nka4kxp2tz_KeW3-VkD_KyfZr56AFhsQi1iT0-AMb3IQyNGTuC8/s1600/jigarthanda-working-stills-siddharth-lakshmi-menon-karthik-subbaraj-007.jpg" height="426" width="640" /></a></div>
<br />
எப்பொழுதுமே ஒரு படத்தின் உண்மையான வெற்றி இறுதியில் போடப்படும் இயக்குனரின் பெயருக்கு கிடைக்கும் கைதட்டலே, இங்கே இன்று நான் கண்ட இரவுக்காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் பெயருக்கு இறுதியில் அரங்கம் அதிர கைதட்டல் கிடைத்தது. இது போல நம்ம ஊரிலும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராவலுடன் இருக்கின்றேன்.<br />
<div>
<br /></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-50421166754710046892014-04-28T00:49:00.000-07:002014-05-14T05:06:44.793-07:00நான் அஜித் ரசிகன்- 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://arjiththala.blogspot.com/2014/04/1.html" target="_blank">முந்தைய பகுதி</a><br />
<br />
காட் பாதர் படம் படபிடிப்பில் இருந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னுமொரு பரபரப்பான செய்தி வெளிவர தொடங்கியது நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க போகிறார் அதற்காக உடல் இளைத்து , முடி வளர்த்து கொண்டு இருக்கின்றார் என்று தினசரிகளில் பரபரத்தது. எங்களுக்கெல்லாம் இது போதும் பாலா படத்தில் நடித்தால் அது அஜித்தின் உச்சமாக இருக்கும் என்று நினைனைத்து கொண்டு ஆர்வமோடு விவாத்திப்போம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLzQJpqpX9d7UIXgoLFuBKfWzUV-ON_gUQrSna18cDtEKWTMyBNAoVvEcmMp1RQjV8UlaKg2z6IXYp-gknLTSDEkf-f3CIKJ1gj-eElpYCdQ9K-O9to7pA-gX7nUYE8lHev2EePEXqFbc/s1600/Ajith+Kumar-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLzQJpqpX9d7UIXgoLFuBKfWzUV-ON_gUQrSna18cDtEKWTMyBNAoVvEcmMp1RQjV8UlaKg2z6IXYp-gknLTSDEkf-f3CIKJ1gj-eElpYCdQ9K-O9to7pA-gX7nUYE8lHev2EePEXqFbc/s1600/Ajith+Kumar-3.jpg" height="640" width="630" /></a></div>
<br />
2005ல் கல்லூரி சேர்ந்தமையால் அங்கேயும் அஜித் என்ற நடிகருக்காக என் குரல் ஓங்கியே ஒலிக்கும் நண்பர்கள் மத்தியில். அப்போது தயாரிப்பாளர் பிரச்சனை என்றும் அஜித் பல நெருக்கடிகளுக்கு உள்ளான நேரம். அதுவரையில் அவரின் ஆதர்சன தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் பிரச்சனைகளுக்கு காரணம் என்று செய்தி வந்தது பல இடத்தில் இருந்து. இடையில் உடல் இளைத்த அஜித் வாசு இயக்கத்தில் நடித்த பரமசிவன் 2006 பொங்கல் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை அவ்வாறு கண்டதே நிறைவு என்ற ரீதியில் தான் படம் இருந்தது.<br />
<br />
2006 ஏப்ரல் திருப்பதி , பேரரசு இயக்கத்தில் வெளிவந்தது திருப்பாச்சி , சிவகாசி என்று வெற்றி படம் கொடுத்து இருந்தமையால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் பி & சி கிளாசில் நல்ல வெற்றி படமாக அமைந்தது. ஆனால் எனக்கு பிடிக்கவில்லை இத்திரைப்படம். இடையில் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார் , ஏகபட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அஜித் அமைதியாக இருந்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் ரசிகர்களை வைத்து பகடைக்காயாக உருட்டுவோருக்கு மத்தியில் தன்னால் யாரும் துன்புற்ற கூடாது என்ற ரீதியில் அஜித் இருந்தது அவரின் மேல் அளவளாவிய பற்று கொள்ள தூண்டியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitGWET90pW7XfgnWYlMxw2zZ5sKqjrqukeUWAtDG_RfF8mMDSMDA-pYIxvocuUbHpY6b_HkIv4-1O5kh-EmsZKpYnVBQvhffZ5XZypcbWr4TXfIJWhOHR5UOxUueV45WSPtzR2vZfurwg/s1600/682f33658ed6edff78cffb1604544ded.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitGWET90pW7XfgnWYlMxw2zZ5sKqjrqukeUWAtDG_RfF8mMDSMDA-pYIxvocuUbHpY6b_HkIv4-1O5kh-EmsZKpYnVBQvhffZ5XZypcbWr4TXfIJWhOHR5UOxUueV45WSPtzR2vZfurwg/s1600/682f33658ed6edff78cffb1604544ded.jpg" height="640" width="500" /></a></div>
<br />
2006 தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம், நீண்ட சிக்கலுக்கு பிறகு வெளியீடு கண்டது காட் பாதர் இம்முறை வரி விளக்கிற்காக தமிழ் பெயரில் வரலாறு என்று. முதல் நாள் பள்ளி நண்பனுடன் தஞ்சை ஜுபிடெரில் முதல் காட்சி. படம் தொடங்கியதில் இருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது இடைவேளை காட்சியில் மொத்த திரைஅரங்கமும் அதிர்ந்தது. இடைவேளை முடிந்து அடுத்த 15 நிமிடங்களில் இரண்டு அஜித் மோதிக்கொள்ளும் காட்சி அது , தன்னுடைய இருக்கையில் இருந்து ஒரு அஜித் எழும்போது திரைஅரங்கில் உள்ள 650 நபர்களும் எழுந்து நின்று ஆர்பரித்த போது முதல் முறை எனக்கு மயிர் கூச்செறிந்தது, திரைப்படத்தை காணும் நிமிடத்தில்.நான் மேற்கூறிய காட்சி, இந்த லிங்கில் காணுங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='640' height='360' src='https://www.youtube.com/embed/7ndJiIxSjiE?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
பின்னர் கல்லூரி சென்று அந்த நண்பர்களுடன் திருச்சி மெகா ஸ்டாரில் நாலு முறைக்கு மேல் கண்ட திரைப்படம். அவ்வருடத்தின் பிலிம் பேர் சிறந்த நடிகருக்கான விருது வரலாறு படத்திற்காக அஜித்திற்கு கிடைத்தது. அவ்வருடமே தொடங்கப்பட்ட விஜய் அவார்ட்ஸ்சில் ஆதர்ச நாயகன் விருதும் இப்படத்திற்காக அஜித் அவர்களுக்கே கிடைத்தது. இன்று வரை அது போன்ற மாஸ் & கிளாஸ் அஜித் -கே.எஸ் .ஆர் கூட்டணி எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றனர் என்னை போலவே பல ரசிகர்கள்.<br />
<br />
2007 பொங்கல், வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற மிக பெரிய வெற்றியை கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா தோல்வியை சந்தித்தது.அப்பொழுது உடன் வெளியான போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8v1QFO0kLul2MTNTsSrrJxcUAX0z5-AOBDbGGwdmmjsP-HbYes85LpG6Cnshd1OFe3AegaKNkpLGepi56py3LqaRrt32T-M3DNuen93XCaI0knzVsSDSTrYUWzIN-x9y4qIq9JhGX-Ak/s1600/kireedam-chennai.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8v1QFO0kLul2MTNTsSrrJxcUAX0z5-AOBDbGGwdmmjsP-HbYes85LpG6Cnshd1OFe3AegaKNkpLGepi56py3LqaRrt32T-M3DNuen93XCaI0knzVsSDSTrYUWzIN-x9y4qIq9JhGX-Ak/s1600/kireedam-chennai.gif" height="640" width="574" /></a></div>
<br />
2007 ஜூலை 7 , கிரீடம் வெளியானது மீண்டும் புதுமுக இயக்குனர் என்ற பயம் வேறு அதிகமாக இருந்தது ஆனால் என்னை மட்டும் என்று அல்லாமல் பெரும்பாலான ரசிகர்கள் பிளஸ் குடும்பங்களை இப்படம் கவர்ந்தது. இன்றைக்கும் சன் மியூசிக் , இசை அருவி என்ற மியூசிக் சேனல்களில் இப்படத்தின் பாடல் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல்கள் ஹிட் அடித்தது. இப்படத்தில் இடைவேளை சண்டை காட்சி & கிளைமாக்ஸ் அஜித் நடிப்பில் இன்னுமொரு பரிமாணமாக இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj15A4UkNdFo0DiCU7LaJznKUtuTx5x7ap3u3wxD9eLNNGRWer30AxKNT2eYxJRPdGgOBnif0p3qRkRi2sYhYGchAgakEp8kxeyobV4hMrQwbjRFSLqv0y-_kJ32jqsB9Jn0uJrQNoYwQM/s1600/billa02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj15A4UkNdFo0DiCU7LaJznKUtuTx5x7ap3u3wxD9eLNNGRWer30AxKNT2eYxJRPdGgOBnif0p3qRkRi2sYhYGchAgakEp8kxeyobV4hMrQwbjRFSLqv0y-_kJ32jqsB9Jn0uJrQNoYwQM/s1600/billa02.jpg" height="640" width="394" /></a></div>
<br />
2007 டிசம்பர் பில்லா வெளியீடு கண்ட மாதம் ,திருச்சி டிசம்பர் 14 அதிகாலை டீ கடையில் தெரிந்தது பில்லா படத்தின் எதிர்பார்ப்பு. அந்தளவுக்கு முதல் முறை அஜித் படத்திற்கு எல்லாவிதமானவர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். எங்கள் கல்லூரி நண்பர்களுடன் திருச்சி கலையரங்கில் 25நபர்கள் ஒரே வரிசையில் கண்டு ஆராவரம் செய்த திரைப்படம் பில்லா. இந்த ஒரே படத்தின் மூலம் அஜித் கிராப் எங்கோ சென்று யாரும் மறுக்க முடியா உண்மை. ஆனால் இப்படத்திற்கு பிறகு தான் நடராஜா சர்வீஸ் என்று கூட கூறபடுகிறார் என்பது பொறாமையின் மிச்சமே.<br />
<br />
2008 தீபாவளி ஏகன் இன்று வரை நாங்கள் ஒருபடத்திற்காக அதிகபட்ச்ச விலை கொடுத்து திருச்சியில் பார்த்தது , ரம்பா திரைஅரங்கில் 250ரூபாய் முதல் நாள் முதல் காட்சி. அதிலும் ஒருசில நண்பர்கள் பின்னர் 350வரை கூட கொடுத்த வந்தனர். எல்லாம் பில்லா செய்த மாயம். இப்படம் கூட அஜித்தின் புது வகையான கதை தேடலை காட்டியது. தன்னுடைய நிஜ உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் கதை தேடியது இப்படத்தில் தான் தொடங்கியது போல. ஆனால் இதுவும் ஒரு சராசரி படமாக தான் அமைந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிவந்த அசல் திரைப்படம் கூட தோல்வியில் தான் முடிந்தது. இப்படி அஜித் தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியாமலேயே முன்னணி நடிகராக இருந்து கொண்டது பலரை வியப்புக்கு உள்ளாக்கியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0BsgAh31tRMGhCUBbLsA8_NpHii0bO60Tn9xgs2DNsohuB9QDb-fYDS_cDF2Q4KlkaywTBLewqN_U5CNxOgOuYMuVz5we8Btf4sXuG0bvyM_MjrfMJCzfZe25va8wb3GDQaRA4mCNiuE/s1600/Mankatha21408.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0BsgAh31tRMGhCUBbLsA8_NpHii0bO60Tn9xgs2DNsohuB9QDb-fYDS_cDF2Q4KlkaywTBLewqN_U5CNxOgOuYMuVz5we8Btf4sXuG0bvyM_MjrfMJCzfZe25va8wb3GDQaRA4mCNiuE/s1600/Mankatha21408.jpg" height="640" width="600" /></a></div>
<br />
<br />
2011,31 ஆகஸ்ட் மங்காத்தா , அஜித்தின் திரைவாழ்வில் மிக பெரிய திருப்புமுனை கொண்ட நாள். இதே போன்று காத்து இருந்து பெற்ற வெற்றி படங்கள் வில்லன் , வரலாறு , பில்லா போன்றவைகள் அப்படத்திலேயே முடிந்து போனது போல் இல்லாமல் இன்றுவரை தாக்கம் உள்ள திரைப்படம். இந்த காலகட்டத்தில் தான் அஜித் என்ற மனிதருக்கு உள்ள உண்மையான கூட்டத்தை திரை உலகம் கண்டது. மன்றங்களை களைத்த பின்னர் இப்படத்திற்கு இவருக்கு கூடிய கூட்டம் வியப்பின் உச்சமானது அப்போது. சைதை ராஜ் திரைஅரங்கில் தான் ரசிக வெள்ளத்தில் கண்டேன் ரகளையாக.<br />
<br />
பின்னர் வெளியான பில்லா 2 (2012) கூட தோல்வி படம் என்று கூறினாலும் அதற்க்கு கிடைத்த ஒபெநிங் எந்தஒரு படத்திற்கும் கிடைத்தது இல்லை என்பதே நிதர்சனம், சிங்கப்பூரில் நான் கண்ட முதல் அஜித் திரைப்படம். இங்கு கூட பல திரை அரங்குகளில் வெளிகண்ட வகையில் அதை உறுதி செய்தது.<br />
<br />
இதோ இப்பொழுது தான் ஆரம்பம் & வீரம் என்று தொடர்ச்சியாக வெற்றி தந்து ரசிகர்களை சந்தோசத்தில் திளைக்க வைத்து இருக்கின்றார். இனி அடுத்து வரப்போகும் கௌதம் மேனன் படம் என்னவொரு எதிர்பார்ப்பில் இருக்கின்றது என்பதை சொல்லவா வேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdQ8il0YtDxQwIH118DpMCEHQgb_Dz2VCJJyHh4oTz1YyqRQKpm9xuEchmS93UI058RfLv3mwnCEhkcCPUWzcP8ddHSHLedWcEIQDGfWeKBooU24yl9hSeJdG0cnVnohFo0md-ki_uYz4/s1600/feat22-610x330.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdQ8il0YtDxQwIH118DpMCEHQgb_Dz2VCJJyHh4oTz1YyqRQKpm9xuEchmS93UI058RfLv3mwnCEhkcCPUWzcP8ddHSHLedWcEIQDGfWeKBooU24yl9hSeJdG0cnVnohFo0md-ki_uYz4/s1600/feat22-610x330.jpg" height="346" width="640" /></a></div>
<br />
<br />
நான் அஜித் ரசிகன் , என்னவொரு நிலையிலும் எப்பொழுதும் நான் அஜித் ரசிகன். </div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-15653319158604381512014-04-27T21:37:00.000-07:002014-05-14T05:06:44.725-07:00நான் அஜித் ரசிகன்-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
என்னுடைய பால்ய காலத்தில் வீட்டில் ஒளியும் ஒலியும் என்றால் எல்லோரும் ஆஜர் ஆகிவிடுவோம். அப்பொழுது தொடர்ந்து நான்கு வாரங்களாக அந்த பாட்டை போட்டு கொண்டே இருந்தனர்.முதல் முறை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தபொழுது பாட்டைவிட அதில் வந்த நாயகனை மிக பிடித்துவிட்டது . அந்த பாட்டு "உன்னை பார்த்த பின்பு நான்" என்றால் பாடல் காதல் மன்னன் திரைப்படத்தில் இருந்து. அதற்குமுன் எல்லாம் எல்லோரையும் போல விஜயகாந்த் சண்டைக்காக பிடித்ததும் பின்னர் எல்லோரையும் போல ரஜினிகாந்தை பிடித்தது மாறிப்போனது என்றல்லாமல் ரஜினிக்கு பிறகு ஆசை நாயகன் அஜித் என்று ஆனது.பின்னர் தூர்தர்சனில் பவித்ரா (அமராவதி போட்டது போல நினைவே இல்லை) படம் கூட சலிக்காமல் எத்தனை தடவை போட்டாலும் பார்த்த நினைவு எல்லாம் வருகின்றது கொஞ்சம் நினைவோட்டத்தை ஓட்டி பார்த்தால்.இவைகள் ஐந்தாவது படித்த போது என்று நினைக்கின்றேன், 1998 . </div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='640' height='360' src='https://www.youtube.com/embed/fnkxqT8AXhM?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
பின்னர் அமர்க்களம்(1999) திரைப்படத்தை தஞ்சை சாந்தி திரைஅரங்கில் கண்ட பொழுது தான் மிக பிடித்து போனது, மூச்சு விடாம பாடுன பாட்டு அதுக்கு அஜித் பயங்கரமா நடிச்சு இருக்காரு. சண்டைலாம் சூப்பர போட்டுருக்காரு. ரகுவரன் கூட பேசுவாரு பாரு ஆவ்வூனு நண்பர்களிடம் பேசிய ஞாபகம் இப்பொழுது கடந்து போனது தெரிகிறது. இதற்க்கு முன் வந்த வாலி திரைப்படம் கூட தஞ்சை லோக்கல் கேபிள் டிவி ஜென் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIsZhqztmguSJQhvH-UemIM54fwhNFAEY3rAm9qJ6eTyU2v0YIxWsU8Wedh5OlffAtcOe7sp7ulaTz9CMfKAUCV80JrGM4iIERaQIRPa5ERzJiy2HBYi9GOzLqeaexKSqnB1TbDk5HkE0/s1600/Amarkalam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIsZhqztmguSJQhvH-UemIM54fwhNFAEY3rAm9qJ6eTyU2v0YIxWsU8Wedh5OlffAtcOe7sp7ulaTz9CMfKAUCV80JrGM4iIERaQIRPa5ERzJiy2HBYi9GOzLqeaexKSqnB1TbDk5HkE0/s1600/Amarkalam.jpg" height="640" width="444" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அல்டிமேட் ஸ்டார் தல ஆன போது தான் உச்சமானது , தீனா (2001) எட்டாவுது படித்தபொழுது படத்தின் ஸ்டில் வந்த பிறகு சில நண்பர்கள் தேள் செயின் போட்டுவருவது அதை பார்க்கும் பொழுது எனக்கு போட்டு கொள்ள ஆசையாக இருக்கும் ஆனால் அது இறுதி வரை நான் போட்டு கொள்ளவில்லை. படம் பார்க்காமலையே தீனா படத்தை பற்றியே பேசிய காலங்கள். படம் பார்த்த நண்பனை அருகில் அமர்த்தி முழுபடத்தையும் சொல்ல சொல்லி கேட்டு கொண்டே மனதில் பார்த்து கொண்டு இருந்த நேரம். அப்பொழுது தான் இன்னொரு கூட்டம் ப்ரெண்ட்ஸ் படத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது. முதல் முறை போடா அஜித் தான் சூப்பரு என்றும் அவர்கள் ஹ்ம்ம்க்கும் இளைய தளபதி படத்தை பாருங்கடா என்று எங்களை பிரைன் வாஷ் அப்பொழுதே சண்டை ஆரம்பிக்கும் முன்னேயே கூற தொடங்கி இருந்தனர்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh639SrLHCazoUlMFqG2XM3qdt56yuHfoG9pkNgbdSFciKTFTRG3y8q045RuX9X7wyF0OnpV_7TNw_tZLJIINJwN5dihMszPr6IjQlTTVxndriBShyphenhyphenX3gQWE17NWg2u2Q0qYJd6ES1y1zk/s1600/dhee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh639SrLHCazoUlMFqG2XM3qdt56yuHfoG9pkNgbdSFciKTFTRG3y8q045RuX9X7wyF0OnpV_7TNw_tZLJIINJwN5dihMszPr6IjQlTTVxndriBShyphenhyphenX3gQWE17NWg2u2Q0qYJd6ES1y1zk/s1600/dhee.jpg" height="480" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<div>
பின்னர் வந்த சிட்டிசன்(2001) படம் எல்லாம் அவரின் பலவிதமான கெட் அப் எங்களின் விவாதங்களுக்கு போதுமானதாக இருந்தது. அப்படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை ஆனால் நான் பெரிதாக வியக்கும் எங்களின் சீனியர்கள் , பஸ் ஸ்டாண்டில் கெத்தாக திரிபவர்கள் , ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்கள் என்று அனைவரும் அஜித் விரும்பிகளாக தீனா ஸ்டில் அவர்களின் நோட் அட்டைகளிலும் , ஆட்டோ முன் கிளாஸிலுமாக இருந்தது பெருமிதம் கொள்ளவைக்கும்.தினகரன் , தினத்தந்தி பேப்பர் சினிமா பக்கம் என்னிடம் நீண்ட நேரம் அல்லோலப்படும்.இதன் பிறகு வந்த ரெட்(2002) படத்திற்கு தஞ்சையில் அதுவரை வைத்திராத அளவுக்கு கட்டவுட்கள் வைத்து நகரையே பிரமிக்க வைத்து இருந்தனர் என்ற பேச்சு தான் அதிகமாக இருந்தது. அப்படத்தின் தோல்வி பயங்கரமாக ஓட்டபட்டோம் அதுவும் நடனம் என்று ஓட்டும் போது எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிட்டத்தட்ட ஓடி போய்விட தோன்றும்.தொடர்ந்து வந்த ராஜா(2002) பட தோல்வி அதற்க்கு மேல் ஓடவைத்தது எங்களை அதிலும் சிலர் எங்க தளபதிய வச்சு இவர் தாண்டா துள்ளாத மனமும் துள்ளும் படத்த எடுத்தாரு இப்போ உங்க ஆள வச்சு எடுத்தாரு ஊத்திகிச்சு என்று கூற , நாங்களோ அடேய் இந்த படத்துல உங்க தளபதி நடிச்சு இருந்தாலும் ப்ளாப் தான் என்று எவ்வளவோ மல்லுகட்டி கூறினாலும் இறுதிவரை அந்த நண்பன் ஒற்றுகொள்ளவே இல்லை.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGVFytSHGWFoN5Qpz6g5bs7jjwaiwKT9Tk6AZ21Ek4pM4sge5bTo6nc_gg7fVYs1TYD03TI-8GREAuZxKC-llFb32QbENcnVypq0Xkhfj2gEDGaGDCG8D06_0c_zR6H1z8ZtmGF2yfP8w/s1600/villan_17.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGVFytSHGWFoN5Qpz6g5bs7jjwaiwKT9Tk6AZ21Ek4pM4sge5bTo6nc_gg7fVYs1TYD03TI-8GREAuZxKC-llFb32QbENcnVypq0Xkhfj2gEDGaGDCG8D06_0c_zR6H1z8ZtmGF2yfP8w/s1600/villan_17.gif" height="480" width="640" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
எல்லோருக்கும் நாங்களும் வில்லன் ஆகிவிட்டோம் வில்லன்(2002) வருவதற்கு முன்னே. ஆனால் வில்லன் எங்களை ஹீரோ ஆக்கிவிட்டது வருகைக்கு பிறகு. அப்பொழுது உடன் வந்த பகவதி நாங்கள் ஓட்டுவதற்கு வசதியாகவும் வில்லன் படத்தின் இரட்டை வேட நடிப்பு பெருமிதம் கொள்ள வைக்கவும் நன்றாக இருந்தது. ஓரளவுக்கு நன்கு புரிந்து கொண்டு விவாதம் செய்யும் போது டெக்னிகலாக திரைகதை யுக்திகளை எடுத்து கூறி பேச துவங்கிய காலங்கள். அதுக்கு ஏற்றது போல வில்லன் படம் எங்களுக்கு அமைந்தது. அது போலவே தினகரன் சிறந்த நடிகர் அவார்டும் , பிலிம் பேர் அவார்டும் அவ்வருடத்தில் அவருக்கே கிடைத்தது அப்படத்திற்காக. தப்பு தண்டா பாடல் பற்றி இங்க பேச வேணாம் அதுவும் ஒரு விவாதம் ஆனது அப்படத்தில்.</div>
<div>
<br /></div>
<div>
பின்னர் ஒருவருட இடைவெளிக்கு பிறகு 2003 தீபாவளி வெளியீடாக வந்த ஆஞ்சநேயா படத்தின் கதி ஊரே அறியும். ஆனால் அதற்க்கு முன் நாங்கள் தந்த அலப்பரைகள் வல்லரசு டைரக்டர் படம் செம்மையா இருக்க போகுது என்றெல்லாம் ஹைப் கொடுத்துட்டு இருந்தோம். படம் வெளியானா அடுத்த நாள் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்கள் படை சூழ தஞ்சாவூர் படம் பார்க்க செல்லும் போதே திருமலை என்று சிலர் , நாங்க தல படம் தான் என்று கூற , மூன்றாவுது அணி பிதாமகன் என்றது. அங்கு போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றோம். தஞ்சை சாந்தியில் தல படம் கமலாவில் பிதாமகன் சற்று அருகே இருந்த ஜுபிடெரில் திருமலை. தல ரசிகர் போல தெரிந்த ஒருவரிடம் பாஸ் படம் எப்படி என்று கேட்க அவரோ எதுவும் சொல்லாமல் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டார்.பின்னர் வம்படியாக கேட்க, நேத்து பாக்குறப்போ நல்லா இருந்துச்சு ஆனா இன்னைக்கு திரும்ப வந்து பார்த்தேன் என்று இழுக்க நாங்கள் பாஸ் இன்னு ஷோ முடியலை பாஸ் என்று பதறினோம் அவரோ ஆமாங்க உள்ள விஜய் ரசிக நண்பர்களை அழைத்து வந்தேன் ஒட்டுறானுங்க அதான் வெளிய வந்துட்டேன் என்று கூறி எங்களை இறக்க வைத்து விட்டார்.அதை கேட்ட மற்ற குரூப் நண்பர்களோ சிரித்து கொண்டே எங்களை பார்த்தனர் ஆனால் விடவில்லையே கடைசி வரை போராடி திருமலை அல்லாமல் பிதாமகன் சென்று.அடுத்தநாள் வந்து ஆஞ்சனேயே தனியாக பார்த்தோம் பயத்தில். முதல் முறை நாங்கள் சொல்லி கொண்டும் விட்றா தல அடுத்த படத்துல பட்டய கிளப்பிடுவாரு என்று சொல்லிவிட்டு ஒரு கட் அவுட்டை பார்த்தோம் அதில் இருந்த வாசகம் எங்களை கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விட்டது வெளிய சொல்லலையே அதை. அந்த வாசகம்,</div>
<div>
"திருமலையை தூக்க வரார்டா எங்க ஆஞ்சநேயா "</div>
</div>
</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
இந்த காலகட்டத்தில் தான் சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும் நான் அதை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கின்றேன் என்று வெளிப்படையாக கூறினார் அஜித். அதனாலையே எல்லோரின் கோபங்களுக்கு உள்ளானார் ஆனால் ரசிகர்கள் அவருக்கு உற்ற துணையாக இருந்தனர். ஜி பட படபிடிப்பு எங்கள் திருவையாறில் நடந்தது வெறும் நான்கு மணிநேரம் எங்கள் ஸ்ரீனிவாச ராவ் மேல் நிலை பள்ளி பின்புறம் உள்ள காவேரி ஆற்றில். அப்பொழுது தான் அஜித்தை நேரடியாக முதலும் இறுதியுமாக நான் கண்டது. ஆற்றில் அங்கங்கே ஓடி கொண்டு இருந்த நீரை முகத்தில் அவ்வப்போது அள்ளி தெளித்து கொண்டு நடன காட்சியில் ஆடிக்கொண்டு இருந்தார். நாங்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு அந்த படபிடிப்பை கண்டு களித்து கொண்டு இருந்தோம்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<div>
கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றியை சுவைத்து கொண்டு இருந்தநேரம் , அஜித் பிறந்தநாள் மே 1 அன்று வெளிவந்த ஜனா படுதோல்வியை சந்தித்தது. கோடைவிடுமுறை என்பதாலும் +2 ஸ்பெஷல் கிளாஸ் வேறு இருந்த நெருக்கடியில் அப்படத்தை காண வாய்ப்பில்லாமல் போனது ஆனால் கில்லி படத்தை அந்நாட்களில் திரை அரங்கில் கண்டோம் படம் பிடிக்க கூடாது என்ற நினைப்பிலேயே கண்டேன் என்பதை இப்பொழுது நினைத்தால் கூட சிரிப்பாக இருக்கின்றது. பின்னர் பள்ளி தொடங்கிய போது ஜனா படத்தை வம்படியாக எங்களிடம் சொல்லி சொல்லி வெறுப்பேற்றினர் நண்பர்கள். </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSM4iio1j-c7DCBfcljEx4Cm1UgFMHMLmEJNWSiROCCn8nhgvXyqhtxAUUIiVXfABiHPoCzAuCcLWm-ADmBJM5c1MZGMPsBV090P1bpnrirHxXkm-nct5zzVza6J0-GEWFtOK8dpxDlCg/s1600/ajith02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSM4iio1j-c7DCBfcljEx4Cm1UgFMHMLmEJNWSiROCCn8nhgvXyqhtxAUUIiVXfABiHPoCzAuCcLWm-ADmBJM5c1MZGMPsBV090P1bpnrirHxXkm-nct5zzVza6J0-GEWFtOK8dpxDlCg/s1600/ajith02.jpg" height="480" width="640" /></a></div>
<div>
<br /></div>
<div>
2004 தீபாவளி அட்டகாசம் வெளியீடு சரண் இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது எப்போதும் இரட்டை வேடம் என்றால் அஜித் செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்று உறுதியை நம்ப வைத்த திரைப்படம் அட்டகாசம். 2002க்கு பிறகு அஜித்தின் வெற்றி படவரிசையில் இணைந்த அட்டகாசம் ரசிகர்கள் மதித்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இப்படத்தின் ஸ்டில் தான் இன்றைக்கும் கூட மிக பிரபலம். இப்படத்திற்கு பிறகு வெளியான அஜித் அவர்களின் எந்த திரைப்படத்திற்கும் திரைஅரங்கில் வைக்கப்படும் கட் அவுட்களில் அட்டகாசம் ஸ்டில் இல்லாமல் இருக்கவே இருக்காது. தல என்று அஜித்தை எல்லோரும் அழைக்க தொடங்கிய காலமும் அதுவே அதற்க்கு ஏதுவாக அமைந்த பாடல் ''தல போல வருமா ''. தஞ்சை யாகப்பா திரைஅரங்கில் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் சென்று மதியகாட்சிக்கு 12மணி முதல் டிக்கெட் கவுண்டரில் நின்று 2அடிக்கு குறைவான அகலம் கொண்ட கவுண்டரில் நீண்ட வரிசையில் மூச்சு விடகூட திணறி கொண்டு 2 மணிநேரங்கள் தவித்து சென்று , பரவசமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடிய படம் . ரசிகர்களுக்காகவே அஜித் நடித்த அட்டகாசம்.</div>
</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC6STyd8tJAja02QLMCtgDHUi77TXWvEZUimOo56FRR2hyNPOYJr9hefg_y3BqR0c4Mtzf9OJo5boTcqZRvHpGmjmhmZmpCLVwvQ6X83bQUXzFIy5ZXAhbpjgfJe3aKTETtAW715EXYaw/s1600/8ed81b0a1844e8e2ce92ef3ad46b5429.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC6STyd8tJAja02QLMCtgDHUi77TXWvEZUimOo56FRR2hyNPOYJr9hefg_y3BqR0c4Mtzf9OJo5boTcqZRvHpGmjmhmZmpCLVwvQ6X83bQUXzFIy5ZXAhbpjgfJe3aKTETtAW715EXYaw/s1600/8ed81b0a1844e8e2ce92ef3ad46b5429.jpg" height="640" width="576" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அஜித் - கே.எஸ் ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது , அஜித் மூன்று வேடங்களில் நடிக்கபோகிறார், ஏ.ஆர். ரஹ்மான் இசை , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு .படத்தின் பெயர் காட் பாதர் என்று தினசரிகளில் பரப்பாக செய்தி வெளி வரத்தொடங்கியது. அதே போல அந்நேரத்தில் வதந்திகளும் வந்தது அஜித் நடிக்கும் மூன்று வேடங்களில் ஒன்று அரவாணி என்று கூட. அந்த பரபரப்பில் 2005 பிப்ரவரி ஜி திரைப்படம் வெளிவந்தது. அதே தஞ்சை யாகப்பாவில் முதல்நாள் அஜித் அவர்களின் திரைப்படத்தை முதல்முறையாக திரைஅரங்கில் காண்கிறேன்(அன்று முதல் இன்றுவரை முதல் நாள் தான் பிறகு வெளிவந்த திரைப்படங்களுக்கு). ராஜா ,ஆஞ்சநேயா , ரெட் , ஜனா போன்ற படங்களை போலல்லாமல் இன்றைய அரசியல் யதார்த்தத்தை கூறியவகையில் எனக்கு பிடித்த படமே ஜி. ஆனால் இதுவும் ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. எனக்கு இன்றைக்கும் இப்படத்தின் இயக்குனர் மேல் கோபம் தான் அவர் லிங்குசாமி. தன்னுடைய படங்கள் என்று அவர் ஜி தவிர ஒதுக்கி தான் பத்திரிகையில் பேசுவார் அவரின் தோல்வி படமான பீமாவை கூட பெருமையாக குறிப்பிடுவார் ஆனால் ஜி படத்தை பற்றி வாய் திறக்க மாட்டார். இப்பொழுது சிவா கார்த்திகேயேன் எப்படி மனம் கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் வேற்று கிரகத்தில் இருந்து ஒருவர் நடித்து இருப்பதை போன்று நடந்து கொள்வதை போல்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='640' height='360' src='https://www.youtube.com/embed/8wamsZyPGQA?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
தொடரும் ....<br />
<br />
<a href="http://arjiththala.blogspot.sg/2014/04/2.html" target="_blank">அடுத்த பகுதி</a></div>
<div>
<br /></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-83038639370437154952014-04-22T00:07:00.000-07:002014-05-14T05:06:44.821-07:00உப்பு நாய்கள்-நாவலின் என் வாசிப்பு அனுபவம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: left;"> (</span><span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small; text-align: left;"><span style="line-height: 18px;">லக்ஷ்மி சரவணகுமாரின்)</span></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif; font-size: x-small; text-align: left;"><span style="line-height: 18px;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3CE4rInlZMjE1Cvnu6LweY0ulVs5BZ4DreWj3N1odzJIfuRoqUwq3znnAJxO6lrOy4oSTUYjONXc6plI37HzhquQAHnyuO94LpdLUXjiU-g0WjCr98oYysK_gsX0Ajm7Qk-KTVe_s6HI/s1600/15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3CE4rInlZMjE1Cvnu6LweY0ulVs5BZ4DreWj3N1odzJIfuRoqUwq3znnAJxO6lrOy4oSTUYjONXc6plI37HzhquQAHnyuO94LpdLUXjiU-g0WjCr98oYysK_gsX0Ajm7Qk-KTVe_s6HI/s1600/15.jpg" height="640" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">புதுப்பேட்டை , ஆரண்யகாண்டம் போன்ற படங்களை பார்க்கும் போது அக்கதையின் கதாபாத்திரங்களை நாம் உள்வாங்கினால் தான் அப்படங்களை ரசிக்க முடியும். அதைவிட்டு தர்க்க நியாயம் பேசினால் அதுவும் ஒரு சராசரி படங்களை போலவே மிஞ்சும். அப்படி தான் இந்நாவலை வாசிக்கும் போது கூட ஆரம்ப அத்தியாயங்களே யாருடைய வாழ்க்கையை நாம் படித்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நமக்கு விளங்க வைத்துவிடுகி</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">றது. அதை புரிந்து நாம் மேற்கொண்டு படித்தோம் என்றால் ஒரு ராவான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்வோரின் பக்கங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.<br /><br />எந்தவொரு நாவலை வாசிக்கும் போதும் நான் அதற்க்கு பிற எழுத்தாளுமைகள் (பிரபலங்கள்) எழுதிய மதிப்புரைகளை வாசிக்காமல், முழுநாவலையும் வாசித்துவிட்டு பின்னரே அவர்களின் கருத்துகளை வாசிப்பேன். அது இவ்வாசிப்பிலும் தொடர்ந்தது. ஒவ்வொரு சராசரி மனிதர்களுக்குள்ளும் குறிப்பிட்ட குற்றங்களுக்கான எல்லை இருக்கும், அதை அவர்களின் செயல்களில் தாண்டாமலும் பின்னர் மற்றோர் செய்வதில் கூட அவர்களுக்கு என்று கூட நாமே ஒரு எல்லை வைத்து கொள்ளுவோம்.அப்படி தான் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலை நம்பி இருக்கின்றனர்.<br /><br />பிக்பாக்கெட் , விபச்சாரம் , குழந்தை கடத்தல் , போதை வஸ்த்து விற்பனை என்று போகின்றது. கொஞ்சமும் சமரசமின்றி தன்னுடைய எண்ணங்களை எழுத்தால் கொண்டு வந்து இருக்கின்றார் நாவலின் ஆசிரியர்.<br /><br />சம்பத் செய்யும் செயல்கள் ஒருசிலருக்கு வாசிக்கும் போது அன்னியமாக வெறுப்பாக தோன்றும், இன்னும் சிலருக்கு மணியின் செயல்கள் அருவெறுப்பாக இருக்கும், இதை போல முத்துசெல்வி , செல்வி , தவுடு , கோபால் , ராஜீ, ஷிவானி , சேட்டு, சுந்தர் , சம்பத்தின் அம்மா , சோபி, இளவாஞ்சளின் என்று அவரவர்களின் மனதில் நாம் வகுத்து வைத்து உள்ள பிரிவின் படி அவர்களின் குற்றசெயல்கள் நமக்கு அருவெறுப்பாக ஏற்று கொள்ள முடியாமல் இருக்கும். எனக்கு அப்படி மிகவும் வக்கிரமாக மனதில் தோன்றியது ராஜீயின் செயல்கள் தான் எனக்கு அந்த பாத்திர படைப்பின் மேல் உச்சபட்ச்ச வெறுப்பை கொடுத்தது.இதை நாம் ஏற்று கொள்ளுவதை விட எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தான் நாவல் ஆசிரியரிடம் இருக்கின்றது என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது.<br /><br />நாவலிலேயே என்னை மிகவும் உருகவைத்தது ஆதம்மா என்று சிறுமியும் , ஆர்த்தி என்ற பெண் பாத்திரமும் தான். முதலில் பாகம் ஒன்றில் விறுவிறுப்பாக வாசித்து முடித்தவுடன் பாகம் இரண்டில் தொடங்குகிறது இந்த சிறுமியின் கதை, அவளின் கதை சில அத்தியாயங்களில் தொய்வாக செல்வது போல தோன்றியது பின்னர் சம்பத் குழந்தை கடத்தல் தொழிலுக்கு மாறும் பொழுது நெஞ்சில் ஒருவித படபடப்பு வந்துவிடுகிறது எங்கே இறுதியில் இந்த சிறுமியை கடத்துவது போல வந்துவிடுமோ என்று சினிமா போல நினைக்க தோன்றிவிட்டது ஆனால் அது போல் அல்லாமல் நாவலாசிரியரையே இறுதி வரை பின்தொடர்வது போல இருந்தது சிறப்பு .<br /><br />வாசிக்கும் போதே எனக்கு உறுத்தியது ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வாசகனுக்கு கூறுவது போல இருந்தது(சம்பத்தின் தொழில் திறன் , ஆதம்மா விருப்ப விளையாட்டு இன்னும் சில ) , சில வார்த்தைகளை ஒரே பத்தியில் நான்கு , ஐந்து முறைகளுக்கு மேல் எடுத்து கூறியது போன்றவைகள் தான் உறுத்தலாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமும் இலக்கிய நடையில் முடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு இறுதி பத்தியை எழுதியது போலவும் தோன்றியது.மணியின் கதை என்ன ஆனது சுந்தரிடம் மீண்டும் சம்பத் வந்தவுடன் அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்தேன் ??? , அளவுக்கு மீறிய காமம் என்பது எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை அவர்களின் வாழ்வில் அவ்வாறு இருப்பது போலவே நினைத்து வாசித்தமையால் இருக்கும் போல எனக்கு.<br /><br />லக்ஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு பாம்புகள் மீது அளவில்லா ப்ரியம் இருக்கும் போல முன்னர் அவரின் யாக்கை சிறுகதை தொகுப்பில் கூட ஒரு சிறுகதையில் முழுக்க ஸர்பங்களை மையபடுத்தியே இருந்தது, இந்நாவலில் கூட அந்த ஈர்ப்பு தெரிகின்றது. காமத்தில் திளைக்கும் போது கூட ஸர்பங்களை எடுத்து காட்டி கூறுகிறார்.<br /><br />எனக்கு நாவலை வாசித்து முடித்தவுடன் தோன்றியது, வாசிக்கும் போதே இவ்வளவு சுவாரசியமாக இவர்களின் முகங்களை தேட தூண்டுகிறதே. இதை ஏன் ஒரு ராவான திரைப்படமாக எடுக்க கூடாது நல்ல கதாபாத்திர தேர்வுடன் சமரசமின்றி லக்ஷ்மி அவர்களே எடுத்தால் என்னவோ என்று தான் நினைத்தேன். யாருக்கு தெரியும் அவர் கூட நினைத்து இருப்பார்??? இயக்குனர் ஆக தானே முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார். வாழ்த்துக்கள் நண்பா <i class="_4-k1 img sp_4qqpiy sx_92783a" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yP/r/9DitOgwD63Y.png); background-position: -153px -101px; background-repeat: no-repeat no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i></span></div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-9469955131438376972014-04-10T02:52:00.000-07:002014-05-14T05:06:44.840-07:00நினைவுகள் எழுத தூண்டுகிறது - 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<a href="http://arjiththala.blogspot.com/2014/04/blog-post.html" target="_blank"><span style="font-family: inherit;">முந்தைய பகுதி</span></a></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">ஓமன் போகலாமா வேண்டாமா என்ற இருவேறு சிந்தனையில் என்னை நானே வாட்டி வதைத்து கொண்டு இருந்தேன், போனால் ஒருவேளை நம்மால் சிறப்பிக்க முடியாமல் திரும்பி வருவதற்கு போகாமல் இருந்துவிடலாம் என்று நினைத்தால், இங்கே நான் தலைகனத்தில் பிதற்றிய பிதற்றலுக்கு பதில் சொல்லியே தாவு கிளிந்துவிடுமே ,வீட்டில் கூட மதிக்க மாட்டார்களே, உறவினர் மூலம் கிடைத்த வேலையை விட்டதற்காக எல்லோரிடத்திலும் தலை குனிந்து நிற்க வேண்டுமே. இதற்கு போய்விட்டால் தான் என்னவோ என்று கிட்டத்தட்ட பித்தநிலையில் தான் இருந்தேன்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">அந்நேரத்தில் தஞ்சையில் உடன் பயின்ற நண்பனின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், அவரை காண தஞ்சை சென்று அவனிடம் புலம்பிவிட்டு. மறுநாளும் அவனை காண சென்று அன்று வேறு நந்தலாலா வெளியீடு அவனும் கொஞ்சம் ரிலக்ஸ் ஆகும் பொருட்டு இருவரும் படத்திற்கு சென்றோம், தஞ்சை பிக் சினிமாஸில் நான் கண்ட முதல் திரைப்படம் நந்தலாலா தான். படத்தின் இரண்டாம் பாதியின் போது இருமுறை சென்னை லேன்ட் லைனில் இருந்து கால் வந்தது படத்தின் ஆர்வத்தால் ஒருமுறை சைலேன்ட்டில் போட்டுவிட்டு மறுமுறை வந்தபோது கட் செய்துவிட்டேன்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipbpYzCfF-kL63_TYA7K8nWv6jb1q18pIlBLsxU5stkmh5B0oXr8sesWE8lQqubTuDUbatG-FvIxOSqDTXybdvMuE8SSzFO_AvVGVqaTDLGMiNhB6Tis-M2pryDOw8lniecgJGlY3gy4w/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-family: inherit;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipbpYzCfF-kL63_TYA7K8nWv6jb1q18pIlBLsxU5stkmh5B0oXr8sesWE8lQqubTuDUbatG-FvIxOSqDTXybdvMuE8SSzFO_AvVGVqaTDLGMiNhB6Tis-M2pryDOw8lniecgJGlY3gy4w/s1600/images.jpg" height="400" width="373" /></span></a></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">படத்தின் இறுதிகட்ட பாடலின் போது மீண்டும் வந்த அழைப்பை ஏற்று பேசிய போது, ஹலோ கருணா நீங்க இன்னும் மெடிக்கல் சேர்டிபிகட் தரலை, ரொம்ப பிரஷர் பண்ணறாங்க எனி ப்ரொப்லெம் என்று கேட்டனர். சாரி சார் எனக்கு விருப்பமில்லை ஓமன் செல்ல என்று மட்டும் கூறிவிட்டு கட் செய்து விட்டேன். அவர்களும் என்னை மீண்டும் அழைக்கவில்லை. நானோ படம் முடிந்து வீடு செல்லும் வரை மிகுந்த வேதனையில் துன்புற்றேன். எத்தனையோ நபர்கள் தூரதேசம் போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கையில் கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடித்து விட்டுமே. யாரையும் பழி சொல்ல வாய்ப்பில்லை ,என்னுடைய வாய்ப்பை என்னுடைய இன்பங்களுக்காக நானே கெடுத்து கொண்டே என்பது மட்டுமே உண்மை.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">மீண்டும் சென்னை டிசம்பர் 20 ,2010ல் பயணம் , வேலை தேடுதல் மீண்டும் தொடக்கம், மீண்டும் ஒருமுறை செய்தவேலையை விட்டதுக்கு மனதார உண்மையாக வருத்தப்பட்டேன் (இந்த தவறை இதன் பிறகு இன்று வரை செய்யவில்லை).தஞ்சையில் கண்ட நண்பனும் சென்னைக்கு ஒரு நேர்காணலிற்கு வந்து செலக்ட் ஆகிவிட்டான். பின்னர் என்னை சந்திக்க வந்த போது அவன் தேர்ந்து எடுக்கப்பட்ட நிறுவனத்தின் இணையத்தை காண்பித்தான், அப்பொழுதே நான் அவனிடம் சொன்னேன் இந்த நிறுவனத்திற்கும் என்னுடைய விண்ணப்பத்தை அனுப்ப போகிறேன் என்று, அவனும் ஒற்றுகொண்டான். அந்நிமிடமே அனுப்பிவிட்டேன். அன்று மாலையே நாளை நேர்காணலிற்கு அலுவலகம் வந்துவிடுமாறு கூறிவிட்டனர். மனநிறைவுடன் மறுநாள் டிசம்பர் 24 , 2010 அன்று மயிலாப்பூர் , டாக்டர்.ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள அந்த அலுவலகத்துக்கு சென்றேன்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">என்னை நேர்காணல் கண்ட ராஜ்குமார் முதலிலேயே கூறிவிட்டார் எங்களுக்கு அளவு மதிப்பீட்டாளர் தான் தேவை என்று எனக்கு முழுக்க முழுக்க சைட் அனுபவம் தான் ஆனால் இதுவோ நான் முன்னர் கூறியது போல பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. ஏதோ ஒரு தைரியத்தில் அனுபவம் உண்டு என்று கூறியவுடன் , அவரோ சிறிய அறையின் இன்டீரியர் வேலைபாடுகளுடன் உள்ள வரைபடத்தை கொடுத்து அளவுகள் எடுக்க சொல்லிவிட்டார். நானும் சைடில் பில்லிங்கு அளவுகள் எடுப்பது போன்று எடுத்து கொடுத்துவிட்டேன். அவரும் அதில் நிறைவு கொண்டவராக ,சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்னர் நாளை கூப்பிடுகிறோம் என்று என்னை அனுப்பிவிட்டார்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">ஆனால் நாளையோ எனக்கு நாளை நாளை நாளை நாளை நாளை நாளை என்று 30 நாளை ஆனது.இந்நாட்களில் வேலை இல்லாமல் நல்ல வேலைய்யை விட்டதற்கு கிடைத்த தண்டனை என்று மனதில் பச்சையாய் பதிந்து போனது. மீண்டும் அந்த மயிலாப்பூர் நிறுவனத்துக்கு நானே தொலைபேசியில் அழைத்து என் விவரங்களை கூறி நேர்காணலின் முடிவு என்னிடம் தெரிவிக்கவில்லை என்ன ஆனது என்று கேட்டேன் சிறிது நேரம் லைனில் இருக்க சொல்லி பின்னர் நாளை வருமாறு கூறினர்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">ஜனவரி 23 , 2011 மீண்டும் சென்றேன் இம்முறை நேரடியாக எம்.டியை தான் காண போகிறேன் என்று அங்கு தெரிந்துகொண்டேன். இது தெரியாமால் சாதாரணமாக வந்தது நினைத்து உள்ளுக்குள் நெருடபட்டேன். அழைத்தார்கள் மேல் அறைக்கு சென்றேன் நல்ல விஸ்தாரமாக இன்டீரியர் வேலைபாடுகளுடன் அதுவரை அதுபோன்ற இடம் திரைப்படங்களில் தான் பார்த்து உள்ளேன் (சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இருப்பது போல ). பார்த்தால் அழகிய ஆண்டி பெண் தான் எம்.டி , அதுவே மனதை சஞ்சலபடுத்தியது. கண்டிப்பாகா தேறுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டேன். அதற்க்கு ஏற்றது போல அவர்களின் கேள்வி அமைந்தது என்ன கருணாநிதி ? ஸ்டாலின் ? என்று பெயர் நான் என்ன அரசியாலா பண்ணுறேன் என்று சிரித்து கொண்டே கேட்டார்கள். நானோ என் சொந்த ஊர் தஞ்சாவூரில் இருக்கும் வரை இந்தபெயரின் பெருமையை கேட்டே வளர்ந்துவிட்டேன் இங்கே வந்த பிறகு தான் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர் என்று சிரித்தும் சிரிக்காமலும் கூறிவிட்டேன் அவர்கள் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். பின்னர் கடவுள் நம்பிக்கை இருக்கா என்று கேட்டார்,( உள்ளுக்குள் இந்த பெயர் வைத்தததால் என்ன கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது என்று நினைத்து கொண்டே நல்ல வேலை எங்க தாத்தா ராமசாமி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்துகொண்டு). இருக்கின்றது என்றேன். எப்பபோ சாமி கும்பிடுவ என்று திரும்ப அதே கேள்வி? என்னடா இது சோதனை என்று சில நொடி தடுமாற்றத்திற்கு பின் வாரம் இருமுறை கோவிலுக்கு போவேன் என்று பொய் சொன்னேன். ஓஹோ இஸ் குட் என்று பைலை நான் தரும் போது வலது கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை பார்த்து உறுதி செய்து கொண்டார். பின்னர் வேலை சம்மந்த கேள்வி பதில்கள், பொய் மட்டும் சொல்லவே கூடாது என்ற அறிவுரை.இறுதியில் நான் தேர்ந்து எடுக்கபட்டுவிட்டேன். இம்முறை இந்த நிறுவனம் இன்டீரியர் வேலைபாடுகளை தான் முதன்மையாக கொண்டது. இது என்னுடைய அடுத்த புது அனுபவம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">ஜனவரி 31 , 2011 முதல் அங்கு பணியை தொடங்கினேன்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">இந்த நிறுவனத்தில் தான் இதுவரையில் என்னுடைய அனுபவத்தில் அதிக நாட்கள் வேலை பார்த்தது (ஒன்னேகால் வருடம் ), என்னை நான் தொழில் ரீதியாக முழுமை(ஓரளவுக்கு) படுத்தி கொண்டதும் இங்கே தான். என்னுடைய பணிக்காக அதிகபட்ச அங்கீகாரம் பெற்றது இங்கே தான்.ஓமன் சென்று இருந்தால் கூட இங்கு பெற்ற வளர்ச்சியை பெற்று இருப்பேனா என்பது கேள்விகுறி தான்.இங்கு நான் செயல்படுத்த பட்ட தொழில்முறை தான் இன்றும் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கின்றது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; line-height: 18px;"><br /></span>
</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">முதலாளியாகவும் & தலைமை அதிகாரியாகவும் ஒரே பெண் இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது மிகவும் கடினாமான சூழலை உருவாக்கும் என்பதை புதிதாக அப்பொழுது பணியாற்றிய மயிலாப்பூர் நிறுவனத்தில் உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். அளவு மதிப்பீட்டாளர் என்று எடுத்தமையால் முழுக்க அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது, முதல் இரண்டு நாட்கள் நான்கு பண்டில் வரைபடங்களை கொடுத்து ஸ்டடி பண்ணுங்க என்று கூறினார் என்னை நேர்காணல் எடுத்த ராஜ்குமார் அவர்கள், அவர்களுடைய ப்ராஜெக்ட்டில் தான் இருக்க போகிறேன் என்றும் தெரிந்து கொண்டேன்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">முழுக்க முழுக்க சைடில் பணிபுரிந்து விட்டு இப்படி ஒரே அறையில் இருப்பது மூன்றாம் நாளிலேயே கடுப்படித்து விட்டது, அதுவும் அந்த நிறுவனத்தின் கட்டுபாடுகள் , எலிமெண்டரி ஸ்க்கூளை விஞ்சிவிடுவது போல இருந்தது. மதிய சாப்பாடு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், அலுவலகத்தில் ஸ்மோகிங் ஏரியா கிடையாது, காலை 9.00 மணிக்கு வந்தால் மாலை 6.00 மணிக்கு தான் வெளியேற வேண்டும்.இடையில் எந்தஒரு காரணத்திற்கும் வெளியே போக அனுமதி இல்லை ப்ராஜெக்ட் அன்றி. நான் வெஜ் சாப்பிடகூடாது. இப்படியாக அடுக்கி கொண்டே போகலாம் கட்டுபாடுகளை. ஒரே வாரத்தில் முடிவு செய்தேன் நம் அலுவலகத்தில் இருந்தால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன்,எனக்கு ஒற்று வரும் சைட் வேலை தான் சிறந்தது நான் நினைத்து கொண்டு இருந்தது போலவே. கவர் டுட்டிக்காக சைட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டேன், அபிராமிபுரத்தில் ஒரு செல்வந்தரி பாட்டி வீட்டின் இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு. அப்பாட்டியோ எங்கள் அலுவலகத்தில் போட்ட கட்டுபாடுகளை தூக்கி சாப்பிட்டு விட்டது போல இருந்தது அவர்களின் கட்டுபாடுகள்.கட்டிட வேலையின் போது வேலையாட்கள் பீடி குடிபதற்கு தடை போட சொன்னால் பார்த்துகொள்ளுங்கள். எவன் அங்க வேலை பார்க்க வருவான். அப்படி தான் இருந்தது அங்கே பணிபுரியும் பொழுது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;">ஒரு மாதங்களாக வேலை அங்கு போய்கொண்டு இருந்தது அலுவலக பக்கம் போகாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டு இருந்தது, அத்தியாவசியாமாக வரைபடம் உடனடியாக தேவைபட அலுவலகம் சென்றேன் அன்று அப்பொழுது அங்கு வந்த எம்.டி , என்னை பார்த்து யாருப்பா நீ புது பையன் என்று கேட்க சொல்லுவது அறியாமல் முழித்தேன் அருகில் இருப்போர் கூறினார் இவர் தான் அவர் என்று இம்முறையும் சிரிப்பு தான், என் பெயருக்காக. நானும் கேன சிரிப்பை சிரித்துவிட்டு வந்து விட்டேன். மாதம் ஒருமுறை மீட்டிங் என்று அனைத்து சைட்டிலும் இருந்து அழைக்கபடுவர். எல்லோரும் ஏதோ நேற்றே இறந்தது போல முகத்தை வைத்து கொண்டு வந்திருந்தனர். எனக்கு அது தான் முதல் முறை என்பதால் சாதரணமாக சென்றேன். அப்பொழுது சைட்டில் இருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு விதித்தனர் அதாவுது தினமும் காலை இன்று என்ன வேலைகள் நடக்க போகிறது என்றும் , மதியம் மேற்கூறிய வேலைகளின் நிலவரம் பின் மாலை அன்றைய நாளின் முடிவுகள். இப்படி தினமும் மூன்று முறை எம்.டிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லோரும் மீண்டும் ஒருமுறை உச் கொட்டினர் அவர்களுக்குள்ளே தான் கேட்டு கொண்டது. நான் இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல் தொடர்ந்தேன் சில நாட்கள் ஆனால் என்னுடைய மேலதிகாரி மூலம் அனுப்ப வேண்டும் என்று செயல்படுத்தபட்டேன். </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<div>
<span style="font-family: inherit;">அன்று முதல் தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன் அனுப்பிவிடுவேன், முதல்நாள் மட்டும் பதில் ஓகே என்று இரவு வந்தது பின்னர் மூன்று மாதங்கள் பதிலே வரவில்லை என்றாலும் நான் அனுப்புவதை விடவில்லை. எதேச்சையாக சந்திக்கும் போது ஒருநாள் எம்.டி, உன்னோட அப்டேட்ஸ் டெய்லி பாக்குறேன் குட் கீப் இட் அப் , ஜஸ்ட் கண்டினியு யுவர்ஸ் வே என்றார். அப்பாடி முதல் வாழ்த்து கிடைத்துவிட்டது இதை தொடர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, அடுத்த நாளே அலுவலகத்திற்கு மிக மிக அருகில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டேன். நான்கு தளங்கள் கொண்டவையாக வரை படங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. கோபி என்ற அந்த நிறுவனத்தில் 3 வருடங்களாக பணிபுரிந்தவர் , எனக்கு மேல் அதிகாரியாக நியமிக்கபட்டார். முழுக்க முழுக்க சைட் கண்ட்ரோல் என்னுடையாதாக வழங்கப்பட்டது. உதவி தேவை என்றால் கோபி அவர்களிடம் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். நிறுவனத்திலும் மற்ற சைட்களை விட இதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவை எல்லாம் நான் சேர்ந்து மூன்றுக்கு குறைவான மாதங்களில் அங்கே நியமிக்கப்பட்டேன் ஏப்ரல் 17, 2011 அன்று.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">தொடங்கியது முதல் ஏற்கனவே நான் பழகிய வேலை என்பதால் எளிதாக கையாளமுடிந்தது , ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் சென்றது.கடுமையான இட நெருக்கடிக்குள் வேலை செய்வது ஒன்று தான் புதிதாக இருந்தது.நகரின் மையமான பகுதி என்பதால் கான்க்ரீட் இரவு 10 மணிக்கு மேல் தான் போட அனுமதி கிடைக்கும். பத்து மணிக்கு ஆர்டர் செய்தால் அதன் பிறகு இரண்டு மணிநேரம் கழித்து 12 மணிக்கு மேல் தான் வரும் ரெடி மிக்ஸ் கான்க்ரீட். பின்னர் தொடங்கி வேலை முற்றிலும் முடிய அதிகாலை 5ல் இருந்து 6 மணி ஆகிவிடும். அப்பொழுதும் அந்நேரத்தில் மெசேஜ் செய்துவிடுவேன் விவரமாக எப்பொழுது தொடங்கியது ? எவ்வளவு அளவு ? எப்பொழுது முடிந்தது ? என்று அதற்க்கு மட்டும் அந்நேரத்தில் கூட ரிப்ளை வரும் முதலில் அதிர்ந்தேவிட்டேன். என்னடா இந்நேரம் கூட பதில் வருது என்று.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">குறிப்பிட்ட நாட்களுக்குள் மிக வேகமாக வேலை நடந்து கொண்டு இருந்தது, ஆகஸ்ட் 9ஆம் தேதி மூன்று தளம் கூரை கான்க்ரீட் முடிந்து விட்டது , இதர வேலைகள் கூட தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தநேரம், என்னுடைய சக ஊழியர் அம்பேத்கர், இவரும் ஒருவகையில் தொழில் ஆசான் தான் என்னை வேலையில் மிக பயங்கரமாக ஊக்கபடுத்துவார். அவரின் மூலம் வேறு நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு இருக்கின்றது (நான் தான் அந்த வாய்ப்பை கேட்டேன் ஆனால் ஏன் என்று விவரமாக கூறினால் இது போல இன்னும் நாற்பது பதிவுகள் ஆகும் விவரமாக பின்னர் காண்போம்) என்று கூறினார். நானும் அங்கே சென்று நேர்காணலில் நன்கு பேசி எப்பொழுது சேருகிறேன் என்று வரை முடிவு செய்துவிட்டு வந்தேன். அரசால் புரசலாக அலுவலகத்தில் தெரிய தொடங்கி எம்.டி அழைத்து விட்டார். இது நான் அவரை காண்பது மூன்றாவது முறை. ஏன் வேலை விட்டு போக போகிறாய் ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நன்றாக போய்கொண்டு இருக்கும் உன் சைட் நீ போய்விட்டால் அதை டேக் ஓவர் செய்வது வீண் நேர செலவு என்று என்னை சமாதானபடுத்தி, சம்பள உயர்வு அங்கேயே முடிவு செய்து , மாதம் 3000 ரூபாய் இன்சென்டிவ் என்றும் அதை ப்ராஜெக்ட் முடியும் போது மொத்தமாக பெற்று கொள் என்று என்னை சம்மதிக்க வைத்தார்கள் சாமர்த்தியமாக. முதல் முறை தொழில் நிமித்தமாக என்னை நான் புரிந்துகொண்டேன்.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">அதே வேகத்தில் வேலையும் சென்றது செப்டம்பர் மாதம் நான்கு தல ரூப் முடிந்துவிட்டது. இனி உள்வேலைகள் தான் அதுவும் தொடர்ந்து கொண்டே வந்தது. பின்னர் நிறுவனத்தில் கட்டுபாடுகளுக்கு தான் பஞ்சம் இல்லையே அதில் இன்னொன்று எவருடைய வேலை அம்மாதத்தில் சரிவர இல்லையோ அவரின் குறிப்பிட்ட அளவு ஊதியம் பிடித்து கொள்ளப்படும் அவை பின்னர் தான் வழங்குவார்கள். எவ்வளவு வேதனையான ஒன்று இது. எனக்கு அது போல ஒருமுறையும் நடந்தது இல்லை அப்படி நடந்து இருந்தால் அன்றே வேலையை விட்டு இருப்பேன்.</span></div>
</div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: inherit;"><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; line-height: 18px;"></span><br /></span></div>
<div style="text-align: left;">
<div>
<span style="font-family: inherit;">அக்டோபர் 22,2011 நிறுவனத்தில் தீபாவளி போனஸ் தருவதாக கூறப்பட்டு, எல்லோரும் அலுவலகம் அழைக்கப்பட்டு இருந்தனர். அதுவரையில் நான் பெற்றிடாத பணம் அன்று என் கையில் புரண்டது. என் நண்பர்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு சந்தோசமடைந்தேன். ஆனால் என் வீட்டில் சொல்லவில்லை. பின்னர் வேலை சுணக்கம் கண்டது உரிமையாளர்களின் நேர வீணடிப்பு தான் காரணம் என்பதால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. அதே போல இன்னுமொரு கட்டுப்பாடு என்னை அழைத்து என்னுடைய சைட்டிற்காக மட்டும் போடப்பட்டது. வேலையாட்கள் அசைவம் சைட்டில் சமைத்து சாப்பிடகூடாது அருகாமையில் உள்ளவர்கள் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள் என்று. அடங்கோ அப்போ மாமிங்க தான் சித்தால வரணும் , அய்யர்வாள் தான் மேஸ்திரியா இருக்கணும் என்று காட்டமாக கூறிவிட்டேன். </span></div>
<div>
</div>
<div>
<span style="font-family: inherit;">முக்கியமான அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்து கொண்டே இருந்தது, சில நேரத்தில் பல வாக்கு வாதங்கள் திட்டினாலும் பின்னர் சமாதானமும் செய்து கொண்டே வந்தார் எம்.டி. என்னுடைய மேல் அதிகாரி இடைப்பட்ட நாட்களில் விலகி அவருடைய சைட்டை முழுகவனம் செலுத்த தொடங்கியமையால்.முழுக்கவே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில் பணியாற்றினேன்.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">அந்நேரத்தில் தான் கோபி அவர்களிடம் முன்னமே கூறி இருந்தேன் , சிங்கப்பூரில் வேலை இருந்தால் சொல்லுங்கள் போகிறேன் என்று.அதை நீண்ட நாட்களுக்கு பிறகு என்னிடம் கூறினார் நண்பரின் நிறுவனத்தில் வேலை என்று நானும் சரி அப்பளை பண்ணுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டேன்.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">ஒரே வாரத்தில் பிப்ரவரி 17 2012 ,விசா வந்துவிட்டது. மீண்டும் ப்த்துபிடித்த நிலை ஆனால் இம்முறை பரிபூரண அனுமதி பெற்று நிறைவாக வெளியேற வேண்டும் ஆனால் அதற்குள் சிங்கப்பூரில் போருக்க வேண்டுமே மார்ச் 22 அங்கே வந்துவிட வேண்டும் என்று வேற அழுத்தம் கொடுத்தனர். இங்கே வேலை முடியவே இன்னும் 3மாதங்கள் (சிவில் எஞ்சினியரிங்கில் இறுதி கட்ட வேலை தான் போட்டு தாக்கி நிம்மதியை கெடுத்து விடும்) ஆகுமே விசா வேல்யு வேறு மூன்று மாதங்கள் தான் , அய்யயோ என்று புலம்பவிட்டுவிட்டனர். அதை எல்லாம் தாண்டி மார்ச் 6 என்னுடைய ராஜினாமாவை அனுப்பிவிட்டேன் 22ஆம் தேதி என்னை விடுவித்து விடுமாறு. இரவு அனுப்பினேன் இ-மெயிலில் காலை முதல் அழைப்பு எம்.டியிடம் இருந்து. அலுவலகத்தில் வந்து காணுமாறு கூறிவிட்டார்.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">சிறிதுநேரம் என்னை சமாதானபடுத்த பார்த்தார், பின்னர் வெளிநாடு என்று நினைத்து கூட என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் ஆனால் ஒரு வேண்டுகோளுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துவிட்டு , ஏப்ரல் 5 வரை இருக்குமாறு கேட்டுகொண்டார். நானும் அதை ஏற்று கொண்டேன் நிறைவுடன். ஆனால் சிங்கப்பூரில் என்ன சொல்லி சமாளிப்பது என்று வேறு பயம் தொற்றி கொண்டது. கோபி அவர்களிடமே சொல்லி அதையும் அவர் நண்பரிடம் சம்மதம் வாங்கிவிட்டேன். </span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">இந்த நிறுவனத்தையும் அந்த நிறுவனத்தையும் பார்த்தேனே ஒழிய , என் வீட்டை நினைக்க மறந்துவிட்டேன். என் மேல் எண்ணிலடங்கா கோபத்தில் இருந்தனர். எங்கயோ போகபோற வீட்டுல வந்து ஒரு மாதம் இருக்க வேண்டாமா என்று தொடங்கி 20 நாள் இருக்க வேணாம் என்றும் 10நாள் இருக்க வேணாமா என்றும் இறுதியில் 3நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். ஆம் ஏப்ரல் 5ல் சந்தோசமாக நிறைவாக நிறுவனத்தில் இருந்து நிறைய வாழ்த்துக்களுடன் அனுப்பிவைக்கப்பட்டேன். </span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">வெறும் மூன்று நாட்கள் மட்டும் இருந்தவிட்டு ஏப்ரல் 9, 2012. சிங்கபூர் வந்தடைந்தேன். நேற்றோடு இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை என்னை இவ்வாறு எழுத தூண்டிவிட்டது. இங்கு வந்தது முதல் நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக மிக அதிகம் இங்கே நான் கண்ட , கண்டுகொண்டு இருக்கின்ற , காண போகின்ற ஒவ்வொருத்தரும் ஓராயிரம் கதைகள் கொண்டவராக இருக்கின்றனர். அவைகளை நான் கூற தொடங்கினால் எங்கெங்கோ போக வேண்டி இருக்கும்.என்னை என்னுடைய விருப்பங்களை என்னுள் இருந்தவற்றை என்னுடைய ஆசைகளை என்னுடைய ஏக்கங்களை என்னுடைய ஆர்வங்களை எனக்கு நன்றாக விளங்க வைத்த பெருமை. சிங்கபூருக்கு முழுக்க முழுக்க உண்டு.</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">என் சிந்தனை சிறகை சிறகடிக்க வைத்த சிங்கபூருக்கு சல்யுட் _/\_</span></div>
<div>
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div>
<span style="font-family: inherit;">பின்குறிப்பு : என்னடா சுயதம்பட்டம் என்று நினைக்காமல் தொடர்ந்து படித்து வருவோருக்கு நன்றி.இதை நான் என்று கூறாமல் அவன் என்று கூறி சிறுகதை போல எழுதவே நினைத்தேன் ஆனால் அது எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டு தவிர்த்தேன்.அதையும் நேற்று ஒரு நண்பரிடம் கேட்டேன் அவரும் கேள்விக்குறியாகவே பதில் சொல்ல நல்லது இப்படி எழுதியது என்று நினைத்து கொண்டேன்.</span></div>
</div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-84112192186660844662014-04-09T00:57:00.000-07:002014-05-14T05:06:44.826-07:00நினைவுகள் எழுத தூண்டுகிறது -1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">2009ல் என்னுடைய கல்லூரி பயணம் முடிவுற்றது, ஆனால் அந்த நாட்களின் ஏக்கம் இன்றுவரை என்னுள் அடங்காமல் அவ்வபோது என்று அல்லாமல் பெரும்பான்மையான என் நினைவுகள் அதை பற்றியே தான் நினைத்து கொண்டு இருக்கின்றது. மனதை நெருடும் நேரத்தில் சற்று தனிமையாக என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த இன்பகரமான நிகழ்வுகளை நினைத்தால் போதும், மனம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று விட</span><span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ும்.</span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">எப்பொழுதும் நண்பர்கள் படை சூழ இருந்துவிட்டு முதல் முறை 2010 ஜனவரி 18 கோவை மாநகர் நோக்கி சென்றேன் என்னுடைய முதல் பணிக்கு, அங்கு கற்றது தான் இன்றுவரை எனக்கு உதவி புரிந்து கொண்டு உள்ளது. கட்டிட பொறியாளராக இருப்பதில் கர்வமும் அங்கே தான் என்னுள் தோன்றியது. எவ்வளவு கடினம் என்றாலும் தொழில் நுட்பங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருந்ததால், எந்தஒரு நிகழ்வும் என்னை பாதிக்கவில்லை. அப்பொழுது நான் நினைத்து கொள்வது இந்த ஆர்வம் ஏன் கல்லூரியில் இல்லாமல் போனது அப்படி இருந்து இருந்தால் இன்று நீ எப்படி இருந்து இருக்கலாம் என்று என்னையே கேட்டு கொண்ட நேரம் அது. ஆனால் அது தேவையற்றது என்று பின்னர் என்னை நானே தேற்றியும் கொள்வேன். காலத்திற்கு ஏற்ற ஞானம் வந்தால் போதும் என்ற கோட்பாட்டில்.</span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">என்னுடைய முதல் மாதம் ஊதியம் 2250(14நாட்களுக்கு) வாங்கிய மணி நேரம் அதிகாலை 2.45, அன்றைய நாள் பணி காலை 8.30 தொடங்கி மறுநாள் அந்நேரத்தில் தான் நிறைவுற்றது. எனக்கு பெரும்பாலும் அங்கே நள்ளிரவு ,அதிகாலை தான் ஒவ்வொரு நாளின் பணி நிறைவு பெரும்,பெரும்பாலான கட்டிட பொறியாளர்கள் , தொழிலாளர்கள் வாழ்க்கை இவ்வாறு தான்.அதுவும் நான் ஊதியம் வாங்கிய அந்நாள் மகாசிவராத்திரி வேறு பின்னர் தான் அறிந்து கொண்டேன். அன்று முழுநாளும் கண் விழித்து இருந்தமையால் அதில் இருந்து இவ்வருட மகாசிவராத்திரி கூட கண் விழித்து இருப்பேன். அதில் ஓர் நிறைவு.</span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE1kpYcCSLrpkhK8dze0V-RjkK38LDXvtHDxa0F2AtDB5uwCMyr1OhZgfgjxxRhvpTcpnc7hiTA1ww74yQHfMd21yTvYVw6Kf_qAtMbPzRAe6Dwx3jexIWHhMIltENLsu8u2AXCnMJrMc/s1600/asal-poster-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE1kpYcCSLrpkhK8dze0V-RjkK38LDXvtHDxa0F2AtDB5uwCMyr1OhZgfgjxxRhvpTcpnc7hiTA1ww74yQHfMd21yTvYVw6Kf_qAtMbPzRAe6Dwx3jexIWHhMIltENLsu8u2AXCnMJrMc/s1600/asal-poster-wallpaper.jpg" height="320" width="285" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /><br />கல்லூரியில் இருந்தவரை அபிமான நாயகர்களின் படங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவோம். 2010 பிப்ரவரி தல நடித்த அசல் வெளியீடு கண்டது நண்பர்களுடன் காண வேண்டும் என்று ஒருநாள் விடுப்பு எடுத்து சம்பளம் வேறு வந்துவிட்டது அதுவரை அப்பாவின் பணம் முதல்முறை என்னுடைய பணத்தில் எனக்கு நான் அன்பவித்து கொள்ள போகிறேன் அதுவே மிக பெரிய போதையை தந்தது. திருச்சியில் அசல் படம் கண்டேன் நண்பர்களோடு. அதுவே இறுதி ஆனாது இப்படி திரைபடத்திற்காக மெனக்கெட்டு ஓர் இடத்திற்கு செல்வது எங்கே இருக்கின்றேனோ அங்கேயே காண தொடங்கினேன். பெரும்பாலும் தனியாக அல்லது உடன் பணிபுரிவோர்களுடன்.<br /><br />பணிபுரியும் இடத்தில் நற்பெயர் பெருகி கொண்டு இருந்தது , சில நேரத்தில் அதுவே தலை கனமாக மாற தொடங்கியது. ஆனால் எப்பொழுதும் எனக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மை அந்த தலை கனத்தை துவம்சம் செய்துவிட்டது.<br /><br />கோவையில் நான் பணி புரிந்தது வெறும் நான்கு மாதங்களில் முழுமையாக பொறியியல் கல்லூரி கட்டி முடித்தோம் (2லட்சம் சதுரடிகள் 2 தளம் கொண்டவை). அங்கே எனக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுத்த என் முதல் ஆசான் கங்காதரன் சார் அவருடைய அனுபவங்களை அப்படியே எனக்கும் பதியவைத்தார். இன்றுவரையில் என்னுடைய தொழில் நிமித்தான சந்தேகங்களுக்கு அவரே ஆசான். ப்ராஜெக்ட் மேனேஜர் முத்து கிருஷ்ணன் , வேலையாட்கள் செய்த தவறுக்கு ( முந்தினநாள் கட்டியவைகளுக்கு மறுநாள் தண்ணீர் விட வேண்டும்) நான் பழியேற்று கொண்டேன், மிக காட்டமாக என்னை திட்டிவிட்டார் எம் .டி, அதை உடன் இருந்து கண்ட என்னுடைய பி.எம். சைட் ஆபீஸ் சென்றவுடன் கையில் வைத்து இருந்தவற்றை வீசி எறிந்துவிட்டு எனக்காக அவரிடம் வாதாடி உள்ளார்.அதை உடன் இருந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்த பொழுது அவர் மீது அளவில்லா மதிப்பு ஏற்பட்டது. மே 18 2010 பணியில் இருந்து விடை பெற்று வந்தேன்.வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகருக்கு<br /><br />சட்டிஸ்கரில் புதிய பவர் பிளான்ட் சைட் ஆரம்பம் ஆக போகின்றது என்று வேறு கம்பெனியில் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னையில் கலந்தாய்வு கூட்டம் எல்லாம் நடத்தி, நாளை அங்கு செல்ல வேண்டிய குழுவோடு ரயில் பயணம் என்று கூறிவிட்டனர். பெரும் ஆவலோடு எல்லோரும் காத்திருந்தோம் இதில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் இருவர் என்னோடு இனைந்து இருந்தனர். மறுநாள் பேரிடியாக வந்தது ஒரு செய்தி எனக்கு.......?</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஒரே நாளில் அங்கு தற்பொழுது நிலவரம் சரி இல்லை (மாவோயிஸ்ட் தாக்குதல் நடை பெற்று இருந்தது) என்று காத்திருக்க வைத்துவிட்டனர். எங்கள் குழுவில் பெரும்பாலானோர் அதே கம்பெனியில் பணிபுரிகின்றவர்கள் , என் இரு நண்பர்களோ அதுவரையில் வேலைக்கு செல்லாமல் இருந்தவர்கள்,நான் தான் இருந்த வேலையை விட்டுவிட்டு வந்தது பெரிய தவறு என்<span class="text_exposed_show" style="display: inline;">று முதல் முறை உணர்ந்தேன் மீண்டும் சேரலாம் அங்கேயே. ஆனால் வேறு இடத்தில் முயற்சி செய்துவிட்டு பின்னர் பார்த்துகொள்ளலாம் என்று சென்னையில் முயற்சி செய்ய தொடங்கினேன். ஒரு மாதம் கழித்து ஜூன் 21, 2010 உறவினர் கொடுத்த சிபாரிசில் (நேர்காணல் நடத்தினார்கள் இதுவரையில் நான் கலந்து கொண்ட நேர்காணலில் என்னை அதிகம் வாட்டியது அங்கே தான்) புது கம்பெனியில் சேர்ந்தேன்.<br /><br />சென்னை என்று பெரிய நினைப்பு இல்லாமல் சென்னை என்ற சிறிய நினைப்புடனே தான் இங்கே வந்தேன் , அதே போல நேர்காணல் நடைபெற்ற அலுவலகம் தி.நகர், ஜி .என் செட்டி ரோடு. அலுவலகம் விஸ்தாரமாக சொகுசாக இருந்தது. நேர்காணலின் போதே என்னுடைய ஆவலை தெரிவித்து விட்டேன் ப்லான்னிங் எஞ்சினியர் தான் என்னுடைய விருப்பம் , அதற்க்கு உண்டான அட்வான்ஸ் கோர்ஸ் முடித்துள்ளேன் என்றெல்லாம் கூறினேன் ஆனால் அவர்கள் வழக்கம் போல அதற்க்கெல்லாம் அனுபவம் தேவை , முதலில் சைட்டில் கற்று கொண்டு பின்னர் நானே உங்களை ப்லான்னிங் டிவிஸியன்க்கு எடுத்து கொள்ளுகிறேன் என்று நேர்காணல் நடத்திய கம்பெனியின் சி.இ.ஒ கூறினார். சைட் ரெட் ஹில்ஸ் என்று கூறினார் அது எங்கயோ இங்க அருகில் தான் இருக்கும் என்று நினைத்து கொண்டே சென்றேன்.<br /><br />ரெட் ஹில்ஸ், நான் சென்னை என்று எங்க ஊருக்கு வேணும்னா சொல்லிக்கலாம் என்பது போலவே அது இருந்தது கோயம்பேடில் பேருந்து ஏறினாள் ஒன்றரை மணிநேரம் சென்றது. பின்னர் ரெட் ஹில்ஸ் அடுத்து ஷேர் ஆட்டோ பயணம் சோழவரம் ரேஸ் ரோடு அருகில் தான் சைட். இவ்வளவையும் என்னுடைய லக்கேஜ் தூக்கி கொண்டு பயணித்தேன் ஷேர் ஆட்டோவில் இறங்கி சாலையில் இருந்து உள்ளே சைட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் அதிகாமாக நடை வேறு. மீண்டும் தனித்து விடப்பட்ட நினைப்பு புது இடம் புது சூழல். ஆனால் கல்லூரியில் பயின்ற என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சென்னையில் தான் இருந்தனர் ,கிண்டியில் அறை எடுத்து அவர்களின் நண்பர்களுடன். அது ஒன்று போதும் என்று நினைத்து கொண்டு பணியாற்றினேன். தொடக்கத்தில் தினமும் பணியிடத்திற்கும் கிண்டிக்கும் சென்று வந்து கொண்டு இருந்தேன் பயண நேரம் தினமும் நான்கு மணி நேரம் விழுங்கியது. பின்னர் சைட் அருகிலேயே (வன்னாஞ்சத்திரம்) பணிபுரிவோர்களுக்கு தங்க இடவசதி செய்து கொடுத்தனர்.<br /><br />கட்டிட கலையில் பல பிரிவுகள் உண்டு சிலர் ஒன்றை மட்டும் பிடித்து அதில் அனுபவத்தை வளர்த்து கொள்வார்கள், இன்னும் பலர் எல்லாவற்றிலும் பங்கெடுத்து எதிலும் அனுபவமற்று இருப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர். நான் என்னுடைய ஐந்து வருட அனுபவ முடிவில் ஏதோ ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளலாம், அதுவரையில் பெரும்பாலானவற்றை தொற்று விட வேண்டும் வேண்டும் என்று பின்னர் முடிவு செய்தேன், ஏன் என்றால் கோவையில் வேலை கற்றதுக்கும் இங்கு சேர்ந்த இடத்தில் வெறும் 30 சதவிகிதம் தான் ஒற்றுமை மற்றவைகள் எனக்கு மீண்டும் புதியவைகளா இருந்தது (ஸ்டீல் ஸ்ட்ரக்சர்).<br /><br />வேலை, நான் கோவையில் பணி புரிந்ததைவிட இலகுவாக இருந்தாலும் இங்கேயும் பல நாட்கள் நள்ளிரவு வரை இருக்க வேண்டும். முதல் முறை மொழிவாரியாக பிரிக்க பட்டேன் உள்நாட்டிலேயே, ஆம் நான் பணிபுரிந்த கம்பெனி ஆந்திர முதலாளி இந்தியா முழுக்க பல்வேறு தொழில்துறைகள் நடத்துபவர். என்னுடைய சைட் அருகே மிகபெரிய இடத்தை ரிலைன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுத்து உள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அங்கே ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை , என்றாலும் நாங்கள் சிலர் ஒன்றாக இருந்தோம் அதில் குறிப்பாக அங்கேயே 4 வருடங்களாக பணிபுரிந்து வந்த ஆனந்த் அங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப என்னை வழி நடத்தினார். பின்னர் கார்த்திகேயன் , சதீஷ் என்று என்னை தொடர்ந்து சேர்ந்தவர்கள் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டோம்.<br /><br />இங்கே தான் முதல் முறையாக என்னுடைய ஊதியத்தில் சரி பாதியை வீட்டிற்கு கொடுக்க துவங்கினேன்.கோவையில் பணிபுரிந்த வரையில் வீட்டிற்கு கொடுத்ததே இல்லை, ஆக இதுவும் மறக்க இயலாத தருணம் எனக்கு.<br /><br />அங்கு எனக்கு மேலதிகாரியாக பணி புரிந்த Ram Subramaniyan ராம சுப்பிரமணியன் , என்னுடைய பி.எம் ராஜசேகர் இவர்கள் எல்லாம் பக்க துணையாக உதவி புரிந்தனர் என்னுடைய வளர்ச்சிக்கு. மாதம் ஒருமுறை கூர்கான் தலைமை அலுவலகத்தில் இருந்து சி.இ.ஒ விசிட் வருவார் அப்பொழுதெல்லாம் நற்பெயர் வாங்கிக்கொண்டு. நன்றாக சென்று கொண்டு இருந்தது. கிண்டியில் நண்பர்கள் இருந்ததால் அடிக்கடி அவர்களுடன் நேரம் செலவிட்டு தேவை அற்ற விடுப்பு எடுத்து கொண்டு இருந்தேன். ஆனாலும் என்னுடைய பணியின் கருத்தின் காரணமாக எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.<br /><br />பல உள்ளடிவேலைகளை எவ்வாறு சமாளிப்பது என்று கற்று கொண்டது இங்கே தான் , தெலுகு பேசும் நபர்களை எவ்வாறு கவர்வது என்று நினைத்து நான் எடுத்த ஆயுதம் தெலுகு சினிமா.அவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து இருப்பதை எடுத்து காட்டி கூறி,அவர்களை பற்றியும் தெரியும் என்பது போல காட்டி கொண்டு அவர்களையும் அரவணைத்து கோஷ்டி பூசல் இல்லாமல் பணி புரிந்தோம். அவ்வப்போது கம்பெனி பார்ட்டி என்று சைட்டிலேயே கொண்டாடுவர் அப்பொழுது எல்லாம் கிண்டிக்கு எஸ்கேப் ஆகிவிடுவேன்.<br /><br />நான் பணி புரிந்த சைட்டை விரைவாக முடித்தமையாலும் , அருகே இதைவிட அதிக இட கொள்ளளவு கொண்ட வேலை இருந்த காரணத்தினால் மாற்றப்பட்டேன் அருகிலேயே. அங்கேயும் வழக்கம் போலவே நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஸ்டீல் ஸ்ட்ரக்சர் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன். உடன் பயின்ற நண்பர்களிடம் பெருமை பீற்றி கொண்டு இருந்தது வழக்கமே. 2010 தீபாவளிக்கு முதல் முறை போனஸ் (சேர்ந்து நான்கு மாதத்தில்) வாங்கி வீட்டில் எல்லோருக்கு ஆடைகள் வாங்கி தந்தது (அம்மாவிற்கு தரவில்லை <i class="_4-k1 img sp_7w9zuu sx_57bc93" style="background-image: url(https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yH/r/eUYfuBIR9S1.png); background-position: -238px -782px; background-repeat: no-repeat no-repeat; background-size: auto; display: inline-block; height: 16px; vertical-align: -3px; width: 16px;"></i>வாங்க தெரியவில்லை) மறக்க முடியாதது.<br /><br />தீபாவளிக்கு சென்று திரும்பிய பிறகு ஓமன் நாட்டில் வேலை என்று ஒரு நேர்காணலில் கலந்து கொண்டேன் சென்னையில், அதில் நானும் இன்னொருவரும் தேர்ச்சி பெற்று விட்டோம். வீட்டிற்கு எல்லாம் சந்தோசமாக சொல்லி விட்டேன். வேலை பார்க்கும் இடத்திலும் நண்பர்களிடம் சொல்லி விட்டேன். அந்த கணத்தில் தலையில் 20 கிலோ கனம் பிடித்தது போன்று இருந்தது. தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு செல்லாமால் இருந்துவிட்டு , சொன்னால் நிச்சயம் விட மாட்டார்கள் என்னுடைய உறவினரிடம் சொல்லி தடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டே. வேலையை விட்டு வந்து விட்டேன். ஆனால் அங்கு என்னோடு பணி புரிந்த அனைவரும் இன்றும் என்னோடு தொடர்பில் உள்ளனர் என்னுடைய பி.எம் உள்பட (இவரிடம் பேசி கொஞ்ச நாள் ஆகிவிட்டது). இதுவெல்லாம் நடந்தது நவம்பர் 16,2010. இங்கயும் நான்கு மாதங்கள் தான். அப்பொழுதே உள்ளுக்குள் உறுத்தியது.<br /><br />ஓமன் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தங்களுடைய சான்றிதழ்களில் பல அதிகாரபூர்வ கையப்பங்கள் பெற வேண்டும் என்று கூறி அதற்க்கு உண்டான வேலைகளை தொடங்கினேன். நம் தலைமை செயலகம் சென்று கையப்பம் பெற்று , பின்னர் புரோக்கர் மூலம் டெல்லிக்கு அனுப்பி கையெப்பம் பெற்று வந்தது. இதற்க்கு எல்லாம் 20 நாட்களுக்கு மேல் ஆனது. இதற்கிடையே பெரும்பாலானோர் என்னை ஓமன் செல்லுவதை தடுக்கவே நினைத்தனர், உனக்கு முற்றிலும் ஒற்று வராது நீ நிச்சயம் திரும்பி விடுவாய் விட்டு விடு என்று பலவாறாக கூறினார்கள். அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன். அடுத்து மருத்துவ பரிசோதனை எடுத்து கொடுத்து விட்டால் ஒரு சில நாட்களில் பயணம் என்று வந்துவிட்டது.<br /><br />-தொடரும்<br /><br />(இந்த நேரத்தில் நான் என்ன முடிவு எடுத்து இருப்பேன் அல்லது என்ன முடிவு எடுத்து இருக்க வேண்டும் என்று கூறுங்கள்)</span></span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><span class="text_exposed_show" style="display: inline;"><br /></span></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><span class="text_exposed_show" style="display: inline;"><a href="http://arjiththala.blogspot.com/2014/04/blog-post_10.html" target="_blank">அடுத்த பகுதி</a></span></span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #37404e; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;"><br /></span></div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-49890612171422266702014-03-31T04:16:00.000-07:002014-05-14T05:06:44.788-07:00நெடுஞ்சாலை - தமிழில் ஒரு டைப்பான ரோடு மூவி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCnaVD-txuvFTKuEnygqTT8PLgYd7AKV88WlFoWSEsu2z40iOFY1-3LhO17O5fG1eTP4nmtRlkO8gvRmy6CLSqDdreFwj3wgldS_m_7q_7EFk7G8613RyCVKy1yVpvJ7xaM7uTxzLliYo/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCnaVD-txuvFTKuEnygqTT8PLgYd7AKV88WlFoWSEsu2z40iOFY1-3LhO17O5fG1eTP4nmtRlkO8gvRmy6CLSqDdreFwj3wgldS_m_7q_7EFk7G8613RyCVKy1yVpvJ7xaM7uTxzLliYo/s1600/maxresdefault.jpg" height="640" width="408" /></a></div>
<br />
உதயநிதி வெளியீடு என்று தெரிந்தவுடன் ஏற்கனவே இருந்த ஆவல் அதிகமானது. படம் சில்லுனு ஒரு காதல் இயக்குனர் என்று நினைத்தால், அவர் படத்தின் முன்னோட்டத்துலேயே. அப்படி ஒரு நினைப்பை நம்மிடம் சுக்கு நூறாக தகர்த்து எறிந்து விட்டார்.<br />
<br />
1980களின் நடுபகுதியில் கதை நடைபெறுவது போல இருக்கின்றது. நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளில் உயிர் பணயம் வைத்து கொள்ளை அடிப்பவன் நாயகன், அவனை சுற்றி 3 நபர்கள். அவர்களுடைய பின்னணியே கதை. நாயகனை திருத்த காதல் அதற்க்கு வேண்டும் கதாநாயகி. இவர்களுக்கு காதல் ஏற்பட தேவை மோதல் பின்னர் ஊடல் அதற்க்கு தேவை ஒரு வில்லன். என்று வழக்கமான தமிழ் சினிமா தான் என்றாலும். இயக்குனரின் திரை யுக்தி பல இடங்களில் அசர அடிக்கின்றது. தார் பாய் முருகனாக நாயகன் ஒவ்வொருமுறை கொள்ளை அடிக்கும் போது பின்னணி இசை நெஞ்சை பதற வைத்து , காட்சியின் உள்ளே எளிதாக நுழைய வைத்துவிடுகின்றது. படத்தில் மிக பிடித்தது அவர்கள் கொள்ளை அடிக்கும் காட்சிகள்.<br />
<br />
இன்ஸ்பெக்டராக வருபவர் நடிப்பில் புது மொழியை காட்டி உள்ளார். காட்சிக்கு காட்சி பட்டய கிளப்பி உள்ளார். யார் இவர் ???? இனி நிறைய படங்களில் இவரை காணலாம். இவருக்காகவே படத்தை நிச்சயம் காணலாம்.<br />
<br />
மற்றபடி படத்தின் திருப்புமுனைகளாக பல காட்சிகள் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்லும்.<br />
<br />
மறந்துட்டேன் இந்தப்படத்தில் வரும் நண்டூருது நரி ஊருது இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு இதுலையே பாருங்க அந்த இன்ஸ் மேனரிசங்களை. பாட்ட தினமும் இப்போ நாலு அஞ்சு தடவ கேட்குறேன்(கேட்க மட்டும் தான் செய்யுறேன்) :)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='640' height='360' src='https://www.youtube.com/embed/NrIL9EXAB34?feature=player_embedded' frameborder='0'></iframe><br />
<br />
<br />
குறிப்பு : நான் இரண்டுமுறை பார்த்துவிட்டேன் படத்தை. நேரமின்மை காரணமாக விரிவாக எழுத முடியவில்லை. நம்பி போகலாம் கொடுத்த காசு மோசம் போகாது :)</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-57844210909240287942014-03-29T05:37:00.001-07:002014-05-14T05:06:44.798-07:00இனம் - பிழையான படைப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இனம் -<br />
<br />
80 நபர்கள் மட்டுமே இருக்கைகள் கொண்ட திரை அரங்கில் இன்று மதிய காட்சிக்கு 30க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து தங்களுடைய இனப்பற்றை காட்டிக்கொண்டோம். உணர்வுபூர்வமான படம் என்று நினைத்த எனக்கு ஏன் வந்திருந்தவர்களும் அப்படி தான் இருந்தனர் முகத்தை விறைப்பாக வைத்து கொண்டு , ஆனால் என்னவோ பல இடங்களில் நகைச்சுவை படம் போல குட்டி திரை அரங்கமே அதிர்ந்தது சிரிப்பொலியில். சந்தோஷ் சிவன் நம்மிடையே ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பி இருப்பார் போலும் ????<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMDxxGl2nFuDx36vBV5URSJlBKubn6JHP77KHHsDlKGbIG4R4dV9cWYcMty926GbZ3wRr5AUoO0VqHGhtkD17svm2hymYlXZMYcUePpC17yMH_wsmRxC53N2uaQKoFto0MLnGa5bl6RFg/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMDxxGl2nFuDx36vBV5URSJlBKubn6JHP77KHHsDlKGbIG4R4dV9cWYcMty926GbZ3wRr5AUoO0VqHGhtkD17svm2hymYlXZMYcUePpC17yMH_wsmRxC53N2uaQKoFto0MLnGa5bl6RFg/s1600/images.jpg" height="366" width="640" /></a></div>
<br />
படம் தொடங்கியது முதல் இறுதிவரை எந்தவொரு இடத்திலும் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பதை மருந்துக்கும் கூட கூறவில்லை ஆனால் படம் நெடுக்க இனக்கலவரம் இனக்கலவரம் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக காண்போரிடம் பதியவைத்து விட்டார். என்ன ***** இனக்கலவரம் , அங்கே மக்களுக்கும் மக்களுக்கும் இடையேவா பிரச்சனை??மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தானே ஒரு அரசாங்கமே (பல நாட்டு துணையுடன் ) தலைமை ஏற்று நடத்திய போரை மிக எளிதாக இனக்கலவரம் என்று எப்படி கூற முடியும். அவர் கூறியது போலவே நானும் கதை கூற வேண்டும் என்றால், ஒரு நாட்டில் இறுதி கட்ட கலவரத்தில் இருந்து தப்பித்து பக்கத்து நாட்டில் தஞ்சம் அடைவோரில் , ஒரு இளம் பெண் ??? அவளுடைய வாழ்வை அவள் பார்வையில் கூறுவதாக படம் இருக்கின்றது.<br />
<br />
அதே போல காட்சிகள் நெடுக்க குறியீடு குறியீடு என்று என்னன்னவோ போட்டு பார்வையாளனை (குறியீடு புலிகள் யாரேனும் விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்) குழப்பி அடித்து உள்ளார், படம் ஆரம்பம் டைட்டில் கார்டில் நான் எதை பார்க்க வேண்டும் என்று குழம்பிவிட்டேன் படத்தில் யார் யார் பங்காற்றி உள்ளனர் என்பதை காண தொடங்கி இவர் அதனூடே போட்ட கார்டூன் குறியீடுகளில் அதைவிட்டு இதை தொடர வேண்டி (ஒரு வேளை படத்திற்கு உதவியவர்கள் என்று யுனிபார்ம் போட்டவர்களுக்கு நன்றி செலுத்தி இருப்பாரோ ???) , இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் போனது தான் மிச்சம்.<br />
<br />
சிறுமிகளை (கதை சொல்லும் சிறுமி கூட ) வன்கலவி யுனிபார்ம் போட்டவர்களால் அரங்கேற்ற படுகிறது , அதை மற்றொருவர் வீடியோ எடுக்கிறார், அப்படியே அருகில் இருக்கும் கேப்டன் பிரசன்னாவிடம் "இதை பற்றி எதாவுது கூறுங்கள் என்று கேட்க , அவரோ என்ன சொல்லுவது இவர்கள் எல்லோரும் என் நண்பர்கள் தான் ஆனால் போர் இவர்களை மிருகமாக்கி விட்டது "என்று கூறுகிறார். இங்கு இயக்குனர் யாரை நியாயபடுத்துகிறார். கருணாஸ் கதாபாத்திரம் அகிம்சை வழியா ?? போராளிகள் எதிர்ப்பாளரா?? சுயநலவாதியா ?? எது என்பது சந்தோஷ் சிவனுக்கே வெளிச்சம்.<br />
<br />
சுனாமி அக்காவாக சரிதா நீண்ட நாள் கழித்து அவரை திரையில் காணவே நிறைவாக தான் இருந்தது அவரின் பாத்திரப்படைப்பும் தெளிவு இல்லாமல் கொன்று விட்டார். சிறுவர்களின் நடிப்பு மிக எதார்த்தமாக அளவாக இருந்தாலும் இயக்குனர் அவர்களுக்கு யதார்த்தம் மீறும் வகையில் திருமணம் செய்து வைத்து முதலிரவு காட்சிகள் கூட வைத்து இருக்கின்றார். இரண்டாம் பாதியில் இவ்வாறான காட்சிகளை காணும் பொழுது இவர் நம் மக்கள் மேல் உள்ள அனுதாபத்தை மறக்கடிக்கவே இப்படத்தை எடுத்து உள்ளார் போல என்றே நினைக்க தோன்றியது. அனுதாபத்தை கூட வெளிக்கொணர முடியாமல் தவிக்கும் என்னை போன்ற சிலரையும் மிக சினம் கொள்ள தோன்றியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvsuRBywXlpe1bFcCElUGDRwvgumxh3MBZL56tMZSDtzXMwZz2FXDI1dKiSr1T1Ug86e9GsQ05yYd7A6d0YdgyoiptoPXm8mcRaUAOawa4StAnTk8Nqlxs7FbZTTVETQCyOP44teIcok/s1600/ob_9fb800_1794659-716429481776062-1758719881-n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEvsuRBywXlpe1bFcCElUGDRwvgumxh3MBZL56tMZSDtzXMwZz2FXDI1dKiSr1T1Ug86e9GsQ05yYd7A6d0YdgyoiptoPXm8mcRaUAOawa4StAnTk8Nqlxs7FbZTTVETQCyOP44teIcok/s1600/ob_9fb800_1794659-716429481776062-1758719881-n.jpg" height="518" width="640" /></a></div>
<br />
<br />
ஒளிப்பதிவு , இசை , நடிப்பு என்று எதை பற்றியும் கூரவிடாமல் தடுத்து விட்டது இயக்குனரின் நேர்மையற்ற எண்ணங்கள் , அதுவும் அவருடைய சாட்சியாக இப்படம் இருக்க வேண்டும் என்று கூட நினைத்து இருப்பார் போல.<br />
<br />
நந்தன் என்ற கதாபாத்திரம் தான் படத்தில் என்னை மிக மிக கவர்ந்தது , அவரை அவ்வளவு மெருதுவாக நடிக்க வைத்து உணர்ச்சி காட்டிய இயக்குனருக்கு ஏனோ உணர்ச்சி இல்லாமல் போனது என்று தெரியவில்லை.<br />
<br />
படத்தில் வரும் யுனிபார்ம் போட்டவர்கள் எல்லாம் திடமான ஆண்மகனாக காட்டி விட்டு அவர்களை எதிர்த்து போராடுவோர் அனைவரும் அரும்பு மீசை கூட முளைத்து இருக்காதவர்கள், ஏன் ஒருவேளை ஜூனியர் ஆர்டிஸ்ட் பிரச்சனை இருந்து இருக்கும் போல இயக்குனருக்கு. சந்தோஷ் சிவனிற்கு என்ன பாசமோ தெரியவில்லை நம் தமிழ் மக்கள் மேல் அவரும் விடாமல் நமக்காக எடுத்து கொண்டு தான் இருக்கின்றார், ஆனால் பிழையாக அவருக்கு யாரேனும் இதுவரையில் வந்த சேனல் 4 வீடியோக்களை காட்டி தெளியவையுங்களேன்.<br />
<br />
இனம் போன்ற தவறான பதிவுகள் சாட்சியாகி விட கூடாது, இப்படத்தை கண்டு எல்லோரும் அவரவர்களுக்கான எண்ணங்களை புரிந்து எதிர்ப்பை காட்ட வேண்டும். பின் வரும் தலைமுறையினர் இப்படத்தை கண்டு பிழையானவற்றை தெரிந்து கொள்ளாமல் தவிர்க்க தற்பொழுதைய எதிர்ப்புகளே தெளிவு பெற வைக்க வேண்டும் .<br />
<div>
<br /></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-24750398135944159062014-03-21T06:13:00.000-07:002014-05-14T05:06:44.739-07:00குக்கூ - காவியக் காதல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்னையில் பணிபுரிந்து பொழுது சில மாதங்கள் வேளச்சேரி-மைலாபூர் மின்சார ரயிலில் தான் பயணம் , அப்பொழுது அங்கே ரயிலில் காணும் மாற்றுதிறனாளிகள் பலரும் தங்களுடைய குறைகள் பற்றி எந்தவொரு கவலையும் இன்றி மிக கலகலாப்பாக தங்கள் பணியை செய்து கொண்டு இருப்பார்கள்.அதை காணும் பொழுதெல்லாம் ஏன் இவர்களுடைய இந்த இன்பமான பக்கங்களை எவரும் பதிவு செய்வதை மறுத்து இருளான பக்கங்களாக காட்டுகின்றனர் என்று தோன்றும்.அதை நிவர்த்தி செய்யும் வகையில் குக்கூ திரைப்படம் அற்புதமாக பதிவு செய்து உள்ளது.<br />
<br />
வழக்கம் போல கதை சொல்லி உங்களின் சுவாரசியத்தை குறைக்க விருப்பமில்லை. காதல் கதை இருவர் சேர்ந்தார்களா இல்லையா அவ்வளவே. தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் 95% படங்களின் கதை தான் என்றாலும் அதை இயக்குனர் சொன்ன விதத்திலும் , கதாபாத்திரங்களின் நடிப்பிலும் நமக்கு கிடைத்த அருமையான பதிவு இப்படம். இப்படத்தின் ஆக சிறந்த சிறப்பு ஒரு காட்சியில் கூட நமக்கு அனுதாபம் ஏற்படவேண்டும் என்று திணிக்கப்படவில்லை. கதையை அவர்களின் பார்வையில் யதார்த்தமாக காட்சிபடுத்தி உள்ளனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlV9QSwJ3TczBIUmUBmiE6LVkTC-zWBNaRXN-8ye2whjgJ6tikwgZvfruFdnkQ3RSDs0vHKBBEQ3CHkZjkx0ng_cMOSlL53y-67A_jZaoMkAi7EfoXetyQow6K9ZMVbcvugIN8IFcw_8/s1600/Cuckoo-Movie-Posters-Wallpapers-11_S_163.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYlV9QSwJ3TczBIUmUBmiE6LVkTC-zWBNaRXN-8ye2whjgJ6tikwgZvfruFdnkQ3RSDs0vHKBBEQ3CHkZjkx0ng_cMOSlL53y-67A_jZaoMkAi7EfoXetyQow6K9ZMVbcvugIN8IFcw_8/s1600/Cuckoo-Movie-Posters-Wallpapers-11_S_163.jpg" height="640" width="640" /></a></div>
<br />
அட்டக்கத்தி தினேஷ் , பிரமிக்க வைத்து உள்ளார் தன்னுடைய பங்கை மிக சிறப்பாக வெளிகாட்டி உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தமிழ் கதாபாத்திரமாக மனதை உருக்கிவிட்டார். சுந்திரகொடியை முதல்முறை சந்திக்கும் இடத்தில் நக்கல் அடிப்பதும் , பின் அவளின் கைகள் தன்னை தொட்டவுடன் அதில் காதல் உணர்வில் திளைக்கும் காட்சி, அவளோடு வாழ்ந்து விட போராடும் காட்சிகள் என்று தினேஷ் நடிப்பில் இப்படம் என்றும் அவருக்கு ஓர் பொக்கிஷம் தான். பல விருதுகள் நிச்சயம் காத்துக்கொண்டு இருக்கின்றது இந்த படத்திற்காக. நான் உங்களை ஒரு தடவ பார்த்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கட்டிபிடித்து உடலை தொடும் காட்சியில் நெகிழ வைத்துவிடுவார். தன்னுடைய இயலாமையை ஒரு காட்சியில் கூட வெளிகாட்டிகொள்ளாமல் பார்வை அற்றவனின் உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து உள்ளார். மொத்தத்தில் இவரின் நடிப்பு கிளாஸ்.<br />
<br />
மாளவிகா சுதந்திரகொடியாக தன்னுடைய குறை மறந்து வாழ்க்கையில் ஆசிரியராக ஜெய்க்க வேண்டும் என்று வாழ்ந்து வருபவர். காதல் தோல்வியின் போது அந்த வலியை நமக்குள்ளும் ஏற்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு சிறப்பு தான் ஆனாலும் தினேஷ் நடிப்போடு போட்டி போட முடியவில்லை. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க இவருக்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும். பிங்க் கலர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , ஆனா அது எப்படி இருக்கும் என்று கேட்டு கொண்டே அது இளையராஜா பாடல் போல இருக்கும் என்று கூறும் பொழுது கண்கள் கலங்கிவிடுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSDxaDDR-ypHdPwGPfomAKgfgaxiIUKydZVy07KY0CRUCrMaYBI3qqpRkkaDTddt0tKSHZK3u4y2cRWe1RdparYq-J7VClFSl5nrOvIDJ_brjZVyN36h1AByQ7LgEzFJabTXoF6mNxb48/s1600/cuckoo-tamil-movie-stills111392721691.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSDxaDDR-ypHdPwGPfomAKgfgaxiIUKydZVy07KY0CRUCrMaYBI3qqpRkkaDTddt0tKSHZK3u4y2cRWe1RdparYq-J7VClFSl5nrOvIDJ_brjZVyN36h1AByQ7LgEzFJabTXoF6mNxb48/s1600/cuckoo-tamil-movie-stills111392721691.jpg" height="430" width="640" /></a></div>
<br />
சந்திரபாபு , எம்,ஜி.ஆர் , அஜித், விஜய் என்று இவர்களும் தங்களுடைய நடிப்பை வாரி வழங்கி உள்ளனர் அதிலும் விஜய் -அஜித் வரும் காட்சிகள் அட்டகாசம். சந்திரபாபு தான் அவர்களின் காட்பாதராக இருக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர் ஒரே காட்சியில் இறுதியில் தான் யார் என்பதை மீண்டும் நிருபித்து இருப்பார் (படத்தை பார்த்து இங்கே நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்). அதுவும் தினேஷின் நண்பராக உடன் வருபவர் அட்டகாசமான நடிப்பு. அவரை எங்கோ பார்த்தது போலவே தோன்றுகிறது வேறு எந்த படத்திலாவுது நடித்து உள்ளாரா???. பின்னர் ஆடுகளம் முருகேஷ் தண்ணி பாரதியாக இசை பிரியராக தினேஷை புகழ்ந்து அவருக்கு உதவும் காட்சிகள் என்று தன்னுடைய இருப்பை சரி செய்து உள்ளார்.<br />
<br />
இதுபோன்ற களம் உள்ள படங்கள் பெரும்பாலும் அவர்களை பெரும் வாதைக்கு உள்ளாக்கி நம்மை அழவைத்து விட வேண்டும் என்றே இருந்து இருக்கும். அதை முற்றிலும் உடைத்து புதுமையாக படத்தில் வரும் பெரும்பாலோனரும் நல்லவர்களாக , இரக்கம் உள்ளவர்களாக விபத்து என்றால் உதவி செய்வோர் ,யார் என்று தெரியாத பார்வையற்ற பெண் என்றாலும் அவருக்கு உதவி செய்வோர்கள் .... இப்படி ஆச்சிரியபடுத்தும் காட்சிகள் அதிகம் உண்டு.இரண்டாம் பாதியின் நீளம் சற்று அதிகம் தான்.<br />
<br />
இசை அவ்வளவு அழகாக கதையோடு இழையோடுகிறது , சந்தோஷ் நாராயணன் அவர் மீது எதிர்பார்ப்பை கூடி உள்ளது என்றால் மிகை இல்லை. பின்னணி இசை உறுத்தவே இல்லை இது போன்ற படங்களில் வயலினை போட்டு தீட்டி எடுத்துவிடுவார்கள் ஆனால் இவர் அழகாக ரசிக்க வைத்து உள்ளார் .அதே போல ஒளிப்பதிவும் ரம்மியமாக கவர்கின்றது , பார்வையற்ற அவர்களின் கரு விழிகளில் கூட கமெரா விளையாடி உள்ளது. அற்புதமான பாடல்களை இவரின் ஒளிப்பதிவில் இன்னும் மெருகேத்தி உள்ளார்.எடிட்டிங் தான் கொஞ்சம் இன்னும் கட் செய்து இருக்கலாம் ஆனாலும் அது குறையாக தெரியவில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8p-535ulCp-iPlJA6JM99GU7Z_EyLUzEfCyMlCiHUloEFduEAEEKRDftEsgEJQrbhglF-25sT3v84TUPZaG-T-D9Jv-8WtBZFIyHiuNVlhyphenhypheno70A42E7ZCNl_QGIprscCrrLZ-9niIUc/s1600/CM16RAJU_MURUGAN_1178693g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8p-535ulCp-iPlJA6JM99GU7Z_EyLUzEfCyMlCiHUloEFduEAEEKRDftEsgEJQrbhglF-25sT3v84TUPZaG-T-D9Jv-8WtBZFIyHiuNVlhyphenhypheno70A42E7ZCNl_QGIprscCrrLZ-9niIUc/s1600/CM16RAJU_MURUGAN_1178693g.jpg" height="640" width="464" /></a></div>
<br />
இயக்குனர் ராஜு முருகன் தன்னுடைய முதல் படைப்பை காலத்திற்கும் அழியாத படைப்பாக தந்த வகையில் அழுத்தமான வருகையாக பதிவுசெய்து உள்ளார். படம் ஆரம்பித்தது முதல் பல கதாபாத்திரங்கள் வர தொடங்கியதும் அவர்களுக்கு என்று எந்த முன்னுரையும் காட்டாமல் காட்சிகளின் வழியாக நமக்கு புரியவைத்த இடங்கள் மிக சிறப்பு. இதையும் நீங்கள் காணும் போது உணருவீர்கள். படத்தில் ராஜு முருகன் அவராகவே நடிக்கவும் செய்து உள்ளார் நல்லா தான் இருக்கார். சார் ப்ளீஸ் நீங்களும் அமீர் , சசி குமார் , சேரன் போல வர வேண்டாம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்க வைத்துவிட்டது உங்களின் முதல் படைப்பே.<br />
<br />
குக்கூ- காவியக் காதல் , அனைவரும் நிச்சயம் திரை அரங்கில் சென்று காண வேண்டிய திரைப்படம்.</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com4Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-13505425635759758512014-02-14T07:56:00.000-08:002014-05-14T05:06:44.718-07:00நாவல் சிறுகதையானது பின் நாவலாகும் - சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பனிபொழியும் அதிகாலை நேரம்<br />
உன் முகம் பார்க்க சூரியனும்<br />
எட்டி எட்டிப் பார்க்கும்<br />
உன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்...<br />
<br />
நீ சோம்பல் முறிக்கும்<br />
அழகை பார்த்து சூரியனும்<br />
தலை சுற்றி தான்<br />
மேகத்தினுள் புதைந்து போகும்...<br />
<br />
சிரித்து கொண்டே கார்த்திக்கை பார்த்து போ படிக்க மாட்டேன் என்று சிணுங்குகிறாள் சந்தியா. ஹே என்ன ரெண்டு வரி படிச்சுட்டு அதுக்குள்ள வெட்கபடுற முழுசா படிடா என் செல்லம்ல என்று அவளின் கன்னத்தை தட்டுகிறான் அவளும் படிக்க தொடங்குகிறாள் மனதுக்குள்ளேயே.<br />
<br />
நீ போடும் கோலம் கூட<br />
கலைந்து கலைந்து நீண்டு கொண்டே<br />
போகும் இன்னும் கொஞ்ச நேரம்<br />
நீ கோலமிட மாட்டாயா என்று ....<br />
<br />
(அவள் படித்து உதிர்க்கும் உதடுகளின் சிரிப்பின் வெடிப்பை கார்த்திக் அளக்கின்றான் )<br />
<br />
நீ போட்ட கோலம் கூட<br />
உனக்கு நன்றி சொல்லி<br />
சிரிக்கும் முடிவில்<br />
நீ வைக்கும் பூவில் ...<br />
<br />
உன் குளியல் அறை<br />
கண்ணாடி உன்னை<br />
பார்த்து பார்த்து<br />
விரிசல் விடுவது<br />
உனக்கு புரியவில்லை<br />
போல நீயும்...<br />
அதை மாற்றி கொண்டிருப்பதை<br />
விடுத்து அதை தூக்கி விடு ....!<br />
<br />
இந்த வரியை படித்து முடித்தவுடன் அவள் நாணம் கொள்ள முடியாமல் ச்சீ போடா என்னால படிக்க முடியலை என்று சிரித்து கொண்டே அவனை அடிக்கிறாள், அவனும் அவளின் அன்பை ஏற்று கொண்டே அவளை மேல் படிக்க சொல்லுகிறான் , வெளியில் நடித்தாலும் அவளுக்கும் அடுத்து என்ன எழுதி உள்ளான் என்று படிக்க ஆவல் தான் அதனால் தொடர்கிறாள்.<br />
<br />
உன் அறையில்<br />
உள்ள கண்ணாடியோ<br />
நீ உடை மாற்றுவதை<br />
பார்த்து பார்த்து விரிசல் விடுகிறது ...<br />
உன் வீட்டில் இருக்கும்<br />
கண்ணாடிகள் அனைத்தும்<br />
பிறவி பலன் அடைகின்றது ....<br />
<br />
( படித்து கொண்டே சிரித்து கொண்டும் நாக்கை கடித்து கொண்டே கார்த்தியை பார்வையாலே விழுங்கிவிட்டால் சந்தியா.)<br />
<br />
நீ சாலையில் நடந்து<br />
செல்லும் போது <br />
உன்னை ரசிக்க<br />
ஒரு கூட்டம் என்றல்...<br />
உன் நிழலை ரசிக்கவும்<br />
ஒரு கூட்டம்<br />
பின் தொடர்கின்றது ....<br />
<br />
உன்னை தொட்டு செல்லும்<br />
தென்றல் கூட மற்றவரை<br />
தீண்டும் போது<br />
அளவில்லா சூடுடன்<br />
இருகின்றது ...<br />
<br />
இவையனைத்தும் கடந்து<br />
நீ பேருந்தில் ஏறினால்<br />
அதுவரை மாநகர பேருந்து<br />
கூட அழகு பேருந்தாகிறது....<br />
<br />
நீ உன் கல்லூரியில்<br />
இறங்கி செல்லும் போது<br />
உன்னை பின்தொடரும்<br />
கூட்டத்தில் ஒரு சலசலப்பு<br />
நீ யாரை பார்த்தாய் என்று ...?<br />
<br />
நீ உடை சரி செய்யும்<br />
ஒவ்வருமுறையும்<br />
மற்றவர்களும் அதை<br />
மறந்து உன்னை போல்<br />
செய்து பார்க்கிறார்களே ...அய்யகோ ?<br />
<br />
இப்படி உன்னால்<br />
பலர் பித்து பிடித்து அலைய<br />
நீயோ ....!<br />
எந்தஒரு<br />
வியப்பும் இல்லாமல்<br />
வருகிறாய் போகிறாயே...!<br />
என் தேவதையே ....<br />
<br />
படித்து முடித்தவுடன் என்னவென்று நினைப்பதற்குள் கார்த்திக்கை இறுக்கி அனைத்து கொண்டால் சந்தியா. அவனும் கொஞ்சம் திமிறி தான் அவளை அனைத்து கொண்டு இது தான் உனக்கு நான் தந்த பிறந்தநாள் பரிசு என்று கூறினான். எனக்கு நீ போதும்டா நீ மட்டும் போதும் என் லைப் நல்லா இருக்கும் என்று கூறும் போதே ஆனந்த கண்ணீரோடு அதை துடைக்க அவன் மார்பில் புதைந்தாள் சந்தியா.<br />
<br />
கார்த்திக்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை சகஜநிலைக்கு கொண்டு வந்தான். அவளும் அவனிடம் சரி நான் கிளம்புறேன் வீட்டுக்கு, நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே கிளம்ப ஆயத்தமாகிறாள். கார்த்திக்கும் சரி வா நானே ட்ராப் பண்றேன் வீட்ல மாமாவையும் அத்தையையும் பார்த்துட்டு வந்தது போல இருக்கும் என்று கூற அவளும் அவனை சிரித்து கொண்டே வா போலாம் என்று அவன் வண்டியில் ஏறியதும் இவளும் ஏறுகிறாள். <br />
<br />
****************************<br />
<br />
கார்த்திக் தன்னுடைய காதலை எவ்வாறு நந்தினியிடம் தெரிவிப்பது என்று கடந்த ஆறு மாதகாலமாக தடுமாறி கொண்டே இருக்கின்றான்.அவளோ இவனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை அது மட்டும் இல்லாமல் 11ஆம் வகுப்பு படிக்கையில் ஒரு பெண் காதலிக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை பாவம் ஆண்கள் தான் இப்பொழுதெல்லாம் 8ஆம் வகுப்பிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் காதலுக்கு கண் இல்லை என்பது போல வயசும் இல்லை தானே என்று பலதரப்பட்ட இரண்டாம் தர காதல் தமிழ் சினிமாக்களை கண்டு இவனே இவனுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்தே தான் காதலிக்க தொடங்கினான் ஆறு மதங்களுக்கு முன்னே. கார்த்திக்கு இன்றும் ஞாபகம் உள்ளது அவளை கண்ட முதல் நாள் ஜூலை 5 2004 அவனால் யுகம் தாண்டினாலும் அதை மறக்க முடியாது. அன்று இவன் மனதில் ஊற்று எடுத்த வேகம் நாள் ஆக ஆக வீரியம் கொண்டு இவனை காதலில் மூழ்கவைத்தது.<br />
<br />
ஒரு தலை காதல் ஆண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் அனுபவிக்க வேண்டியது. காதல் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அன்பின் ப்ரியம் எல்லாமும் மொத்தமாக நம்மை ஆட்கொள்ளும் காலம் அது. இன்பம் , துன்பம் , துக்கம் , வேதனை , பசி , தூக்கம் என்று எதுவும் தெரியாமல் எந்தஒரு நிகழ்வையும் நம் காதலியை இணைத்தே பொருள் கொள்ள தூண்டும் காலம் அது . கார்த்திக்கும் எப்பொழுதும் நந்தினி நினைவில் அவளுக்காக ஏங்கியும் அவளுக்காக காத்திருந்தும் அவளுக்காகவே பிறந்ததும் போலவே உணர்ந்தான். இரண்டு மணிநேரம் நந்தினிக்காக காத்திருப்பான் அவள் டியூஷன் முடித்து வருவாள் சைக்கிளில் ஒரு நொடியில் இவனை கடந்து போய்விடுவாள். இவனோ அந்த ஒரு நொடி ஏதோ ஒரு யுக வாழ்க்கை வாழ்ந்தது போல பூரிப்பு அடைவான்.<br />
<br />
நந்தினி சைக்கிளில் முன்னே சென்று கொண்டு இருப்பாள் இவனோ அவள் பின்னே அவளை தொடர்ந்து கொண்டே போவான் ஒரு சில நாட்களில் அது இவனுக்கு சங்கோஜமாக இருக்க சிறிது நேரம் பின் தொடர்ந்து விட்டு சாடார் என்று வேகாமாக அவளை முந்தி செல்லும் போது திரும்பி நந்தினி கண்களை பார்ப்பான் அவளும் பார்ப்பாள் இவனிடம் காதல் கட்டுகடங்காமல் இருந்தது அவளிடம் இவனை பற்றிய எண்ணம் கீழ்தரமாகிக் கொண்டே போனது.<br />
<br />
இப்படி தனியாக காதலில் வாழ்ந்து கொண்டு தன் 12ஆம் வகுப்பின் படிப்பை தாரைவார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவளோ இவனை பற்றி அவள் வீட்டில் சொல்லிவிட. அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கு படையெடுத்தார்கள். வழக்கம் போல அன்றும் அவளுக்காக வகுப்பு வெளியே அவளை தேடிக்கொண்டு இருந்தான் அவளோ தன் அம்மாவுடன் பள்ளிக்கு வெளியில் இருந்து உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியவுடன் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இதுவரை அவளுடன் ஒரு வார்த்தை பேசியது இல்லை அவளை பற்றி எங்கும் தவறாக பேசியது இல்லை அவளுக்காக காத்துகொண்டு மட்டுமே இருப்பான் ஒரு நொடி பார்வைக்காக , சற்று அவளை மிதிவண்டியில் பின் தொடர்வான் அதுவும் அவள் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று அதை விட்டு அவளை முந்திசெல்லுவதை வைத்துகொண்டான்.<br />
<br />
ஆனால் அவளோ இவனை பற்றி என்ன சொன்னாலோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வந்தது அழைப்பு கார்த்திக்கு, சென்றவன் அவளின் அம்மா காட்டிய ஆக்ரோஷத்தில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் " டேய் உனக்குலாம் வெட்கமாவே இல்லையா ஒரு படிக்கிற பொண்ண இப்படியா டார்ச்சர் பண்ணுவ , உன் தங்கச்சிய பாலோ பண்ண வேண்டியது தானே இத்யாதி இத்யாதி " என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தவன் பள்ளியில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருந்தது அதனால் அவனின் வார்த்தைக்கும் செவி கொடுக்கப்பட்டது.<br />
<br />
"'சார் என் ஊருக்கு போற வழி அது தான் இவுங்க என்ன தப்பா நினைச்சிட்டு பேசுறாங்க "<br />
<br />
"பொய் சொல்றான் சார் இவன் தினமும் என் பொண்ணு பின்னாடி தான் போவானாம், செருப்பாலயே அடிப்பேன் டா "<br />
<br />
"சார் ப்ளீஸ் நம்புங்க என் மேல எந்த தப்பும் இல்லை "<br />
<br />
இதை அனைத்தையும் அவளும் கண்டு கொண்டு தான் இருக்கின்றாள்.ஒரு முடிவாக இனி இது போல் நடக்காது என்று தலைமை ஆசிரியர் அவர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களும் அதை ஏற்று அவனை முறைத்துவிட்டு எச்சரித்து சென்று விட்டனர். அவர்கள் சென்றபின் கார்த்திக்கின் அப்பாவை அழைத்துவருமாறு கூறுகின்றனர் அவனோ இடி விழுந்தவன் போல அப்படியே உறைந்து போனான். பின் சுதாரித்து கொண்டு கெஞ்சி கூத்தாடி எங்க அப்பா இங்கே வந்தால் எனக்கு சாவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே கதறினான். அதை கண்ட அவர்களும் ஒரு வாய்ப்பு தந்தனர் அவனுக்கு.<br />
<br />
அடுத்தநாள் பள்ளிக்கு வரும் பொழுது புது நோட் வாங்கினான் அதில் அவன் முதல் பக்கத்தில் எழுதியது, <br />
<br />
"நீ இல்லாமல்<br />
என்னால் நினைத்து கூட<br />
பார்க்க முடியவில்லை<br />
அந்த அழகு கற்பனை<br />
தேவதை எப்படி தான்<br />
இருப்பாள் என்று ...?<br />
<br />
விளைவுகள் என்ன என்ன<br />
வரும் உன் அழகை ரசித்தால்<br />
என்று தெரிந்து தான் என்<br />
உறக்கத்தை தொலைக்கின்றேன் ...!<br />
<br />
அழகை ரசிக்க ஆரம்பித்தால்<br />
கவிதை திருட தோன்றும்<br />
கவிதை திருட தோன்றினால்<br />
உன்னை ஒப்பிட தோன்றும்<br />
உன்னை ஒப்பிட்டு பார்த்தால் <br />
கவிதையை திருத்த தோன்றும்<br />
கவிதையை திருத்தி பார்த்தால் <br />
உன்னால் ஒரு கவிதை தோன்றும்<br />
என்று உன்னாலே நானும் எழுதுகிறேன்"<br />
<br />
<br />
"நித்தமும் நிதர்சனமும் நந்தினியே "<br />
<br />
*****************************<br />
<br />
இன்னும் சரியாக இரண்டு மாதமே உள்ளது கார்த்திக்-சந்தியா திருமணத்திற்கு அதுவும் 2014 காதலர் தினம் அன்று. இந்நாளை இவர்களே மிகவும் விருப்பபட்டு தேர்வு செய்தனர் நம்முடைய திருமணம் நடைபெறும் நாளில் உலகில் அன்பின் பரவசம் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்று நினைத்தே முகூர்த்த நாளும் வந்து அமைய இதையே பிடித்து விட்டனர். இருவீட்டாரின் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற போகின்றது.<br />
<br />
சந்தியா எப்பொழுதும் கார்த்திக்கை விட்டு கொடுக்கமாட்டாள் அவன் தான் அவளுக்கு உலகம். இப்படி ஒரு காதலன் கிடைக்க மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவளுக்கே அவள் மேல் ஒரு கர்வம் இருந்தது. சந்தியா கார்த்திக்கை அழைக்க வேண்டும் என்று நினைத்தால், கார்த்திக் அவளை பார்க்க தான் வந்து கொண்டே இருப்பான் என்று இருவருக்கான எண்ணங்கள் ஒற்று போனதாலே, நல்ல காதல் திருமணம் ஆக போகின்றது.<br />
<br />
இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் தான் அவளை துரத்தி துரத்தி காதலித்தான் அதுவும் ஆரம்ப காலத்தில் அவனை சந்தியா மிகவும் கஷ்டபடுத்தி இருக்கிறாள். சந்தியாவின் கல்லூரி இருப்பது தஞ்சாவூர்-புதுகோட்டை சாலையில் ,கார்த்திக்கின் கல்லூரி இருப்பதோ திருச்சி -திண்டுக்கல் சாலையில் .ஆனால் அவளின் மேல் உள்ள காதலினால் இவளை காண இரண்டு மாதம் ஒரு முறை சென்றுவிடுவான் ஆனால் அவளை பார்போதோ இவனை கடந்து போகும் ஒரு நொடி. இப்படியாக அவளை நினைத்து நினைத்து அவளுக்காகவே வாழ்ந்து வந்தான்.<br />
<br />
இதில் இவனின் அனைத்து நண்பர்களும் இவனையும் இவனின் காதலையும் மிகவும் மதித்து வந்தார்கள். அதிலும் சிலர் இவனை அவனின் காதல் கதை கேட்டு இவனையும் பெருமிதம் கொள்ளவைப்பர். 6வருட ஒரு தலை காதல் இவன் கல்லூரி முடித்தும், அவள் கல்லூரி முடித்தும். ஒரு தலையாக இருந்தவனுக்கு காலம் கனிந்து வந்ததது சென்னையில் .<br />
<br />
இவன் சென்னையில் வேலை பார்த்துகொண்டு இருக்கும் பொழுது அவள் கல்லூரி முடித்துவிட்டு அப்பொழுது தான் சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். அவள் நேசிக்கவில்லை என்றாலும் அவளின் அனைத்து விஷயங்களையும் இவன் யார் மூலமாக தெரிந்து வைத்து கொண்டே இருந்தான். சென்னையில் சி.டி.எஸ் நேர்முகத்தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு ஆச்சிரியம் கார்த்திக் நின்று கொண்டு இருந்தது. இம்முறை ஒரு நொடி பார்வை நீண்டுகொண்டே போகின்றது அதுவும் சந்தியா கார்த்திக்கை நோக்கி நடந்து வருகிறாள். இவன் நெஞ்சம் படபடப்பில் துடிக்கின்றது கொளுத்தும் வெயிலில் இவனுக்கு நடுங்குகிறது. அவள் நடந்து வர வர இவன் கண்ணை மூடி ஒருமுறை யோசித்தான் இனியும் உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து இருக்க முடியாது,இப்பொழுதே முடிவு தெரிந்து தான் போகணும் என்று யோசித்து முடிப்பதற்குள்ளே கேட்டது அவனுக்கு ,<br />
<br />
"கார்த்திக்" ...<br />
<br />
கண்களை திறகின்றான் கலங்கி கண்ணீர் வெளியில் வர ஆயத்தமாகின்றது.<br />
<br />
"சென்னைக்கு நேற்று தான் வந்தேன் வீட்டுக்கு போகணும் பயமா இருக்கு என் கூட துணைக்கு வரியா "<br />
<br />
"எப்படி இருக்க சந்தியா"<br />
<br />
"நீ எப்படி இருக்க ? எங்க வொர்க் பண்ற ? "<br />
<br />
ஆட்டோவை மறித்து கொண்டு அதில் ஏறுகிறார்கள்<br />
<br />
" வா போகலாம் வீடு எங்க வேளச்சேரி தான"<br />
<br />
" உனக்கு எப்படி தெரியும் "<br />
<br />
"அதெல்லாம் தெரியும் நீ வா , சென்னைல தான் வொர்க் எல் & டி "<br />
<br />
"நல்லா இருக்கேன் நீ எப்படி இன்னும் அப்படியே இருக்க"<br />
<br />
" எப்படி ??? "<br />
<br />
" என்னைய பத்தி தெரிஞ்சிட்டே எங்க போறேன் வரேன் என்ன பண்றேன்னு " (சிரித்துவிட்டாள்)<br />
<br />
"என்னபன்னாலும் நீ தான் ஒன்னு சொல்ல மாட்டேங்குற"<br />
<br />
"கார்த்திக் நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்"<br />
<br />
" ...."<br />
<br />
"எனக்கு வேலை கிடைச்சவுடன் சொல்லபோறேன் வீட்ல கூட தெரியும் "<br />
<br />
"......"<br />
<br />
"வா வீட்டுக்குள்ள வா அம்மா இருக்காங்க பார்த்துட்டு போ"<br />
<br />
" இல்லை நீ பார்த்துக்க நான் வரேன் "<br />
<br />
"கார்த்திக் ஐ லவ் யு "<br />
<br />
பற்களை கடித்துக்கொண்டு கண்கள் துடிக்கின்றது அவனிற்கு திரும்பி அவளிடம்<br />
<br />
"என்ன சந்தியா ?"<br />
<br />
"ஐ லவ் யு டூ மச் " என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டால்.<br />
<br />
அப்பொழுது அவனுக்கு தோன்றியதை அவன் டைரியில் குறிப்பிட்டான் பின் வரும் எழுத்துகளால்,<br />
<br />
"காதலை அவளும் உணர்ந்தால் என்னை<br />
தன் உயிர் என்று நினைக்கிறாள் ....<br />
<br />
அவளின்<br />
அன்பை நேசித்தேன்...<br />
சுவாசித்தேன்...<br />
உணர்ந்தேன் ...<br />
அனுபவித்தேன்...<br />
<br />
நொடி பொழுது பல மணி பொழுதானது<br />
அவள் இல்லாதபோது ....<br />
பல மணி பொழுது நொடி பொழுதானது<br />
அவளுடன் இருக்கும் பொழுது...<br />
<br />
என் கவிதைகளை அவள் ரசிக்க<br />
அவளை மிக மிக ரசித்தது என் கவிதைகள் ... "<br />
<br />
************************************<br />
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கார்த்திக் நந்தினியை விடுவதாக இல்லை , தொடர்ந்து நேசித்தான் முன்னை விட மிகுதியாக. அவளை பின் தொடர்ந்தான் அவளுக்காக காத்துகொண்டு இருந்தான் ஆனால் இம்முறை நந்தினியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மாறாக அவள் தோழிகள் அவளை கிண்டல் செய்ய தொடங்கினர். கார்த்திக் அவளுக்காக காத்துகொண்டு இருக்கும் போது அந்த பெண்கள் கூட்டம் கடந்து செல்கையில் அத்தனை பேரும் நந்தினியை பார்த்து ஏதோ சொல்லி சிரிக்க, அவள் மட்டும் மௌனமாய் கடந்து செல்வாள். கார்த்திக் இதையும் ஒரு முன்னேற்றமாக எடுத்து கொண்டே சென்றான்.<br />
<br />
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வேறு நெருங்கிக்கொண்டே இருந்தது , "காதல்" திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்துவிட்டு மிகவும் உருகி போனான் வழக்கமான நம் தமிழ் கலாசார மாணவர்கள் போல அவனுள் இன்னும் காதல் ஊறிப்போனது. அவளோ இவனை ஒரு தூசியாக கூட நினைக்காமல் கடந்து சென்று கொண்டே இருந்தால். பள்ளியில் உள்ள பலருக்கு இந்த காதல் கதை தெரிய ஆரம்பித்தது. ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் சொல்லி இவனை பள்ளியில் எச்சரித்தும் மீண்டும் அவளை விடாமல் நேசிக்கும் அவன் யார் என்று பலர் தேடி வந்து பார்ப்பார்கள் கார்த்திக்கை ஆனால் அவனோ அவளின் நினைப்பில் தன்னை போல ஒருவன் பெண்ணை காதலிக்க முடியாது காதல் என்பது என்னிடம் வந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெருமிதத்தில் இருப்பான் .<br />
<br />
ஒருமுறை நந்தினி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தான் வரைந்த படத்தை பின் கசக்கி தூக்கி எறிந்துவிட்டால் (படுகேவலமாக இருந்தது என்று தோழிகள் கூறி இருப்பார்கள் போல) அதை கார்த்திக் எடுத்து தன்னுடைய இயற்பியல் ரெகார்ட் நோட்டிற்கு அட்டையாக போட்டுவிட்டான். அதை அவள் பார்க்க வேண்டும் என்றே தினமும் அதை எல்லோருக்கும் தெரிவது போல எப்பொழுதும் எங்கும் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவள் டியூஷன் 7மணிக்கு முடியும் ஆனால் பள்ளி முடிவதோ மாலை நான்கு மணி வீட்டில் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க இன்னுமொரு டியூஷன் சேர்ந்தான் ,ஏற்கனவே கணக்கு , வேதியல் என்று இரண்டுக்கும் காலை நேரம் 6 டு 8 , இப்பொழுது இதற்க்கு மாலை 6 டு 7.எத்தனை டியூஷன் சென்றாலும் அங்கேயும் நந்தினி நந்தினி நந்தினி தான்.<br />
<br />
தேர்வு நாட்கள் வந்தது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் 11ஆம் வகுப்பு மதியம் தான் தொடங்கும். அந்த நாட்களில் கூட தேர்வு முடித்துவிட்டு அவள் வரும் வரை காத்திருந்து பார்த்த பின்பே செல்லுவான் ஆனால் இம்முறை டைரி மில்க் சாக்லேட் வைத்துகொண்டு காதலை தெரிவிக்க போகின்றேன் என்றே எல்லா தேர்வும் கடந்தது சாக்லேட் தினமும் கரைந்து போனது. இறுதி தேர்வு முடிந்து அவளிடம் சென்றான் இம்முறை அவளும் இவனுக்காக காத்திருப்பது போல அவ்விடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தாள்.<br />
<br />
பதற்றத்துடன் சென்றவன் இன்று சாக்லேட் கையில் இல்லை வாங்க மறந்ததை நினைத்து கையை பிசைய அவள் எதேச்சையாக பார்த்துவிட்டாள்.<br />
<br />
அருகில் சென்று நாந்தினி என்று அழைப்பது அவனுக்குள்ளேயே கேட்டது அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை மீண்டும் ஒருமுறை நந்தினி என்று அழைக்க,<br />
<br />
நந்தினி தன் செருப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.<br />
<br />
இவனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது அன்று அப்பொழுது அவன் நினைத்ததை பின் ஒருநாளில் டைரியில் எழுதி வைத்துகொண்டான்,<br />
<br />
"என் துயரம் நீ அறிய<br />
என் உயிர் பிரிய வேண்டுமோ ??? "<br />
<br />
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது , அடித்து பிடித்து கார்த்திக் தேர்ச்சி பெற்றுவிட்டான் ஆனால் தான் விரும்பும் படிப்பை படிக்க முடியவில்லை வீட்டில் இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறிவிட யோசித்தான், "தன்னுடைய காதலுக்கு நந்தினியின் சம்மதம் மட்டுமே தேவை அவள் இறுதிவரை காதலிக்கவில்லை என்றாலும் கூட நன்கு பொறியியல் துறையில் படித்து சாதித்து பின் நம் வீட்டில் சொன்னால் நிச்சயம் ஒற்றுகொள்வார்கள் ஏன் என்றால் அவளும் எங்கள் ஜாதி தான் அதனால் எதிர்ப்பிற்கு காரணமே இருக்காது ஆக நான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் ஒரு எஞ்சினியராக பொண்ணு கேட்டு போகலாம் " என்று நினைத்து படிக்க ஒற்றுகொண்டான்.<br />
<br />
கார்த்திக் எடுத்த மதிப்பெண்ணிற்கு திருச்சியில் தான் ஜே.ஜே கல்லூரியில் இடம் கிடைத்தது. முதல் முறை தன் சொந்தஊர் திருவையாறை விட்டு வெளியூரில் தங்கி படிக்க போகின்றான். தஞ்சாவூர் கல்லூரியில் தான் படிக்க ஆசை அப்பொழுது தான் தினமும் நந்தினியை பார்க்கலாம் அவளும் கண்டிப்பாக அக்கல்லூரியில் தான் சேருவாள் என்று நினைத்தவனுக்கு இது பேரதிர்ச்சி , இருந்தால் என்ன தான் எங்கே இருந்தாலும் என் காதல் மாறபோவதில்லை என்று முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் அதுவரை வீட்டில் அடைபட்டு கட்டுபாடோடு இருந்தவனுக்கு அந்த சுதந்திரம் பரவசம் கொள்ளவைத்தது.<br />
<br />
கல்லூரி வாழ்க்கை நான்கு வருடங்கள் கார்த்திக்கை புரட்டிபோட்டது அவன் வாழ்க்கையை , அவ்வபோது ஊருக்கு செல்லும் போது நந்தினியை எந்த நேரத்தில் காண முடியும் என்று தெளிவாக முடிவுசெய்துவிட்டே செல்வான் அதுவும் ஒருநொடி பார்வைக்காக. நந்தினி பள்ளி முடித்து எந்த கல்லூரியில் சேருவாள் என்று நினைத்தானோ அதே கல்லூரியில் தான் , தினமும் வீட்டில் இருந்தே சென்று வந்துவிடலாம். அதில் இவனுக்கு அவ்வளவு சந்தோசம் ஏன்??? கல்லூரி விடுதி எப்படி இருக்கும் என்று தான் இவனுக்கு தெரிந்துவிட்டதே. பார்த்தீகளா இங்கே பிறக்கின்றது இவனிடம் உள்ள ஆணாதிக்க திமிர். இப்பொழுது ஊருக்கு வரும் பொழுது அவளை காணும் நேரம் ஒரு நொடியில் இருந்து சில மணித்துளிகள் ஆனது அவள் கல்லூரி பேருந்து வரும் வரை நந்தினியும் இதை கவனிக்க தொடங்கினால். மாதம் மூன்று நான்கு முறை அதில் அவன் வீடிற்கு கூட செல்ல மாட்டான் அவளை காண்பதற்காக மட்டுமே 65மைல்கள் வந்து செல்லுவான்.கல்லூரி நண்பர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் என்று அனைவரும் இவனின் 6வருட காதல் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிகொண்டனர். பல இரவுகள் நினைத்தவுடன் கண்ணீர் வருவதை உணர்ந்தான். காதல் இவன் நெஞ்சில் தெய்வமாக ஆனது.<br />
<br />
அப்பொழுது நந்தினி முகநூளில் நிச்சயம் இருப்பாள் என்று தேடி பிடித்து நட்பு விண்ணப்பம் கொடுத்தான். அவன் தேடியது எல்லாம் விரிவாக இங்கே கூற முடியவில்லை ஏற்கனவே நாவலாக வேண்டியது சிறுகதை ஆகிக்கொண்டு இருக்கின்றது இதில் அதை விரிவாக எழுத முடியவில்லை. நந்தினி என்று தேடினால் குறைந்தது ஒரு 30 அல்ல நாற்பது நந்தினிகள் வரும் அதில் இவனுடைய நந்தினியை பிடித்தான். அன்றைய தினம் முதல் இவனின் பொழுதுபோக்கு பாதி நேரம் அவளின் பக்கத்தையே பார்த்துகொண்டு இருப்பது எப்பொழுது தன்னை நட்பு வட்டத்தில் சேர்ப்பாள் என்றே நினைத்து உருகினான்.பின் ஒரு முடிவாக அவளுக்கு தன்னுடைய மனதில் உள்ளதை எழுதி(டைப்படித்து) உள்டப்பியில் அனுப்ப தொடங்கினான்.<br />
<br />
Conversation started December 15, 2007<br />
karthik<br />
12/15, 1:31am<br />
karthik<br />
please read it....<br />
ஹாய் நந்தினி ,<br />
ரொம்ப கஷ்ட பட்டு உன்னை இதுல கண்டுபிடிச்சேன். நட்பு விண்ணப்பம் தந்து இருக்கேன் ஆனா நீ இன்னு அக்செப்ட் பண்ணலை.நீ என்ன எவ்ளோ வெறுத்தாலும் எனக்குள்ள இந்த 5 வருஷமா எந்த மாற்றமும் இல்லை உன்னை இன்னும் அதிகமா தான் நினைக்க தோணுது. உன்ன நினைச்சி எத்தனை நாள் நான் கலங்கி இருப்பேன்னு எனக்கு தான் தெரியும். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை சத்தியமா சொல்லுறேன் உன்னை தவிர எந்த பொண்னையும் நினைச்சி கூட பார்க்க தோணலை அப்போ 17 வயசுல என்ன நினைச்சி உன்ன காதலிக்க தொடங்கினேனோ இப்போ 21 வயசுல எந்த வித்தியாசமும் தெரியலை நான் உன் மேல வச்சிருக்குற அன்பு மட்டும் என்னைக்கு மாற போறது இல்லை நந்தினி. உனக்காக தான் நான் இந்த படிப்பே படிக்கிறேன் எந்த ஒரு சின்ன விஷயம் கூட தடங்களா இருக்க கூடாதுன்னு .இதை படிச்சி திரும்ப என்ன வெறுத்தாலும் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு எனக்கு எப்படி புரியவைப்பதுனு தெரியலை. இதை சொல்லுறப்போ கூட கலங்குறேன்.என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நந்தினி. நமக்கான லைப் காத்திருக்கிறது .<br />
<br />
"உன்னை நினைத்து நினைத்து<br />
என் நினைவற்று போகும் தருணம்<br />
மிக அருகினில் தான் பெண்ணே ....! "<br />
<br />
என்றும் உன் நினைவுடன்<br />
கார்த்திக்<br />
<br />
December 21, 2007<br />
karthik<br />
12/21, 3:05am<br />
karthik<br />
நந்தினி ப்ளீஸ் என்னை உன் நட்பு வட்டத்துல சேர்த்துக்கோ அந்த சந்தோசமாவுது கொடு. எதாச்சும் எண்ட பேச நினைச்சா ப்ளீஸ் இது தான் என் செல் நம்பர் காண்டக்ட் பண்ணு 9944229004<br />
<br />
March 31, 2008<br />
karthik<br />
3/31, 11:27pm<br />
karthik<br />
நந்தினி how are u...<br />
<br />
April 7, 2008<br />
karthik<br />
4/7, 11:53pm<br />
karthik<br />
hai நந்தினி how are u...my mail password karthiknandhini and my cell code nandhini and official mail password nandhini so anytime i am remember u... i cant forget u...<br />
<br />
April 13, 2008<br />
karthik<br />
4/13, 11:44pm<br />
karthik<br />
காதலின் வலிகள் வாழ்க்கையில் சுமைதான் மனதிற்கு அந்த வலி கூட சுகம்தான்.<br />
<br />
May 10, 2008<br />
karthik<br />
5/10, 3:27am<br />
karthik<br />
i love u nandhini<br />
9944229004 this is my anything tell to me pls call this number am waiting till my life endddddddddddddd<br />
<br />
May 25, 2008<br />
karthik<br />
5/25, 1:35am<br />
karthik<br />
hai nandhini thanks ur's update frist time in my page thats your's chairman victory comment.... today my more and most important day..... pls if u call to my number 9944229004 or karthiknandhi@live.com or karthiknandhi@gmail.com all mail passwords karthiknandhini<br />
<br />
இப்படி உருகி உருகி நேசித்தவனின் கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அவனுடைய முழு தொகுப்பையும் இங்கே தெரிவிக்க முடியவில்லை முன்னே கூறியது போல சிறுகதை என்பதால் பின் வரும் நாவலில் அனைத்தும் வரும் இதோ அவனின் நான்கு வருட கல்லூரி எவ்வாறு கடந்தது என்பதற்கு அவனின் செமஸ்டர் முடிவுகள்.<br />
<br />
முதல் செம் - 5 அரியர்ஸ் எழுதிய 6 தேர்வுகளில்<br />
இரண்டாம் செம் -7 அரியர்ஸ் எழுதிய 7+5=13 தேர்வுகளில்<br />
மூன்றாம் செம் -11 அரியர்ஸ் எழுதிய 6+7=13 தேர்வுகளில்<br />
நான்காம் செம் -14 அரியர்ஸ் எழுதிய 7+11=18 தேர்வுகளில்<br />
ஐந்தாம் செம் - 18 அரியர்ஸ் எழுதிய 6+14=20 தேர்வுகளில்<br />
ஆறாம் செம் -23 அரியர்ஸ் எழுதிய 7+18=25 தேர்வுகளில்<br />
ஏழாம் செம் -15 அரியர்ஸ் எழுதிய 6+23=29 தேர்வுகளில்<br />
எட்டாம் செம் -5 அரியர்ஸ் எழுதிய 3+15=18 தேர்வுகளில்<br />
ஒன்பதாம் செம் -0 அரியர்ஸ் எழுதிய 5 தேர்வுகளில்<br />
<br />
இப்படி இறுதிகட்டத்தில் தான் சுதாரித்து தன் இழக்கை அடைந்தான், அதுவும் பட்டமளிப்பு விழாவின் போது கார்த்திக்கின் துறை மேலாளர் கட்டி தழுவி பாராட்டியது என்றும் அவனால் மறக்க இயலாது. அதில் அவன் பெற்ற வெற்றி காதல் காதல் காதல் அதற்காக மட்டுமே.இதோ கல்லூரி முடித்து தற்பொழுது சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டான். இங்கேயும் அவனின் நினைப்பு நிச்சயம் நந்தினி அடுத்த வருடம் கல்லூரி முடித்து சென்னை தான் வருவாள் என்று.<br />
<br />
கார்த்திகை தீபம் அன்று இப்படி எழுதினான் நந்தினியை நினைத்து<br />
"அகல் விளக்கு கூட<br />
அழகு விளக்காகும்<br />
தேவதை நீ ஏற்றும் தீபத்தில்..."<br />
<br />
****************************<br />
<br />
"கார்த்திக் எங்க இருக்க ???"<br />
<br />
"உன்கிட்ட தான் இருக்கேன் "<br />
<br />
"டேய் விளையாடாத சீக்கிரம் வா வீட்டுக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ண போகணும் "<br />
<br />
"ஹே திரும்பி பாரு சந்தியா"<br />
<br />
"ஹையோடா எப்போடா வந்த"<br />
<br />
"இப்போதான் சரி சரி வா கிளம்பலாம் அம்மு"<br />
<br />
"கொஞ்சுறத பாரு 2மினிட்ஸ்"<br />
<br />
கார்த்திக்கும் சந்தியாவும் கிளம்பி வண்டியில் செல்ல நினைக்கும் போது கார்த்திக் நடந்தே போகலாம் பக்கத்துல தானே என்று இருவரும் நடந்தே செல்லுகிறார்கள் கை கோர்த்து.<br />
<br />
"சந்தியா உனக்கு ஒரு செம்ம சஸ்பென்ஸ் இருக்கு"<br />
<br />
"எனக்கு பிடிக்காதது கண்டிப்பா இருக்காது"<br />
<br />
"ஹே எப்படி சொல்லுற ?"<br />
<br />
"உனக்கு பிடிச்சது எனக்கு தான் பிடிக்குமே"<br />
<br />
"மொக்கை போடாத"<br />
<br />
"ம்க்கும் ச்சீ போடா "<br />
<br />
"நான் எழுதுறேன்னு சொன்னேன்ல ஒரு நாவல்"<br />
<br />
"ஆமா அதுக்குள்ள முடிச்சிட்டியா ??? "<br />
<br />
"இல்லபா அதை ஒரு சிறுகதையா சுருக்கிட்டேன் ஒரு போட்டிக்காக "<br />
<br />
"ஓஹோ சரி அது என்ன கதை ப்ளீஸ் சொல்லுடா"<br />
<br />
"என்னோட லைப் தான் அந்த கதை"<br />
<br />
"ஹை அப்போ நான் இருப்பேன்ல "<br />
<br />
" நீ இன்னும் வரலை "<br />
<br />
"நடிக்காத போடா சரி சரி நம்ம பேர் என்ன வச்சிருக்க"<br />
<br />
"கார்த்திக் - நந்தினி"<br />
<br />
"நந்தினி நந்தினி நல்லா தான் இருக்குடா ஏன் சந்தியா பேர் வைக்கல நீ மட்டும் உன் பேர வச்சிகிட்ட"<br />
<br />
என்று செல்லமாக சண்டைபிடித்து கொண்டே சாலையில் காதல் மழை பொழிந்தால் நந்தினி ச்ச சாரி சந்தியா.</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com1Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-47169149616877272022014-02-07T22:46:00.000-08:002014-05-14T05:06:44.775-07:00பண்ணையாரும் பத்மினியும் - சூப்பர் பீல் குட் மூவி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திரைப்படம் பார்க்கும் பொழுது அதனுள் எளிதாக நாம் உள்நுழைய வேண்டும் அதனோடு பயணிக்க வேண்டும் இறுதியில் அதன் முடிவு நம்மையும் ஈர்க்க வேண்டும் அதை நினைத்து பெருமிதம் கொள்ளவைக்க வேண்டும். அப்படி தான் என்னை உணரவைத்தது நேற்று நான் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfZhpNhX-2LVd-hXWdAh41xrenwjhkzG2CGCiBYrFtAtjRPsXu-m6cHTr2IcF8IvMFInm_Kry1IINc5DAU7JE3qCLUtzhvBUkv_4pq7Asr1Exbst4i8GsGFu9xKwDyWekoBX6yxe5ERAI/s1600/download+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfZhpNhX-2LVd-hXWdAh41xrenwjhkzG2CGCiBYrFtAtjRPsXu-m6cHTr2IcF8IvMFInm_Kry1IINc5DAU7JE3qCLUtzhvBUkv_4pq7Asr1Exbst4i8GsGFu9xKwDyWekoBX6yxe5ERAI/s1600/download+(1).jpg" height="439" width="640" /></a></div>
<br />
90களின் தொடக்கம் நம் கிராமங்களில் விஞ்சான படைப்புகளின் வருகை ஆரம்பித்த நேரம், அப்பொழுது எல்லாம் போன், டிவி என்று அந்த ஊரிலேயே உள்ள பெரிய பண்ணையார் வீட்டில் தான் இருக்கும் அங்கே தான் எல்லோரும் சென்று அதை காண்பதை உபயோகிப்பதை வழக்கமாக செய்வர். அப்படி அதை மற்றவர்கள் உபயோகிக்கும் போது பெருமிதத்துடன் காண்பது அவ்வீட்டில் உள்ளவரின் வழக்கமாக இருக்கும். இந்த அனுபவம் எனக்கும் கூட உண்டு அப்படி அந்த ஊருக்கு முதல் முறை ஒரு சந்தர்பத்தில் கார் அந்த பண்ணையார் வசம் சில நாட்கள் இருக்குமாறு வந்து பின் இறுதிவரை உடன் இருந்ததா என்பது தான் கதை அதை எவ்வளவு சுவாரசியமாக தர வேண்டுமோ அப்படியே தந்து உள்ளனர்.<br />
<br />
விஜய் சேதுபதி படத்திற்கு படம் மனிதர் மேன்மை அடைந்து கொண்டே இருக்கின்றார் , வளர்ந்து வரும் ஹீரோ நிச்சயம் இது போன்ற படைப்புகளில் நடிக்க தயங்கவே செய்வர் உதாரணம் சிவகார்த்திகேயன் அவரின் படங்களில் அவரை சுற்றி தான் களம் இருப்பது போல பார்த்து கொள்கிறார் அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் வி.சே படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லோரின் நடிப்பிற்கும் ஸ்பேஸ் உள்ள கதைகளில் நடித்து தனி ட்ரென்ட் போல உருவாக்கி கொண்டு இருக்கின்றார். உடல் மொழியில் மனிதர் படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பது இவரின் தனித்தன்மையை நன்கு புரியவைக்கின்றது பார்வையாளர்களுக்கு. படத்தில் பண்ணையாரின் மகளிடம் உதவி கேட்க சென்று அக்காட்சியில் விஜய் சேதுபதி வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது. பண்ணையாருடன் சேர்ந்து கொண்டு துளசியை (பண்ணையாரின் .மனைவி ) கலாய்க்கும் இடமும் சுவாரசியமாக இருக்கும். இவரின் காதல் காட்சிகள் திணிப்பு என்றாலும் ஓகே தான். குறையாக தெரியவில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFpc17avZ0QST497M_gC7UC1mpwGpJ5H6yWX05Awi2UdX2g1AfpjxIv3jj5vZCTtUOQll2EJse2mBuNzPq_eykeyFCRktj8YwmWDhUzDWtoLYofP1MY0TrCyE4vrzpvywl3yx9D_XMl5s/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFpc17avZ0QST497M_gC7UC1mpwGpJ5H6yWX05Awi2UdX2g1AfpjxIv3jj5vZCTtUOQll2EJse2mBuNzPq_eykeyFCRktj8YwmWDhUzDWtoLYofP1MY0TrCyE4vrzpvywl3yx9D_XMl5s/s1600/download.jpg" height="380" width="640" /></a></div>
<br />
ஜெயப்ரகாஷ் -துளசி இவர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி தான் படத்தின் மொத்த கதையும். இருவரும் மிக மிக அழகாக நடித்து உள்ளனர். ஒரு படத்தில் ஜெயப்ரகாஷ் நடித்து உள்ளார் என்று தெரிந்தாலே அந்த படத்தின் தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான் அப்படி தான் மூடர் கூடம் படம் எல்லாம் நம்பி போனேன். அவரும் ஒவ்வொரு படத்திலும் அந்த நம்பக தன்மையை என்னுள் அழுத்தமாக நிருபித்து கொண்டே இருக்கின்றார். படம் முழுக்க நடிப்பு வேட்டை நடத்தி உள்ளார். வெள்ளாந்தியாக இவர் கேட்கும் கேள்விகள் , சிரிப்பு ,பார்வை என்று பிச்சு உதறி உள்ளார் , அதுவும் இவர்களுக்கான காதல் காட்சிகளை நமக்கும் உணரவைத்து நம்மை ரசிக்க வைத்த இடத்தில் கிளாஸ் மிக அருமையாக இருக்கும். இவர்களுக்கான அன்னியோன்யம் நிச்சயம் படத்தை காணும் எல்லோருக்கும் பொறமை கொள்ள தான் செய்யும் படத்தின் வெற்றி அதில் தானே உள்ளது.<br />
<br />
பீடையாக வரும் பாலா இப்படத்திற்கு பிறகு நிச்சயம் நகைச்சுவை பாத்திரங்களில் தனி வளம் வருவார். இயல்பான காட்சிகளில் எல்லோரையும் இவர் தான் சிரிக்க வைத்து உள்ளார்.சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் பதிந்து போனது இயக்குனரின் தேர்விற்கு கிடைத்த வெகுமதி அதை படம் பார்க்கும் பொழுது நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.<br />
<br />
இசை ஜஸ்டின் மண் சார்ந்து மண் வாசத்தோடு இருபது வருடம் பின்னே அழைத்து சென்று விட்டது படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது.கோகுலின் ஒளிப்பதிவு உறுத்தவில்லை ஆனாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து இருக்கலாம் சில காட்சிகள் ப்ரேமில் செட் ஆகாமல் இருப்பது என்ன யுக்தி என்று தெரியவில்லை. ஒரு வரி கதையை வைத்து அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக எடுத்தால் அதில் மிக மிக முக்கியமான பங்கு எடிட்டிங்க்கு இருக்கும் அது இந்த படத்தில் மிக அருமையாக இருக்கின்றது . ஸ்ரீகர் பிரசாத்திற்கு சொல்லியா தர வேண்டும் ???<br />
<br />
இயக்குனர் அருண் குமார் தன் முதல் வருகையை மிக அழுத்தமாக பதிவு செய்து அதில் நல்ல வெற்றியையும் பெற்று உள்ளார். இயக்குனராக அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி மிக சிறந்த படைப்பாக கொண்டு வந்து உள்ளார்.குறும் படத்தை எப்படி திரைப்படமாக எடுக்கலாம் என்று பாடமாக எடுபதற்கு படமாக எடுத்து விட்டார் போல , வாழ்த்துக்கள் அருண் குமார்.<br />
<br />
பண்ணையாரும் பத்மினியும் குடும்பத்தோடு நிச்சயம் எல்லோரும் காண வேண்டிய அருமையான சிறந்த திரைப்படம்.<br />
<div>
<br /></div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com7Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-42089325451570771732014-01-24T04:50:00.000-08:002014-05-14T05:06:44.767-07:00கோலி சோடா - யதார்த்த கதாபாத்திரங்களின் கமெர்சியல் படம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
விஜய்மில்டன் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களில் பணி புரிந்து இருந்தாலும் இயக்குனராக அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது வியாபார ரீதியாக தோல்வி படமாகவே அமைந்தது ஆனாலும் நீண்ட வருடங்கள் கழித்து இப்பொழுது இயக்கிய படமே கோலி சோடா அதுவும் அவரின் தயாரிப்பிலேயே துணிவுடன் பசங்க படத்தில் நடித்த பசங்களை கொண்டு எடுத்து உள்ளார்.<br />
<br />
படத்தின் முன்னோட்டங்களில் கூட படத்தை பற்றிய சின்ன டீடேயிளிங் கூறாமல் விட்டது தானோ என்னவோ படம் பார்க்கும் போது அதுத்த காட்சி என்னவாக இருக்கும் எந்தஒரு யூகமும் இல்லாமல் காண முடிந்தது. யதார்த்தமான பாத்திர அமைப்பில் நல்ல ஒரு கமெர்சியல் படைப்பாக வந்துள்ளது.<br />
<br />
கதை என்று கூறி உங்களையும் ஒரு யூகத்துக்குள் சிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. கோயம்பேடு மார்கெட்டில் அவர்களுக்கு அடையாளம் என்று ஏதும் இல்லாத மூட்டை தூக்கும் நான்கு இளம் பையன்கள் அவர்களுக்கான அடையாளங்களை தேடி எளிதாக பெற்று பின் எதிர்பாராமல் அதை பெரும் வலியுடன் இழந்து மீண்டும் பெறுவது தான் கதை. புரியாதவங்களுக்கு படம் பார்க்கும் போது நிச்சயம் புரிந்துவிடும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbga1mg9gQYXTfboefVDZFutXzajfPvrBywqjIpscqvPWV6fNPmfZxHb9yPm7IIRayhrKulYNp1juJjuGskYP3KRTp48mhcbkV-e0_hJxXqAq-UYq0eaIFfVr9VdRi_zKVNH7JDpuZ5rs/s1600/Goli_Soda_Poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbga1mg9gQYXTfboefVDZFutXzajfPvrBywqjIpscqvPWV6fNPmfZxHb9yPm7IIRayhrKulYNp1juJjuGskYP3KRTp48mhcbkV-e0_hJxXqAq-UYq0eaIFfVr9VdRi_zKVNH7JDpuZ5rs/s1600/Goli_Soda_Poster.jpg" height="640" width="469" /></a></div>
<br />
பசங்க படத்தில் நடித்த அந்த முக்கியமான நான்கு சிறுவர்கள் தற்பொழுது இந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வளர்ச்சியை பெற்று இருந்த காரணத்தினாலோ அவர்களையே நடிக்க வைத்துவிட்டனர். அந்த பையன்கள் மிக சிறப்பான நடிப்பை தந்து உள்ளனர் அதுவும் அவர்களுக்கென்று நிறைய மாஸ் சீன்கள் கூட இருக்கின்றது. கதைக்கு ஏற்றவாறு அவைகளும் கச்சிதமாக பொருந்தி போயுள்ளது. அதுவும் சண்டை காட்சிகளில் அனல் தெரிக்கின்றது பசங்களிடம். உணர்வுள்ள காட்சிகளில் அவர்கள் கலங்கும் போது நிச்சயம் நாமும் கலங்கி தான் போகின்றோம்.<br />
<br />
ஆச்சியாக பருத்திவீரன் <span style="background-color: white; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: justify;">சுஜாதா</span> நடித்துள்ளார் மிக யதார்த்தமான அளவான நடிப்பு , தன் பெண்ணையும் உடன் வேலை செய்யும் அந்த நன்கு பசங்களையும் வாஞ்சையுடன் நேசிக்கும் போது நல்ல பாத்திரமாய் நெஞ்சில் பதிந்து போவது சிறப்பு.<br />
<br />
இமான் அண்ணாச்சி பசங்கள் உடன் தங்கி வேலை செய்து கொண்டு அவர்களுக்கு அவ்வப்போது உதவி கொண்டும், முதல் பாதியில் கானா பாலா பாடிய பாடல்கள் இவர் பாடுவது போல வந்து குதுகலிக்க வைத்தது அதுவும் பாடல்கள் கானா பாலாவின் குரலில் மிக அருமையாக இருந்தது. அண்ணாச்சி அனைத்து காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்தாலும் , சில நொடியே பாடலில் வரும் ஒரு காட்சியில் அவரின் சோகத்தை காட்டி உருக்கி விட்டனர்.<br />
<br />
நாயுடுவாக வருபவர் தான் பசங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தருபவர் , மார்கெட்டின் சங்க தலைவராக செல்வாக்குள்ள மனிதராக கச்சிதமாக கதையில் பொருந்தி போகி காட்சிகளுக்கு ஏற்ப மிக சிறப்பாக நடித்து உள்ளார் அவரின் மச்சானாக வரும் மயில் கூட லோக்கல் ரவுடி எப்படி இருப்பானோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார். நாயுடுவின் மனைவிகளாக ஆம் அவருக்கு இரண்டு மனைவிகள் வருபவர்களும் கணவனின் கம்பீரத்தை தாங்களும் ஏற்று அவாறே நடந்து கொண்டனர், அதிலும் மீனாள் சில காட்சிகளில் தூள் சொர்னாக்காவை மிஞ்ச பார்த்துள்ளார்.<br />
<br />
ஆச்சியின் மகளாக வருபவர் அழகு, பசங்களுக்காக உருகுவதும் அந்த வயதுக்கு ஏற்ற காதலில் விழும் போது நம்மையும் விழுங்கிவிட்டார் மென்மையாக. பசங்களின் முதல் தோழியாக வருபவர் அழகில்லை என்று படத்தில் அவளே கூறினாலும் காணும் நமக்கு நிச்சயம் அந்த வலி தெரியும் அதுவும் அதற்காக அந்த பெண் கூறும் பதில் "என்னால தப்பு நடந்து இருந்தா நான் கவலை படனும் , யார் செஞ்ச தப்போ " என்று சர்ச்சில் கூறும் பொழுது செவுட்டடியாய் இருந்தது. பசங்களுக்காக அந்த தோழி முயற்சி எடுக்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவளையும் மதிக்க தொடங்கிவிடுவோம்.<br />
<br />
படத்திலேயே மிக சிறந்த காட்சிகள் என்றால் அவர்கள் பெற்ற அடையாளத்தை எப்படி இழக்கின்றனர் என்று இடைவேளைக்கு முன் வரும் போது , அங்கே தான் படம் கமெர்சியல் என்பதையும் மீறி எல்லோர் ஊர்களிலும் எளியோர்கள் வளியோர்களால் படும் வேதனைகளை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து தனி இடம் பிடிக்கிறது. அதன் பின் அவர்கள் அதை திரும்ப பெற கமெர்சியல் சினிமா என்ற மாயயைக்குள் சிக்கினாலும் நம்மை பரிசோதிக்காமல் இனிதே சென்றவகையில் நல்ல படமாகிவிட்டது.<br />
<br />
வசனம் மிக பெரிய பலம் படத்திற்கு பாண்டியராஜ் பட்டைய கிளப்பிவிட்டார், ஒவ்வொரு வசனமும் யதார்த்த வாழ்வையும் அபத்தங்களையும் சோகங்களையும் பிரதிபலித்தது. அதுவும் ஆச்சியிடம் பசங்கள் தாங்கள் ஏன் இப்படி இருக்கின்றோம் என்று கூறும் இடம் மிக அருமையாக இருந்தது. டாஸ்மாக் சில்மிஷங்கள் என்று பல அபத்தங்களை வசனம் மூலம் போகிற போக்கில் தெளித்துவிட்டு போகிறார். பசங்களுக்கு என்று வரும் மாஸ் காட்சிகளில் அவர்களுக்கு ஏற்றவாறு எளிமையாக கையாண்டு நம்மையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடும் இடத்தில் வெற்றி பெற்று விட்டார் பாண்டியராஜ் வசனகர்த்தாவாக.<br />
<br />
ஒளிப்பதிவு ஷூட்டிங் சென்று படம் பிடித்தது போல் அல்லாமல் கதை களங்களில் கேமரா பதுக்கி வைத்துவிட்டு எடுத்தது போல இருந்த இடத்திலும் இந்த படம் கமெர்சியல் படமா என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியது. பாடல்கள் என்று தனியாக காட்சியை விட்டு இல்லாமல் கதையோடு உணர்ந்து காட்சிகளோடு இனைந்து உறுத்தாமல் இருந்தது. மீண்டும் கூறுகிறேன் கானா பாலா பாடல் அருமை. பவர் ஸ்டார் ஒரு பாடலில் பவராகவே & நடன இயக்குனராக சாம் அன்டேர்சன் உடன் வந்து சிரிக்கவைக்கிறார்.<br />
<br />
படம் முடிந்து கோயம்பேடு மார்கெட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு நிறைவுடன் வந்தேன் . நிச்சயம் இது தவிர்க்க வேண்டிய சினிமா இல்லை ஒரு தடவை ஆச்சும் எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல சினிமா கோலி சோடா , யதார்த்த பாத்திர படைப்பில் கமெர்சியல் கலவை.<br />
<br />
பின் குறிப்பு :<br />
1. மொத்தம் இரண்டு பேர் மட்டும் தான் இன்று பார்த்தோம் அதுவும் நான் சென்று டிக்கெட் எடுக்கும் போது இன்னொருவர் வந்தால் தான் என்று வழக்கம் போல கூறிவிட காத்திருந்து ஒருவர் வந்தார் அவரிடம் ஆர்வமுடன் அண்ணே என்ன படம் என்று பதட்டத்தில் கேட்டு (ஜில்லா வீரம் வேற ஓடிட்டு இருந்தது ) கோலி சோடா என்று கூறியவுடன் திருப்தியுடன் சென்றோம். அவருக்கு இது போல 600 நபர்கள் கொள்ளளவு கொண்ட திரை அரங்கில் வெறும் இரண்டு நபர்கள் மட்டும் காண்பது முதல் முறை போல . நமக்கு மூடர் கூடம் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , என்றென்றும் புன்னகை என்று பழகிடுச்சு. </div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com5Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-10913823985586126252014-01-08T00:08:00.000-08:002014-05-14T05:06:44.714-07:00வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும் இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. </div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYo39DdQyVCE0dxaqVpEQbGmZEyBF0o_1a3fDp2cccMJYSLCAxJ5juroPlu6jZHxrLrOSTUvBl4HocuMOxRGGMS5OHCvjJpR6ibeR7MQMyBI1Gx9iF2_nYAtcCnUzujalPexA6KHgQd5E/s1600/download+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYo39DdQyVCE0dxaqVpEQbGmZEyBF0o_1a3fDp2cccMJYSLCAxJ5juroPlu6jZHxrLrOSTUvBl4HocuMOxRGGMS5OHCvjJpR6ibeR7MQMyBI1Gx9iF2_nYAtcCnUzujalPexA6KHgQd5E/s1600/download+(2).jpg" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiZLX_1enR6Cgz6t8rtprsiYy5V8Av4cXZCGLeYWrgFY4modf0B2_2JJDEPIQ58cXVd_1tVCV7WRG2lY_x-fjQq6VKnmGny7TXxrnY3a3xG-NZwMifF-WexD5D8KWIsMBLQQg6rM74dcg/s1600/Unnidathil-Ennai-Koduthen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiZLX_1enR6Cgz6t8rtprsiYy5V8Av4cXZCGLeYWrgFY4modf0B2_2JJDEPIQ58cXVd_1tVCV7WRG2lY_x-fjQq6VKnmGny7TXxrnY3a3xG-NZwMifF-WexD5D8KWIsMBLQQg6rM74dcg/s1600/Unnidathil-Ennai-Koduthen.jpg" height="382" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDc8ny6sU0pQJfwdjoSPyjrPPa5ARwC8J9lZhH09KMvTyTVZyrY_qXLVBRLrNVZTseQyK-5sr8jxQraQptrhjmG_UY-V6QCKymE1RYBvgNFP0zLyMXGPOMlwgpITfrWUEgKvY9Pgiv5KQ/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDc8ny6sU0pQJfwdjoSPyjrPPa5ARwC8J9lZhH09KMvTyTVZyrY_qXLVBRLrNVZTseQyK-5sr8jxQraQptrhjmG_UY-V6QCKymE1RYBvgNFP0zLyMXGPOMlwgpITfrWUEgKvY9Pgiv5KQ/s1600/images.jpg" height="266" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
ரஜினி-கமல் அடுத்து அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
வில்லன் -பகவதி (2002)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJucsUp6ZqatDqgedLU5whUfDzpwVDastM_MShjMhKrsDXmEsyOi290VeUA-DBjTQ7t2aqcZiFd-m7IeWp0rqWqAvvh_hSLVuQBA_4xS3IXWCtcP0xKmhICUfYIxqdo0Ep6yBk8nHAfMk/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJucsUp6ZqatDqgedLU5whUfDzpwVDastM_MShjMhKrsDXmEsyOi290VeUA-DBjTQ7t2aqcZiFd-m7IeWp0rqWqAvvh_hSLVuQBA_4xS3IXWCtcP0xKmhICUfYIxqdo0Ep6yBk8nHAfMk/s1600/images+(1).jpg" height="268" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அஜித் அவர்கள் வித்தியாச முயற்சி , காதல் , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால் பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
திருமலை -ஆஞ்சநேயா (2003)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK0-tWSbSLnnEi9zVNm3Uk3z2x49A0UJCaHiiGAdxHrEmEIw_JweM5b7LRfTYuKAq_WaxadWZDXSAWlWOsXFWfmhhiMOQrq2MWIi7NaPZ8vsrRw7uSzRsnX41YaYw-SBVJKfki9omrasw/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK0-tWSbSLnnEi9zVNm3Uk3z2x49A0UJCaHiiGAdxHrEmEIw_JweM5b7LRfTYuKAq_WaxadWZDXSAWlWOsXFWfmhhiMOQrq2MWIi7NaPZ8vsrRw7uSzRsnX41YaYw-SBVJKfki9omrasw/s1600/download.jpg" height="206" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
பரமசிவன் - ஆதி (2006)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsAPjpN-DDmxBYlncnMC8298LhSMCwdHiTWouEUwh1h9FKaegVJXHfxte9LihINnuiGM7yWgFldT3wS-cxGlWAh2ncYdHhDImZgnFzGvDtMhMQKQqAnhI546ra-PkGRNJadZMbIhKISJw/s1600/ajith02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsAPjpN-DDmxBYlncnMC8298LhSMCwdHiTWouEUwh1h9FKaegVJXHfxte9LihINnuiGM7yWgFldT3wS-cxGlWAh2ncYdHhDImZgnFzGvDtMhMQKQqAnhI546ra-PkGRNJadZMbIhKISJw/s1600/ajith02.jpg" height="307" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும் மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு இருந்த வரலாறு பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின் தயாரிப்பில் நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு அவரேஜ் படமாக தான் போனதே தவிர நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில் தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
ஆழ்வார் -போக்கிரி (2007)</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGT4svhXMdx0AjeQPU35expkPx8VkpfloUL8SGFX39-575XsN1mmCQUfbHcwgQIzTt24fEYHe7YHXVMrCIdkcy9gtn2DnYZpZSDGki_fGtG5vi7bKqxXdoscbHJXe12Ca_XfBKpA2hySU/s1600/pokkiri.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGT4svhXMdx0AjeQPU35expkPx8VkpfloUL8SGFX39-575XsN1mmCQUfbHcwgQIzTt24fEYHe7YHXVMrCIdkcy9gtn2DnYZpZSDGki_fGtG5vi7bKqxXdoscbHJXe12Ca_XfBKpA2hySU/s1600/pokkiri.jpg" height="226" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற மிக பெரிய வெற்றியை கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா தோல்வியை சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjq5k941001AWXBeDS-Ck_fZ_VxV_77gLoSC7rZugQn5QBPEn9xcGqPA0SmtpVDkVE8w63Vy803Dntfh9hOQwxVb8JQG2xe4qY48ZidLmOQTWaxU1mWJhyphenhyphenRl2XG4ap392SS8BPg2jSQ6Y/s1600/download+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjq5k941001AWXBeDS-Ck_fZ_VxV_77gLoSC7rZugQn5QBPEn9xcGqPA0SmtpVDkVE8w63Vy803Dntfh9hOQwxVb8JQG2xe4qY48ZidLmOQTWaxU1mWJhyphenhyphenRl2XG4ap392SS8BPg2jSQ6Y/s1600/download+(1).jpg" height="320" width="640" /></a></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
அதை தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும் வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே <span style="font-size: 12pt;">தள்ளிவிட்டது. எப்பொழுது</span><span style="font-size: 12pt;">ம்</span><span style="font-size: 12pt;"> சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி தான் அதே நம்பிக்கையில் தான் அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு வித்தியாசமும் தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும்.</span><span style="font-size: 12pt;"> </span></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங் என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித் ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா வெற்றி பின் தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
ஜில்லா- விஜய்க்கு அவசியம் தேவையான முக்கிய வெற்றி </div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி </div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
பின் குறிப்பு :</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.</div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
<br /></div>
<div style="font-family: Calibri, sans-serif; font-size: 16px;">
2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன். </div>
</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com8Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-86970567171457687932013-12-21T09:25:00.000-08:002014-05-14T05:06:44.836-07:00பிரியாணி- வெங்கட் பிரபு டயட் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எப்பொழுதுமே வெங்கட்பிரபு படம் என்றாலே எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு அதை நான் எப்பொழுதுமே நான் விரும்புவேன் , எப்படியும் கண்டுவிடுவேன் கோவா உள்பட எனக்கு பிடித்ததே ஆனால் அதில் ஓரு சூட்சமம் உள்ளது அதை இப்படத்தில் தான் உணர்ந்தேன் அதை உங்களுக்கு இறுதியில் கூறுகிறேன்.அப்படி ஒரு ஆர்வத்தில் இன்று மதியம் 12.00 மணி காட்சி காண சென்றேன் பிரியாணி ஆனால் நான் சென்று டிக்கெட் எடுக்கையில் யாரும் முன் இல்லை அதனால் என்றென்றும் புன்னகை போங்க அப்படின்னு டிக்கெட் கொடுப்பவரு சொல்ல வேற வலி இல்லாம அதை எடுத்து வர, ஒரு ஜோடி கண்ணுல தென்பட கேட்டா பிரியாணி அப்படின்னு சொன்னாங்க. அது போதுங்க அப்படின்னு டிக்கெட் மாற்றி பார்த்தேன் இன்னைக்கு பிரியாணி.<br />
<br />
படம் தொடங்கியதில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தது பின் தேவை இல்லாத விரிவு போல இலுவையோ இழுவை இடைவேளை முன் ஒரு 15 நிமிடங்கள் வரை அப்புறம் சரியான செம்ம ட்விஸ்ட் இடைவேளை முடிந்து ஆரம்பம் ஆர்வமாக தொடங்கியது பின் வழக்கமாக இழுவை தேவை இல்லாத டீடெய்லிங்க் கடைசி 30 நிமிடங்கள் செம்ம ட்விஸ்ட் பரபர செம்ம ஆர்வம் பார்க்கும் பொழுது அங்கே வெற்றி பெற்று விட்டார் வெங்கட் பிரபு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghuwaot9G13XwYAFEcWhOCFPRWN7MAERDrdFu2nuwsfI4IyQadClj2pHTRriixsuHtdvNiFmYmx3ZZIjmGwMI0L-omf1ufSoqnkvQGmpibeoOIWVlOJEdgXTXKGOi8dAZSt1r26bpByg0/s1600/Biryani-Movie-Stills+_10_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="568" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghuwaot9G13XwYAFEcWhOCFPRWN7MAERDrdFu2nuwsfI4IyQadClj2pHTRriixsuHtdvNiFmYmx3ZZIjmGwMI0L-omf1ufSoqnkvQGmpibeoOIWVlOJEdgXTXKGOi8dAZSt1r26bpByg0/s640/Biryani-Movie-Stills+_10_.jpg" width="640" /></a></div>
<br />
பிரியாணி தேடி சென்று அதனால் பெற்ற வினையே படத்தின் கதை. இந்த விஷயம் நாம படம் பார்க்கின்ற போது 30 நிமிடங்களுக்கு மேல் தான் தெரிய வரும் ஆனா அதற்க்கு முன் வந்த காட்சிகளின் முக்கியத்துவம் படத்தின் கடைசி 30 நிமிடங்களில் வெறும் முடிச்சி அவிழ்த்து நம்மக்கு புரிய வைக்கும் பொழுது கண்டிப்பாக வெங்கட் பிரபு திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.<br />
<br />
கார்த்தி தன்னுடைய பங்கை வெகு சிறப்பாகவே செய்து உள்ளார் நடனம் தவிர மற்றும் அவர் ஒரு காட்சியில் சிங்கம் சூர்யா போல வருவது செம்ம காண்டு ஏன் தேவை இல்லாமல் அவருக்கு விளம்பரம். ப்ளே பாய் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். தன் அக்காவை கடத்தி செல்லும் காட்சியில் தன் இயலாமையை நினைத்து வருந்துவது கூட மிக நன்றாக செய்து இருப்பார். ஒரு கதாநாயகனாக தன்னுடைய வேலையை சிறப்பாகவே புரிந்துள்ளார், 3 தோல்வி படங்களை தந்து விட்ட அவருக்கு இப்படம் நல்ல ஒரு ரிலீப் தந்து இருக்கும்.<br />
<br />
பிரேம்ஜி இதுவரை வந்த வெங்கட் படங்களில் என்ன பாத்திரமோ அதையே செம்மையாக செய்து உள்ளார் , ஆனால் இது தான் அவருக்கு கடைசி இதற்க்கு மேல் பொறுமை காக்க நமக்குவழி இல்லை. ஒரே முகபாவனைகள் அப்படியே தயவு செய்து மாற்றுங்கள் வெங்கட் உங்கள் தம்பி என்பதற்காக எல்லாம் பொறுத்து கொள்ள இயவில்லை. ஆனாலும் சில காட்சிகள் நான்றாக தான் இருந்தது, குறிப்பாக சிங்கம் சூர்யா வேடம் அவருக்கு அப்போ கமல் புலி வேடம் பிரேம்ஜி க்கு அது நன்றாகவே இருந்தது மற்றும் சில காட்சிகளின் பாவனைகள்.<br />
<br />
ராம்கி நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அருமையான ரீஎன்ட்ரி, தன்னுடைய வேலையை காண கச்சிதமாக புரிந்து உள்ளார். கதை இவரை மையம் கொண்டே செல்லும் இரண்டாம் பாதியில் ஆனால் இறுதியில் வரும் சஸ்பென்ஸ் செம்ம. ஹன்சிகா ஊறுகாய் அவ்வளவே செம்ம அழகு ஆனாலும் அந்த ஹோட்டல் பாட்டுக்கு வருபவர் செம்மையோ செம்ம ஒரு சாங் ஆனாலும் செம்ம. நாசர் பேசவே இல்லை ஆனாலும் படம் முழுக்க இவரை சுற்றியே. ஒரே வருத்தம் சம்பத் மற்றும் ஜெய் பிரகாஷ் இவர்களை ஏன் இப்படி வீணாக்கினார் வெங்கட் ஸோ சேட். சம்பத்தின் நண்பராக வருபவர் சரியான ட்விஸ்ட் க்கு உபயோகம் இப்படி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.<br />
<br />
<br />
எனக்கு மிக பெரிய ஏமாற்றம் முதல் முறை யுவன்-வெங்கட் தோல்வியே அதுவும் 100வது படத்தில் முதல் பாடல் தவிர வேறு ஒன்றும் மைண்டில் இல்லை ஆனால் வழக்கம் போல பின்னணி கலக்கல். அந்த டிக்கெட் வர பாடல் கூட யோசிச்சாலும் வரலை ச்சும்மா கோடான கோடி பாடு போல வர வேணாம் , என்னமோ போங்க யுவன்.<br />
<br />
கேமரா விறு விறு சரவணன், வெங்கட் படம்னாலே பிச்சி எடுத்துடுவார் போல முதல் காட்சி கார் ஜம்ப் அப்போவே வாய் பிளக்க வச்சிட்டார் அப்புறம் வர அனைத்து சேசிங் காட்சிகளும் மிக அருமையாக செய்து உள்ளார்.<br />
<br />
ஆக பிரியாணி படம் பொருத்தவரை கண்டிப்பாக பார்க்கலாம் , அதுவும் வெங்கட் படம் பிடிக்கும் என்பவருக்கு நிச்சயம் பிடிக்கும். சரோஜா பிடித்தவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும். இரண்டாம் பாதி படம் நன்றாக இருந்தால் பிடிக்கும் என்பவருக்கு கண்டிப்பாக நீங்கள் காண செல்லலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI965zSCF-YKFv0UlNeFtzQUTR0Qoz9FB-JuMnWI5V83KFyjJkRTn2Artwvqvggs8Qr_q8cq7D87S8nal9QwAOsGFb0bPA7VgVk3rbCjJMKEpEc3bXjgJ-KfwuzIj8cHHzCRITzMbl6Cs/s1600/IMG_0011.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI965zSCF-YKFv0UlNeFtzQUTR0Qoz9FB-JuMnWI5V83KFyjJkRTn2Artwvqvggs8Qr_q8cq7D87S8nal9QwAOsGFb0bPA7VgVk3rbCjJMKEpEc3bXjgJ-KfwuzIj8cHHzCRITzMbl6Cs/s640/IMG_0011.JPG" width="496" /></a></div>
<br />
எனக்கு இந்த படத்தில் புதிதாக தோன்றியவை வெங்கட் பிரபுவிடம்<br />
<br />
1. இவருக்கு ஸ்டார்டிங் ப்ரொப்லெம் அப்படியே போக போக பிக் அப் ஆகும் படம் நல்லா கவனிச்சி பார்த்தா முன்ன வந்த இவர் படம் கூட அப்படி தான் இருக்கும் மங்காத்தா கூட.<br />
<br />
2.முதல் பாதியில் பிடிக்க வில்லை என்றாலும் தேவை இல்லாத விரிவாக்கம் தருகிறார் எல்லோருக்கும் முன்ன வந்த கோவா படத்துலையும் அப்படி தான்.<br />
<br />
3. வெங்கட் பிரபு அவருக்கு முன்ன விட பின்ன தான் ரொம்ப பிடிக்கும் போல அதனால தான் அவர் படத்துல முன்னடிய விட பின்னாடிய ரொம்ப ரொம்ப நல்லாவே காட்டுறார். ( நான் முன் பகுதி பின் பகுதிய சொல்லுறேன் நீங்க வேற எதுவையும் நினைக்காதீங்க )<br />
<br />
4.கண்டிப்பா மிக மிக திறமை உள்ளவர் என்பதும் புலப்பட்டது . ரெண்டு மணி நேரம் கடுப்பாகிய படத்தை கடைசி அரை மணிநேரத்தில் எல்லாம் தேவை என்று நமக்கு புரிய வைத்ததில்.<br />
<br />
5. செல்வராகவன் படம் ஆரம்பம் முன் பகுதி மிக பிடிக்கும் என்று எல்லோரும் சொல்லுவர் அது போல இப்போ வெங்கட் பிரபு படம் பின் பகுதி எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லுகின்றனர்.</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com7Singapore1.352083 103.819836000000010.84410649999999987 103.174389 1.8600595 104.46528300000001tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-22662568483978093492013-11-22T12:09:00.001-08:002014-05-14T05:06:44.728-07:00இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முன்குறிப்பு :<br />
<br />
இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான் என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம் திரைப்படத்தின் என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.<br />
<br />
இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன் ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும் மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல் நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiILAZZ918gC5_D5NpVrz0rT1iLkgtRdrhKugmEoxKrMHgssDv4VlV1xJ8RsMspCJTKnmcCrRxCmWYKjV-m_C_OnTHFx2YkhjcK72llThyphenhyphenliC3cWC7b0DhFsrpPThZuKOyAe8NknE1rE7A/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiILAZZ918gC5_D5NpVrz0rT1iLkgtRdrhKugmEoxKrMHgssDv4VlV1xJ8RsMspCJTKnmcCrRxCmWYKjV-m_C_OnTHFx2YkhjcK72llThyphenhyphenliC3cWC7b0DhFsrpPThZuKOyAe8NknE1rE7A/s640/images.jpg" width="468" /></a></div>
<br />
படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.<br />
<br />
ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.<br />
<br />
அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின் கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.<br />
<br />
ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI_W1TfuqLyz50QGsgm0lZcctTYornhw2nDmQuSpApe1V1CTzzaZFQvL6ktS5-H9GRkXK4a6cjjAzylmGhvoSIwDhKQrw_NZRlQiq-VjoECHzHAUJSIp7XZD-Lzoge9wFk70lgd19B2Ig/s1600/1393860_10200169567841947_1378644982_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI_W1TfuqLyz50QGsgm0lZcctTYornhw2nDmQuSpApe1V1CTzzaZFQvL6ktS5-H9GRkXK4a6cjjAzylmGhvoSIwDhKQrw_NZRlQiq-VjoECHzHAUJSIp7XZD-Lzoge9wFk70lgd19B2Ig/s640/1393860_10200169567841947_1378644982_n.jpg" width="640" /></a></div>
<br />
பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.<br />
<br />
இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.<br />
<br />
சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.<br />
<br />
இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்<br />
<br />
<br />
<br />
பின்குறிப்பு :<br />
<br />
1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.<br />
<br />
2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள் என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.<br />
<br />
3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.</div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-79420312073822258782013-11-11T23:05:00.001-08:002014-05-14T05:06:44.814-07:00முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு தரகூடிய தலைப்பு இரண்டாம் உலகம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC3jmbFfKJ30raZJuWX8Qf2ihcM9e_LHb0lvRcvwxoLJkcRRv-WZxI0CXfZL1ICj_f0YSbNIVZwAdLU8C6IMgi9OTLRT7ZdVeIYkWKRmcs8A9UZyrZBdaVuMQIHKxFUosLrV8gBPgsHz8/s1600/Irandam-Ulagam-Movie-Posters11375676934.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC3jmbFfKJ30raZJuWX8Qf2ihcM9e_LHb0lvRcvwxoLJkcRRv-WZxI0CXfZL1ICj_f0YSbNIVZwAdLU8C6IMgi9OTLRT7ZdVeIYkWKRmcs8A9UZyrZBdaVuMQIHKxFUosLrV8gBPgsHz8/s640/Irandam-Ulagam-Movie-Posters11375676934.jpg" width="640" /></a></div>
<br />
இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய முயற்சியை தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும் முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.<br />
<br />
அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/ha26WV2FeVM?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
<br />
இப்படி கூறியதால் செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம் படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,<br />
<br />
FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb6Azgcw-jtEXkyw4UdjaJissYTiVoT7Ihyphenhyphenoc3RybGOHX9nOHPeK7IG4rXDFGCtk2XtgHbXeKAMPlJhZcl-T8nQdnwS9NgkmLcHE4q-K89uzxP_cFaStvyv07NC59EJh4uUk7lJPjN_8o/s1600/Untitled.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="512" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb6Azgcw-jtEXkyw4UdjaJissYTiVoT7Ihyphenhyphenoc3RybGOHX9nOHPeK7IG4rXDFGCtk2XtgHbXeKAMPlJhZcl-T8nQdnwS9NgkmLcHE4q-K89uzxP_cFaStvyv07NC59EJh4uUk7lJPjN_8o/s640/Untitled.png" width="640" /></a></div>
<br />
என்று கிரெடிட் தந்து, ஏன் படத்தில் கூட நிச்சயம் வரும் போல, என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.<br />
<br />
எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும் , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ தொடரவோ முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.<br />
<br />
படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/Vdo9AhfGFpo?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.<br />
<br />
இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட கொஞ்சம் மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.<br />
<br />
செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.<br />
<br />
நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFRUyk9qkTKHJCk6H-6NBc318h5zA2_Fifc1I83xbGYF-xMKoZ6v2Ha6y2103oB9qQLoat89UYcdnSM-f4x65f7Fe9NSz1BChD0S6fN3TzUAw9Qqa77-NmLnSom-5mA-UoPOr2iTOvy84/s1600/irandam-ulagam-release-date-posters.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFRUyk9qkTKHJCk6H-6NBc318h5zA2_Fifc1I83xbGYF-xMKoZ6v2Ha6y2103oB9qQLoat89UYcdnSM-f4x65f7Fe9NSz1BChD0S6fN3TzUAw9Qqa77-NmLnSom-5mA-UoPOr2iTOvy84/s400/irandam-ulagam-release-date-posters.jpg" width="293" /></a></div>
<br /></div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1113999529325818456.post-69698403543875226822013-10-20T23:21:00.001-07:002014-05-14T05:06:44.808-07:00முதல் முயற்சியும் என்னுடைய தேர்வும் -1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
எப்பொழுதும் நான் நினைக்கும் & எதிர்பார்க்கும் ஒரு படம் வெளியாகி அதை குறைந்தது 3 நாட்களுக்குள் எப்படியாவது பார்த்தால் தான், என் மனம் நிம்மதி அடையும் , அதற்காக எந்த ஒரு படத்தையும் என்று கூற முடியாது வெளியாகும் படங்களின் தன்மைகளை பொருத்து அமையும்.<br />
வெளியாகும் முன் தமிழ் திரைப்படங்களை என்னளவில் ஒரு மதிப்பீடு செய்து கொள்ள முடியும், அது அந்த படங்களின் தொழில்நுட்பம் புரியும் நபர்களை முதன்மையாக கொண்டு முக்கியமாக இயக்குனரின் முன் வெளியான படங்களை கண்டு. ஆனால் இவைகளை தாண்டி புதிய படைப்புகளில் அதை வரவேற்க மிகவும் ஆர்வம் கொள்வேன் பல படங்களை அது போல என் விவரம் எட்டி நானாக முதல் நாள் சென்று பல படங்கள் பார்த்துள்ளேன், அவைகளில் பெரும் வெற்றி பெற்றும் உள்ளது (சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு , வெயில் .....) பலர் சில படங்களை அப்பொழுது விட்டு இப்பொழுது கொண்டாடி கொண்டும் உள்ளனர் (சில படங்கள் மொக்கை வாங்கியும் உள்ளேன் ) . குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் அவ்வாறு செய்து நான் முதல் நாள் கண்ட படம் மூடர் கூடம் அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட ஆரண்யகாண்டம் . இந்த இரண்டு படங்களையும் ஏன் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால் இந்த படங்கள் தமிழ் திரைஉலகின் முத்துகள் வேறு தளத்திற்கு கொண்டு சென்றவை. முழுக்க முழுக்க புதுமுகங்களால் புது முயற்சியில் எடுக்கப்பட்டு புதிய அனுபவம் தந்தது என்னை சிறிதும் ஏமாற்றம் அடையசெய்யவில்லை. இப்படிப்பட்ட தமிழ் திரை உலகின் பெருமைமிகு படைப்புகளை திரை ரசிகனாக முதல் நாள் கண்டேன் என்பதில் எனக்குள் ஓர் பெரும் மகிழ்ச்சி.<br />
<br />
அதுபோலவே இப்பொழுது புது முயற்சி கொண்டு வெளிவர போகும்<br />
"சுட்ட கதை" படமும் என்னுடைய எதிர்ப்பார்ப்பில் நிச்சயம் குறைவைக்காது என்றே நம்புகிறேன்.<br />
<br />
ஆரண்யகாண்டம் , மூடர் கூடம் எவ்வாறு மதிப்பீடு செய்து சென்றேன் என்றும் , இப்பொழுது சுட்ட கதை என்ன எதிர்பார்ப்பில் உள்ளேன் ??? ஏன் ??? என்று உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.<br />
<br />
ஆரண்யகாண்டம் -<br />
<br />
ஆரண்யகாண்டம் படம் வருவதற்கு முன் அந்த படத்தை பற்றி எந்தவொரு நுட்பமான செய்தியும் தெரியாது. யுவன் இசை , சரண் தயாரிப்பு இவ்வளவு தான் தெரியும்.யுவனின் இதுபோன்ற முதல்முறை ஒரு இயக்குனர் உடன் பணியாற்றும் பொழுது மிக அருமையாக தன்னால் ஆன முழு உழைப்பையும் தந்து இருப்பார். அவரின் பல வெற்றி படங்களின் இசைகளை சர்வசாதரணமாக இதுபோல வரும் புது இயக்குனர்களின் முதல் படத்தில் கண்டுவிடலாம், (பதினாறு , காதல் சொல்ல வந்தேன் (யுவனிடம் முதல் முறை) , பானா காத்தாடி, தீராத விளையாட்டு பிள்ளை , வாமணன், சிவா மனசுல சக்தி ) இந்த படங்கள் பெரும்பாலும் முற்றிலும் இவர்களின் முதல் படைப்பு இதில் படம் தோற்றாலும் , யுவனின் இசை வெற்றியே ஆகையாலே யுவன் இசை என்றால் ஓர் எதிர்பார்ப்பு என்னிடம் உண்டு. இது முதல் காரணம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOvSo_wMYGp52Zgc5G9a5CZonuxRocC9Prn8nQQBliA03nyf56KAHZ4cM09R4rvEJ0xSMNw6xx2yrMadkDmE8SVheAKTVwNEE9RVzC6x-iqYG99v8rtRHHyCwzvi_UyaxGuDY4I7TzIOE/s1600/Aaranya-Kaandam-Movie-Online.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOvSo_wMYGp52Zgc5G9a5CZonuxRocC9Prn8nQQBliA03nyf56KAHZ4cM09R4rvEJ0xSMNw6xx2yrMadkDmE8SVheAKTVwNEE9RVzC6x-iqYG99v8rtRHHyCwzvi_UyaxGuDY4I7TzIOE/s320/Aaranya-Kaandam-Movie-Online.jpg" width="320" /></a></div>
<br />
ஆரண்யகண்டம் படத்தை காண வேண்டும் என்பதற்கு.<br />
இதை போலவே தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்றால் அவரின் படங்களும் அதுவரையில் எதிர்ப்பார்ப்புடன் தானே இருந்தது , இதே இந்த இருவர்களை நம்பி சென்று ஏமாந்தேன் (அதிலும் யுவனின் இசை நிறைவு செய்தது குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் ). அதற்காக எல்லாம் ஒரு படைப்பாளியை தவிர்த்து விட கூடாது என்பது என்னுடைய கருத்து.<br />
<br />
இவைகளை தாண்டி இப்படத்தின் முன்னோட்டம் கண்டவுடன் முடிவே செய்து விட்டேன் , அதில் அத்தனை ஒரு புதுமை இயக்குனரின் வெளிப்பாட்டை முன்னோட்டத்தில் கண்டவுடனே பிடித்து விட்டது . அவரின் திரை மொழி அவ்வளவு ஈர்த்தது என்னை.<br />
ஆரண்யகாண்டம் பற்றிய என் சிறு பார்வையை இந்த இணைப்பில் காணலாம் <a href="http://arjiththala.blogspot.sg/2013/08/blog-post.html">http://arjiththala.blogspot.sg/2013/08/blog-post.html</a><br />
<br />
மூடர் கூடம் -<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL6OXRzhzAtEIXyxF9tF0rc2sopqczJxJuhcRgIyojpvgT5jnMVlnVjfXlErTe8BBKJxRpq4NKSRv7VoGkZirdnL_XG6iIfBX0brLVMp2e6Kc2VE3GsBdRqsU3GLJeKLNU5Sd5m-hKetM/s1600/Moodar-Koodam_B.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL6OXRzhzAtEIXyxF9tF0rc2sopqczJxJuhcRgIyojpvgT5jnMVlnVjfXlErTe8BBKJxRpq4NKSRv7VoGkZirdnL_XG6iIfBX0brLVMp2e6Kc2VE3GsBdRqsU3GLJeKLNU5Sd5m-hKetM/s320/Moodar-Koodam_B.jpg" width="320" /></a></div>
<br />
இந்த படமும் ஆரம்பம் முதல் பசங்க பாண்டிராஜ் வெளியீடு என்றே விளம்பரபடுத்தியதில் தான் நான் இதை பின் தொடர்ந்தேன். அதுவரையில் வந்திருந்த பாண்டிராஜின் அனைத்து திரைப்படங்களையும் முழுமையாக உள்வாங்கி இருந்தேன் , வம்சம் படத்தில் கூட என்னை மிக கவர்ந்தது அந்த இடத்தின் நேடிவிடியை அப்படியே அச்சு அசலாக காட்டி இருப்பார், அது உண்மை என்றும் பல நண்பர்கள் கூறும் போதே ஆச்சிரியம் அடைந்தேன். அதனால் இவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என்று மனதார நம்பினேன்.<br />
<br />
என்னுடைய அந்த நினைப்பை அப்படியே இன்னும் அதிகமாக்கியது படத்தின் முதல் முன்னோட்டம் அதில் வேறு எதுவும் இடம் பெறாது மூடர் கூடம் என்றால் என்ன என்று ? பொது மக்களிடம் கேட்க பட்டு இருக்கும் அதுக்கு அவரவர் சொல்லும் பதில்கள் இன்றைய நம் ஊரின் தமிழ் மொழியின் நிலையை நமக்கு கூறாமல் நம் பொட்டில் அடித்தது போல இருக்கும். அடுத்து அடுத்து இதே போல வந்த முன்னோட்டங்களும் மொழிபற்றை வலுவாக கூறுவது போல இருந்து இறுதியில் அவர்கள் ஏதோ திட்டம் போடுறாங்க அது என்ன போல வைத்து அதில் இடம் பெரும் வசன உச்சரிப்பு அப்பொழுதே ஒரு வித புதுமையை உணர்த்தியது.<br />
<br />
படமும் எதை நம்பி போனேனோ அதை வட்டியும் முதலுமாக எனக்கு தந்தது , என் ரசனையின் தன்மையை இன்னும் மெருகு ஏற்றியது.<br />
<br />
மூடர் கூடம் பற்றிய என் விரிவான பார்வையை இந்த இணைப்பில் காணலாம் <a href="http://arjiththala.blogspot.sg/2013/09/blog-post_14.html">http://arjiththala.blogspot.sg/2013/09/blog-post_14.html</a><br />
<br />
<br />
சுட்ட கதை -<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgakwHNpLVf6-bUQfeGRaXSHn3cgmHgwnKMFkvrbRdNNwTfgZbfWKuhugW7kvpS0GweaHpp5MvRtNVEJz_ln5hsMI3L5wq59N4r2Ke9fhOeOy7d7esAux7mnZC1iOeLfC8fyjsZYQNtjjE/s1600/9514_480393088741965_857013255_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgakwHNpLVf6-bUQfeGRaXSHn3cgmHgwnKMFkvrbRdNNwTfgZbfWKuhugW7kvpS0GweaHpp5MvRtNVEJz_ln5hsMI3L5wq59N4r2Ke9fhOeOy7d7esAux7mnZC1iOeLfC8fyjsZYQNtjjE/s320/9514_480393088741965_857013255_n.jpg" width="234" /></a></div>
<br />
சுட்ட கதை வரும் 25ம் தேதி வெளியாகின்றது , இப்படம் முழுக்க புதியவர்களின் முயற்சி தான் மேற்கூறிய படங்களை போலவே ,படத்தின் மேகிங் கூட புதியதாக இருக்கும் என்று தெரிகிறது இவர்களின் முன்னோட்டம் மற்றும் விளம்பரம் செய்யும் யுக்தி இவைகளை கண்டால்.<br />
<br />
இப்படத்தின் முன்னோட்டத்தை காண இந்த இணைப்பை காணுங்கள்<br />
<a href="http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o">http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o</a><br />
<a href="http://www.youtube.com/watch?v=E1Pcxlh7kNk">http://www.youtube.com/watch?v=E1Pcxlh7kNk</a><br />
<a href="http://www.youtube.com/watch?v=7Ymsp4edrjY">http://www.youtube.com/watch?v=7Ymsp4edrjY</a><br />
<a href="http://www.youtube.com/watch?v=NkzkWwlgTS8">http://www.youtube.com/watch?v=NkzkWwlgTS8</a><br />
<br />
இப்படத்தின் விளம்பர முறையை காண இந்த இணைப்பை காணுங்கள்<br />
<a href="https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zTfa6HHEPJQ">https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zTfa6HHEPJQ</a><br />
<br />
பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் தொலைகாட்சிகளில் கூவி கூவி விற்கும் ஆண்மை மருந்து என்று அலப்பறை செய்வோரை மேற்கண்ட விடியோவில் கலாய்த்து எடுத்து விட்டனர்.இதுவே இப்படி என்றால் படத்தில் இது போல இன்னும் எதை எல்லாம் துவம்சமோ , இதுவே சொல்லுகிறது இப்படத்தின் புது முயற்சியை.<br />
<br />
இவைகளை பார்க்கும் போதே நிச்சயம் புதிய அனுபவம் தரும் என்ற நம்பிக்கை தருகின்றது ,மேலும் படத்தை பற்றி வரும் முன் செய்திகள் கூட எல்லோரையும் கவரும் விதமாகவே வருகின்றது.<br />
விரிவான "சுட்ட கதை"யின் முன்னோட்டம் என் பார்வையில் இந்த இணைப்பை பாருங்கள் <a href="http://arjiththala.blogspot.sg/2013/10/blog-post_15.html">http://arjiththala.blogspot.sg/2013/10/blog-post_15.html</a><br />
<br />
இது போல மதிப்பீடு செய்து நானும் இது போன்ற படங்களை முதல் கண்டு நமக்குள் நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி அடைந்து கொண்டு அதை மற்றவர்களிடம் கொண்டு செல்கையில் வரும் ஓர்விதமான பெருமிதம் அவ்வளவே. நல்ல படைப்புகளை நாமும் கண்டு அதை வரவேற்கின்றோம் என்ற நப்பாசை. அதனாலே அடுத்த புது முயற்சி கொண்ட படம் என்ற நினைப்பிலும் புதியவர்களை வரவேற்க வேண்டியும் சுட்ட கதை படத்தை எதிர்பார்த்து உள்ளேன். இது போல பெரும்பாலும் முதல் படைப்பாளிகளை கண்டு பிடித்து அவர்களின் திறமையை எளிதில் உணர்ந்து விடலாம் ஆனால் வழக்கமாக நற்பெயருடன் இருக்கும் சிறந்த இயக்குனர்களை நம்பி தான் பல முறை ஏமாந்து விடுவோம். அது பற்றிய விவரங்களை பின்னர் காண்போம்.<br />
<br /></div>
Arjiththalahttp://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com2